Korean Rice Water: கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இது தான் காரணமா.?

  • SHARE
  • FOLLOW
Korean Rice Water: கொரிய பெண்களின் அழகு ரகசியத்துக்கு இது தான் காரணமா.?


How to Make Korean Rice Water for Skin Whitening: பொதுவாக அரிசி நீர் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொரிய பெண்களின் சருமம் மிகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருப்பதை கவனித்திருப்போம். இதனால், அவர்களின் அழகு பராமரிப்புப் பொருள்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருப்பார்கள். ஆனால், இந்த சரும பராமரிப்புப் பொருள்களில் அரிசி நீரும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பல நூற்றாண்டுகளாகவே கொரிய பெண்களின் சரும பராமரிப்பு முறைகளில் இந்த அரிசி நீரும் இணைந்துள்ளது. இவை ஒளிரும் சருமத்தைத் தருவதுடன், பளபளப்பையும் தருகிறது. இதில் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு அரிசி நீரை செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகள் குறித்துக் காணலாம்.

தேவையானவை

  • சமைக்கப்படாத அரிசி - 1 சிறிய கப்
  • தண்ணீர் - 2 கப்

இந்த பதிவும் உதவலாம்: Ragi Face Pack: உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல. சருமத்தையும் பொலிவாக்கும் ராகி. இப்படி பயன்படுத்துங்க.

கொரியன் அரிசி நீர் செய்யும் முறை

  • முதலில் சமைக்கப்படாத அரிசியை எடுத்து குளிர்ந்த நீரில் ஊறவைக்க வேண்டும். இதில் ஏதேனும் அசுத்தங்கள் அல்லது மேற்பரப்பு அசுத்தங்களை அகற்ற உதவுகிறது.
  • இவ்வாறு கழுவிய அரிசியை பாத்திரம் ஒன்றில் சேர்த்து சுமார் 2 கப் தண்ணீரில் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.
  • இந்த நேரத்தில் தண்ணீர் ஒரு மேகமூட்டமான தோற்றத்தில் தெரிய ஆரம்பிக்கும்.
  • இவ்வாறு அரிசி ஊறவைத்த பிறகு விரல்களுக்கு இடையில் தானியங்களை மெதுவாக தேய்த்து, தண்ணீரைக் கிளறி அரிசி மற்றும் தண்ணீரை பிரித்தெடுக்க வேண்டும்.
  • இதில் கிடைக்கும் தண்ணீரில் அரிசியின் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். இந்த நீரை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
  • கூடுதல் நன்மைகளுக்கு நொதித்தல் முறையைத் தேர்வு செய்யலாம். வடிகட்டிய அரிசி நீரை அறை வெப்பநிலையில் 24 முதல் 48 மணி நேரம் வரை வைத்து பிறகு பயன்படுத்தலாம். இம்முறையில் அரிசி நீரில் ஊட்டச்சத்து உள்ளடக்கம் அதிகரித்து, அதிக சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
  • புளிக்க வைத்த பின், குளிர்சாதனபெட்டியில் காற்று புகாத கொள்கலனில் வைத்து அரிசி நீரை சேமிக்க வேண்டும். இந்த குளிர்ந்த வெப்பநிலை புத்துணர்ச்சியைப் பாதுகாப்பதுடன், சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் உணர்வையும் வழங்குகிறது.

கொரியன் அரிசி நீரை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை

சுத்தப்படுத்துதல்

அரிசிநீரை ஒரு காட்டன் பேடைப் பயன்படுத்தி முகத்திற்குத் தடவலாம். இது சுத்தப்படுத்தியாகப் பயன்படுகிறது. அதாவது முகத்தில் இருக்கும் மேக்கப்பின் அசுத்தங்கள், தடயங்களை அகற்ற முகத்தை மெதுவாக துடைக்க வேண்டும். இது மென்மையான மற்றும் இயற்கையான சுத்தப்படுத்தி ஆகும். மேலும் இவ்வாறு சுத்தப்படுத்தும் போது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் நீக்கப்படாது.

இந்த பதிவும் உதவலாம்: Winter Skin Care: குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாம் தடுக்க இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க.

டோனிங்

அரிசி நீரை முகத்திற்கு டோனராகப் பயன்படுத்தலாம். இதில் முதலில் பருத்திப் பஞ்சின் உதவியுடன் அரிசி நீரை மெதுவாக சருமத்தில் பயன்படுத்தவும். டோனிங் செய்வது சருமத்தின் pH-ஐ சமநிலைப்படுத்த உதவுவதுடன், மென்மையான நிறத்தை ஊக்குவிக்கிறது.

குளியலில் சேர்த்தல்

தோல் பராமரிப்பு வழக்கத்தில் அரிசி நீர் குளியலில் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் அரிசி நீரில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களும், முழு உடலையும் அடையும். மேலும், இவை சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

அரிசி நீர் மாஸ்க்

அரிசி நீரை தேன் அல்லது கற்றாழை ஜெல் போன்ற பிற இயற்கை பொருள்களுடன் கலந்து ஃபேஸ்பேக்காக பயன்படுத்தலாம். இதை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இந்த கொரியன் சரும பராமரிப்பு முறைகளைப் போல, அரிசி நீரைப் பயன்படுத்தி சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tulsi Powder for Skin: சருமத்தைப் பொலிவாக்க உதவும் மந்திரப் பொடி. இப்படி பயன்படுத்திப் பாருங்க.

Image Source: Freepik

Read Next

Curd Face Packs: குளிர்காலத்தில் முகம் பொலிவு பெற தயிர் போதும்.. இதை பண்ணுங்க!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version