Sat Sep 12, 2026 | 02:01 AM IST

Remedies for Diabetes: சர்க்கரை வியாதியை சட்டென விரட்ட… இந்த 5 மூலிகை இலைகள் போதும்!

நீரிழிவு நோய் வேகமாக வளர்ந்து வரும் நாள்பட்ட நோய்களில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, உலகில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, நீரிழிவு நோய் இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும். நம் நாட்டில், 20-70 வயதுடைய மக்கள் தொகையில் 8.7% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் அதிகரிக்கிறது.

சில சந்தர்ப்பங்களில், நீரிழிவு நோயின் அறிகுறிகள் தீவிர நிலையை அடைந்த பின்னரே தோன்றும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ​​அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், பசி, பார்வை மங்குதல், சோர்வு, எரிச்சல், நீண்ட நாள் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும்.

என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்:

ஏற்ற இறக்கமான இரத்த சர்க்கரை அளவு காரணமாக, நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் சிறுநீரகம், இதயம், நுரையீரல், கண் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, இன்சுலின் மருந்துகளை தினமும் பயன்படுத்த வேண்டும். சில மூலிகைகள் இயற்கையான இன்சுலினாக செயல்பட்டு உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சீந்தில் கொடி இலை:

மரங்கலை தொற்றி பரவக்கூடிய சீந்தில் கொடியின் இலைகள், இன்சுலின் சுரப்பை அதிகரித்து குளுக்கோஸ் உற்பத்தியை தடுத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இதில், சிவப்பு நிற காய்கள் மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொத்து கொத்தாக காய்க்கும்.

இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். நரம்புகள் தெளிவாக இருக்கும். கிளைகளில் சுரப்பி புள்ளிகள் இருக்கும். இது ஆயுர்வேத மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். இதன் இலையை பொடியாக்கி அதனை வெந்நீரில் இட்டு குடிப்பது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

முருங்கை இலை:

முருங்கை இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. முருங்கை இலையில் சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கை இலை சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் முருங்கை இலை பொடி மற்றும் முருங்கை இலை தேநீர் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

வேப்ப இலை:

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் ஆற்றல் வேப்ப இலைகளுக்கு உண்டு. ஒரு NIH மேற்கொண்ட ஆய்வில் வேப்ப இலை ரத்த சர்க்கரை அளவை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Tips For Diabtes: சுகர் குறைய மாட்டேங்குதுன்னு கவலையா?… இதை மட்டும் பின்பற்றி பாருங்க!

இதன் காரணமாக, வேம்பு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்ப இலை மருந்தாக செயல்படுகிறது. வேப்ப இலை சாறு சாப்பிட்டு, வேப்ப இலையை மென்று சாப்பிட்டால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

அஸ்வகந்தா:

அஸ்வகந்தா ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. 2009 ஆம் ஆண்டில், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் மாலிகுலர் சயின்ஸ் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது ஒரு பரிசோதனையை நடத்தியது.

அஸ்வகந்தா வேர் மற்றும் இலைகள் எலிகளுக்கு மருந்தாக கொடுக்கப்பட்ட நிலையில், அவற்றின் சர்க்கரை அளவில் நல்ல மாற்றத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எனவே அஸ்வகந்தா நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அஸ்வகந்தா இலைகளின் சாற்றை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.

கற்றாழை:

நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு கற்றாழை நல்லது. கற்றாழையில் அசிமன்னன் என்ற தனிமம் உள்ளது. இது இரத்தச் சர்க்கரைக் குறைவு குளுக்கோஸைக் குறைக்க உதவுகிறது. கற்றாழையை உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். நீரிழிவு நோயாளிகள் கற்றாழை சாறு குடிப்பது நல்லது.

Image Source: Freepik

Read Next

Black Sesame For Diabetes: இரத்த சர்க்கரையை சட்டென குறைக்க கருப்பு எள் தரும் மகிமைகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content