
திருமணமான தம்பதியரின் கனவுப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பது குழந்தைப்பேறு. ஆனால் வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றங்களால் பலருக்கும் அது கனவாகவே மாறி விடுகிறது. இன்றைய அறிவியல் உலகம் தந்திருக்கும் யுகப்புரட்சி அனைத்தையும் சாத்தியப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. சரியான சிகிச்சைமுறையும், நல்லதொரு கருவுருதல் சிகிச்சை நிபுணம் வாய்த்துவிட்டால் குழந்தைப்பேறு எளிதே. குழந்தைப்பேறு தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் சென்னையைச் சேர்ந்த ஜீவன் மித்ரா கருத்தரித்தல் மற்றும் பெண்கள் நல மையத்தின் தலைமை மருத்துவரான டாக்டர் ரம்யா ராமலிங்கம் அவர்களிடம் உரையாடியதிலிருந்து...
குழந்தையின்மைக்கான பொதுவான காரணிகள் என்னென்ன?
பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, கருக்குழாய் அடைப்பு, என்டோமெட்ரியாசிஸ் சாக்லெட் சிஸ்ட், கருமுட்டை அளவு மற்றும் தரம் குறைவது (Low AMH), கர்ப்பைக்கட்டி போன்றவை குழந்தையின்மைக்கான காரணங்களாக உள்ளன. ஆண்களுக்கு விந்தணு தரம், எண்ணிக்கை குறைவு, விந்தணு இயக்கம், ஹார்மோன் பிரச்சனைகளாலும் இருவருக்கும் பொதுவாக தெரியாத காரணிகள், வாழ்கை முறை (புகை, மது, உடல்பருமன்), மரபணு கோளாறுகள் உள்ளிட்டவை குழந்தையின்மைக்கான பொதுவான காரணிகளாக உள்ளன.

தீர்வுகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?
குறைபாடுகளைப் பொறுத்து தீர்வு அமையும். கருமுட்டை சரியாக உருவாகாதவர்களுக்கு ஓவுலேஷன் இன்டெக்சன் சிகிச்சை அளிக்கப்படும். இது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். மாதவிடாய் ஆன இரண்டாம் நாளிலிருந்து ஆறாம் நாள் வரை மருந்துகள் கொடுக்கப்பட்டு ஃபாலிக்குலர் மானிட்டரிங் செய்யப்படும். முட்டையின் வளர்ச்சியை பொறுத்து இயற்கையான முறையில் கணவருடன் இணையும் போது கருத்தரிக்க வைக்கலாம். கருக்குழாய் அடைப்பு கண்டறியப்பட்டால் லேப்ரோஸ்கோபி மூலம் சரி செய்யலாம். அதன் மூலம் சரியாகாதவர்களுக்கு IVF சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சாக்லெட் சிஸ்ட் (chocolate cyst) இருப்பவர்களுக்கு லேப்ரோஸ்கோபி செய்து எண்டோமெட்ரியாசிஸ் பிரச்சனையை சரிசெய்து இயற்கையாக கருத்தரிக்க வைக்கலாம். அதில் கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அடுத்து IUI, IVF சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும்.
View this post on Instagram
கர்ப்பப்பை கட்டி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் ஹிஸ்ட்ரோஸ்கோபி (Hysteroscopy), லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம் கட்டியை நீக்கி இயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கலாம். விந்தணுக்கள் குறைபாடுகள் இருந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து சரிசெய்து, ஆன்டிஆக்சிடண்ட் மருந்துகள் கொடுத்து விந்தணுக்களின் வளர்ச்சியை ஆராயலாம். இதுதவிர வாழ்க்கை முறை, நொறுக்குத்தீனிகள் தவிர்ப்பது, உடல்பருமன் மற்றும் மன உளைச்சலைக் குறைத்தல், இரவு நல்ல தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை உடலுறவு கொள்ளுதல் மூலமாக இயற்கையாக கருத்தரிக்க வைக்கலாம்.

விந்தணு சோதனை, குழாய் சோதனை மற்றும் கருக்குழாய் சோதனை எல்லாமே இயல்பாக இருந்தும் கருவுறாமல் இருப்பது விவரிக்கப்படாத மலட்டுத்தன்மை (Unexplained infertility) என்று அழைக்கப்படுகிறது. அவர்களுக்கு ஓவுலேசன் இன்டெக்சன் சிகிச்சை முறை மூன்று அல்லது நான்கு சுழற்சிகள் அளித்த பின்னரும் கரு நிற்கவில்லை எனில் IUI சிகிச்சை செய்து பார்க்கலாம்.

IUI ல் கணவரின் விந்தணுக்களைப் பெற்று இயக்கம் (motility) மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஆய்வகத்தில் தயார் செய்யப்பட்டு கருப்பைக்கு நேரடியாக அனுப்பப்படுகிறது. அதிலும் நிற்கவில்லை எனில் IVF, ICSI சிகிச்சை வழங்கப்படும். தீவிரமாக இருக்கும் விந்தணுக் குறைபாடு, PCOS, எண்டோமெட்ரியாசிஸ், விவரிக்கப்படாத மலட்டுத்தன்மை இருப்பவர்கள் நிறைவாக IVF, ICSI சிகிச்சை மேற்கொள்ளலாம். அதை சரியான வயதில், சரியான நேரத்தில் செய்யும் போது வெற்றி விகிதாச்சாரம் அதிகமாக இருக்கும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
- Current Version