Doctor Verified

நீரிழிவு நோயாளிகளே! காலையில் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் செய்யாதீங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க விரும்புபவர்கள், சில காலை தவறுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். இதில் உயர் இரத்த சர்க்கரை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய காலையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இதில் அதிக இரத்த சர்க்கரை கொண்டிருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நீரிழிவு நோயாளிகளே! காலையில் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் செய்யாதீங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய மற்றும் இன்னும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் பலரும் பார்த்து வருகிறோம். WHO அறிக்கையின் படி, தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


மேலும், 25 மில்லியன் மக்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். ஏனெனில், வாழ்க்கை முறை தொடர்பான மருத்துவ நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதே இந்த பிரச்சனைக்கு காரணமாகும். எனினும், வாழ்க்கை மற்றும் உணவுமுறைகளை மாற்றுவதன் மூலம், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம். உண்மையில், பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு நாளும் சில அடிப்படை தவறுகளை மீண்டும் செய்கிறார்கள். இதுவே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது.

குறிப்பாக, காலை நேரத்தில் நீரிழிவு நோயை அதிகரிக்கக்கூடிய சில தவறுகள் உள்ளன. இதில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்னென்ன காலை பழக்கங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து நொய்டா, கைலாஷ் மருத்துவமனை, பிரிவு 71, ஆலோசகர் - நாளமில்லா சுரப்பியியல் டாக்டர் ராகுல் பராஷர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Breakfast Skip செய்கிறீங்களா? இதய நோய், BP, Diabetics அனைத்தும் உங்களை நோக்கி வரலாம்!

நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் தவறுகள்

காலை உணவைத் தவிர்ப்பது

தேசிய சுகாதார நிறுவனம் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இன்றைய காலத்தில் கணவன்-மனைவி இருவரும் வேலை செய்யும் வீடுகளில், மக்கள் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்ப்பார்கள் அல்லது உடனே சாப்பிடத் தயாராக இருக்கும் ஆரோக்கியமற்ற உணவைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அவ்வாறு செய்வது சரியல்ல. உண்மையில், நீண்ட நேரம் காலை உணவைத் தவிர்க்கும்போது, அது உடலில் ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

இதனால் அவர்கள் பெரும்பாலும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கின்றனர். அதே சமயம், உடலில் மன அழுத்தமும் அதிகரிக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், உடலில் சேமிக்கப்பட்ட குளுக்கோஸ் வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு வேகமாக உயர்கிறது. இந்த நிலை சரியல்ல. இது போன்ற சூழ்நிலையில், நீரிழிவு நோய் அபாயமும் அதிகரிக்கிறது.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோய்க்கான ஆபத்தில் உள்ளவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாதது இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது உடல் குளுக்கோஸை திறம்பட பயன்படுத்துவதைத் தடுக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை சமநிலையின்மை அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான், நிபுணர்கள் வழக்கமான நடைப்பயிற்சியை பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க, 10 நிமிட நடைப்பயிற்சி கூட போதுமானதாகும்.

காஃபின் உட்கொள்வது

பலர் காலையில் தேநீர் அல்லது காபி குடிப்பதை விரும்புகின்றனர். உண்மையில், இது உடலுக்கு அவசியம் தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தீங்கு விளைவிக்கக்கூடும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் காஃபின் அல்லது தேநீர் குடிப்பது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இதன் காரனமாக, நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. உண்மையில், வெறும் வயிற்றில் காஃபின் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவுகளில் தற்காலிக அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Care: வகை 1 நீரிழிவு நோயாளிகள் மறந்தும் இதை செய்யாதீர்கள்.!

சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது

பலர் காலை உணவைத் தவிர்க்கின்றனர். இன்னும் பலர் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் உட்கொள்கின்றனர். இவை இரண்டும் ஆரோக்கியமற்றவையாகும். அதன் படி, காலை உணவாக டோஸ்ட் மற்றும் ஜாம் சாப்பிடுவதும் சிறந்ததல்ல. இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தி நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். மேலும், இந்த உணவுகளில் நார்ச்சத்து, புரதம் அல்லது ஆரோக்கியமான கொழுப்புகள் இல்லை. அதே போல, இவை போதுமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதில்லை.

முடிவுரை

பல நேரங்களில், நாம் அறியாமலேயே நாம் காலையில் இது போன்ற பல்வேறு தவறுகளைச் செய்கிறோம். இவை இரத்த சர்க்கரை அளவை மோசமாக்கி நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும். வாழ்க்கை முறை தொடர்பான இந்த நோயைத் தவிர்க்க விரும்புபவர்கள், மேலே உள்ள குறிப்புகளைப் பின்பற்றலாம். இவை நீரிழிவு நோயிலிருந்து வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes care: நீங்க செய்யும் இந்த தவறுகள் இரத்த சர்க்கரை அளவை குறைய விடாமல் தடுக்கும்!

Image Source: Freepik

Read Next

சுகர் லெவலை சரியான நிலையில் வைக்க இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்க.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 22, 2025 18:43 IST

    Published By : கௌதமி சுப்ரமணி