Sat Sep 12, 2026 | 02:48 AM IST

Expert

Ayurveda: ஆயுர்வேத மருந்துகள் உண்மையில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாதா? உண்மை என்ன?

Is it true Ayurvedic Medicine Has No Side Effects: ஆயுர்வேதம் இந்தியாவில் பண்டைய காலங்களிலிருந்து நோய்களைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கை மருந்துகள் மற்றும் மூலிகைகளை கொண்டு செய்யப்படுகிறது. இதை சிலர், பாரம்பரிய மருத்துவத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள், இன்னும் சிலர் அதை அறிவியலுடன் இணைத்தும் பார்க்கிறார்கள்.

ஆயுர்வேத சிகிச்சையைப் பொறுத்தவரை, இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் இதைப் பயன்படுத்துவதற்கு இதுவே முக்கிய காரணம். ஆயுர்வேதத்தில், பாரம்பரிய வைத்தியம், மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்பது உண்மையா என நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஆயுர்வேத சிகிச்சை அல்லது அதன் மருந்துகள் உண்மையில் நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆரோக்யா ஹெல்த் சென்டரின் ஆயுர்வேத டாக்டர் எஸ்.கே.பாண்டே அவர்கள் நமக்கு சில தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம் : Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆயுர்வேத சிகிச்சை முறையில் பக்க விளைவுகள் ஏற்படுமா?

உடலில் உள்ள வாத, பித்த மற்றும் கப தோஷங்களை சமநிலையில் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் நோய் பாதிப்பிலிருந்து தப்பலாம். இந்த முறைதான் ஆயுர்வேத சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதம் என்பது மூலிகைகள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளால், உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தும் முறையாகும்.

இது குறித்து டாக்டர் எஸ்.கே.பாண்டே கூறுகையில், ​​“உடலில் உள்ள நோய்களை அகற்றுவது மட்டுமின்றி, நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் ஆயுர்வேதத்தில் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில், மூலிகைகள் மற்றும் இயற்கை மருந்துகளை உட்கொள்வது மனதையும் உடலையும் ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பொதுவாக, ஆயுர்வேத சிகிச்சை அல்லது ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி அதைப் பயன்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும்".

ஆயுர்வேத மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்வது அல்லது அதிக அளவு உட்கொள்வது உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக நீங்கள் பல கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆயுர்வேத மருந்துகளால், உங்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், ஆயுர்வேத மருந்துகளை உபயோகிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பலர் கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், அது தவறான கருத்து.

இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா.? உங்களுக்கான குறிப்புகள் இங்கே

இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்:

சில ஆயுர்வேத மருந்துகள் மிகவும் லேசானவை. அவற்றை பயன்படுத்துவதால், நமக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் குறைவு. ஆனால், வலுவான டோஸ்களை தவறாக உட்கொள்வது உங்களுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேத மருந்துகளை சீரான மற்றும் சரியான அளவில் உட்கொள்வது தீங்கு விளைவிக்காது.

இந்த பதிவும் உதவலாம் : வாயு தொல்லை இனி இல்லை! மருத்துவரின் பரிந்துரை இங்கே…

ஆயுர்வேதத்தில் மருந்துகளை உட்கொள்வது குறித்து பல வகையான விதிகள் உள்ளன. அந்த விதிகளின்படி மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன், ஆயுர்வேத மருத்துவர் அல்லது வைத்யாவின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

Health Benefit of Acacia: இந்த 4 உடல் பிரச்சனையால் அவதிப்பட்டால் கருவேலமரம் பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content