$
Lifting Newborn Baby: வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தை பிறந்தால், குழந்தையைப் பராமரிப்பதில் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் ஈடுபாடோடு செயல்படுவார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தனிக்குடும்பங்களில் பலர் வாழ்கிறார்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல்முறையாக பெற்றோராக மாறுபவர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி பெரிய புரதில் இருப்பதில்லை என்பதே உண்மை.
தன் காரணமாக, புதிதாகப் பெற்றோராக மாறுபவர்கள் சில தவறுகளைச் செய்கிறார்கள், இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். புதிதாகப் பிறந்த குழந்தையை சரியாகக் கையாளுவதும் பராமரிப்பதும் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.
பிறந்த குழந்தையை தூக்கும் வழிகள்
குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் குழந்தைகளை பராமரிப்பது என்பது மிக முக்கியம். இதற்கான வழிகளை குழந்தைகள் நல மருத்துவர் ஹெச்.பி.சிங் கூறியது குறித்து இப்போது பார்க்கலாம்.

3 மாதங்கள் வரை குழந்தைகளை எப்படி தூக்குது?
தனி குடும்பங்களில் வாழும் மக்கள் குழந்தைகளை வளர்க்கும் அனுபவம் இல்லாதவர்கள், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில். பிறந்த குழந்தையின் பல சமிக்ஞைகளை பெற்றோர்கள் தவறாக புரிந்துக் கொள்கின்றனர். குறிப்பாக தவறாக தூக்குவது. இப்படி செய்வதால் குழந்தையின் கழுத்து மற்றும் கைகளில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.
மூன்று மாத வயதிற்குள் குழந்தையின் தோள்பட்டை மற்றும் கழுத்து அதன் உடல் எடையைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்காது. இத்தகைய சூழ்நிலையில், குழந்தையை தவறாக தூக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தையை தூக்கும் சரியான வழி
குறைந்தது பிறந்த குழந்தைகளை 3 மாத வயது வரை கழுத்து ஆதரவுடன் தூக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார். குழந்தையை உங்கள் மடியில் எடுத்துக்கொண்டு பிறகு உங்கள் மடியில் படுக்க வைக்கலாம்.
குழந்தையின் கழுத்தில் முழுமையான ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் கை குழந்தையின் முதுகு மற்றும் கழுத்தில் சேர்த்து பிடித்தப்படி இருக்க வேண்டும். . குழந்தையின் கழுத்தை ஆதரவின்றி வைக்கக்கூடாது. குறிப்பாக முதல் மூன்று மாதங்களில்.
குழந்தையை தூக்கும் போது, அவரது கழுத்தை சரியான நிலையில் வைக்கவும். குழந்தை கழுத்தை அவரது முழு உடலுடன் நேர்கோட்டில் வைக்கவும். புதிதாகப் பிறந்த குழந்தையை முதல் 3 மாதங்களில் சரியாகக் கையாள வேண்டும் என்பது அவசியம்.
ஏனெனில் இந்த நேரத்தில் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி மிக வேகமாக அதிகரிக்கும். எனவே இந்த காலக்கட்டத்தில் குழந்தையை சரியான முறையில் கையாள வேண்டியது மிக முக்கியம்.
குழந்தைகள் விஷயத்திலும் கர்ப்ப காலத்திலும் சமரசம் என்பதே வேண்டாம் ஏதேனும் அசௌகரியமோ சந்தேகமோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்த முடிவாகும்.
Pic Courtesy: FreePik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version