இன்றைய காலத்தில் பலரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை உள்ளிட்டவற்றால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இதில் சருமம் தொடர்பான பிரச்சனைகளும் அடங்குகிறது. இதனால் சருமத்தில் முகப்பரு, அரிப்பு, எரிச்சல் மற்றும் கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்நிலையில், சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க இயற்கை வைத்தியங்களைக் கையாள்வது அவசியமாகும். அவ்வாறு, மருத்துவ குணங்கள் நிறைந்த எள் எண்ணெய் மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தலாம்.
இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் உதவும் நன்மை பயக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. மேலும் இது தழும்புகள், முகப்பரு, பருக்கள், வெடிப்புகள், சரும வறட்சி, வயதானது மற்றும் மந்தமான சருமம் போன்ற பல்வேறு நன்மைகளிலிருந்து நிவாரணம் பெற மஞ்சளுடன் எள் எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேலும், எள் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
மறுபுறம், மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பல தோல் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. இந்நிலையில், நொய்டாவின் செக்டர் 12 இல் உள்ள ஆர்ச்சிட் ஆயுர்வேத கிளினிக்கின் டாக்டர் ஆனந்த் திரிபாதி அவர்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு எள் எண்ணெய் மற்றும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது? அது சருமத்திற்கு என்ன நன்மைகளை வழங்குகிறது? என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க
சருமத்திற்கு எள் எண்ணெய் மற்றும் மஞ்சளின் நன்மைகள்
மருத்துவர் ஆனந்த் திரிபாதி அவர்களின் கூற்றுப்படி, மஞ்சள் மற்றும் எள் எண்ணெயில் காணப்படும் பண்புகள் பல சருமப் பிரச்சினைகளைப் போக்கவும், ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றன. எனினும், சருமத்தில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சருமத்தை பளபளப்பாக்க
மஞ்சள் மற்றும் எள் எண்ணெய் இரண்டுமே குறிப்பிடத்தக்க ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் கறைகளைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம், சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
வறண்ட திட்டுகளிலிருந்து நிவாரணம் அளிக்க
எள் எண்ணெயில் ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. சருமத்தில் இதைப் பயன்படுத்துவது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குவதற்கும், வறண்ட திட்டுகளைப் போக்குவதற்கும் உதவுகிறது. இவை சருமத்தை மென்மையாக்கவும், சரியான முறையில் பராமரிக்கவும் உதவுகிறது.
பருக்கள் மற்றும் முகப்பருக்களிலிருந்து நிவாரணம் பெற
எள் எண்ணெய் மற்றும் மஞ்சள் இரண்டுமே ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இவற்றைப் பயன்படுத்துவது சருமத்தை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும், பருக்கள் மற்றும் முகப்பருவைக் குறைக்கவும், தழும்புகளை மறைக்கவும் உதவுகிறது.
அரிக்கும் தோலழற்சியிலிருந்து நிவாரணம் அளிக்க
மஞ்சள் மற்றும் எள் எண்ணெய் இரண்டும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். இவற்றைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்கவும், அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. எனினும், இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
வயதானதைத் தடுக்க
எள் எண்ணெய் மற்றும் மஞ்சள் இரண்டிலும் வயதானதைத் தடுக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளைக் குறைக்க உதவுகிறது. இவை வயதான அறிகுறிகளைத் தடுத்து, சருமத்தை இயற்கையாகவே பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 10 ரூபாய் இருந்தால் போதும்... பார்லர் செல்லாமலே முகத்தை பளபளப்பாக்கலாம்!
சருமத்திற்கு எள் எண்ணெய் மற்றும் மஞ்சளை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த ஃபேஸ்பேக் தயார் செய்வதற்கு, 1/4 டீஸ்பூன் மஞ்சளை 2-3 டீஸ்பூன் எள் எண்ணெயுடன் கலந்து, முகத்தில் மெதுவாக தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன் பின்னர், முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
சருமம் உணர்திறன் மிக்கது என்பதால், இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய நினைவில் கொள்ள வேண்டும். மேலும், வேறு ஏதேனும் ஒவ்வாமை அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
முடிவுரை
சருமத்திற்கு எள் எண்ணெய் மற்றும் மஞ்சள் பயன்படுத்துவது ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது வயதானதைத் தடுக்கவும், வறண்ட திட்டுகளைப் போக்கவும், அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. மேலும், பல்வேறு தோல் நிலைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக, ஒவ்வாமை இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: சும்மா பட்டு போன்ற மென்மையான சருமம் வேணுமா? வெறும் 4 பொருள்கள் போதும்.. இப்படி மட்டும் யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 05, 2025 18:11 IST
Published By : கௌதமி சுப்ரமணி