Benefits of Coffee: ஒவ்வொருவரின் காலையையும் அழகாக காட்டுவது முதலில் அவர்கள் குடிக்கும் டீ அல்லது காபி தான். காலை எழுந்ததும் அருமையான காபி உடன் தொடங்கும் அந்த பொழுது நாள்முழுவதுமே இனிமையாக மாற்றும். சிலர் காபிக்கு அடிமையாக இருப்பார்கள். காலை, மாலை, இரவு என உணவை கூட புறக்கணிப்பவர்கள் இருப்பார்கள் ஆனால் காபியை வேண்டாம் என யாரும் சொல்லமாட்டார்கள்.
காபி குடித்தால் கிடைக்கும் நன்மைகள்
வேலையிலோ, வீட்டிலோ டென்ஷன் ஆகும்போது நேரடியாக மனதும் கையும் தேடுவது காபி கப்பை தான். காபி குடித்த உடனேயே, காஃபின் காரணமாக உடலின் நரம்பு மண்டலம் உற்சாகமடைகிறது. அதனால்தான் எங்கும் இல்லாத ஞானம் நமக்குக் கிடைக்கிறது. சுறுசுறுப்பும் ஏற்படும். சிலருக்கு சரியான நேரத்தில் காபி கிடைக்காவிட்டால் எரிச்சல் தான் வரும். மந்தமும் சலிப்பும் தோன்றும்.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்
ப்ளாக் டீ நன்மைகள்
சிறிதளவு ப்ளாக் காபி குடிப்பதால் மூளை விழிப்புணர்வை அதிகரிக்கும். விளையாட்டு வீரர்கள் காபி குடிப்பதன் மூலம் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என கூறப்படுகிறது. மூளைக்கு உகந்த காபி பார்கின்சன் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. அதேபோல் காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நினைவாற்றலை மேம்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.
சர்க்கரை நோயை தடுக்கும்
பிளாக் காபி குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைந்தது 6 சதவீதம் குறைக்கலாம் என ஆய்வுத் தகவல் கூறுகிறது. காபியில் உள்ள முக்கிய ஆக்ஸிஜனேற்றியான குளோரோஜெனிக் அமிலம் வீக்கத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
மனதை அமைதியாக வைக்கும்
குளிர்காலம் தொடங்கும் முன் மிதமான அளவில் காபி குடிப்பதால் நன்மைகள் உள்ளன. காபி மன ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. தேவைப்படும் போது காபி குடிப்பது உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும்.
காபியில் மட்டுமல்ல காபித் தூளையும் நன்மைகள் அதிகம்
காபி குடிப்பதால் எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற பல நன்மைகள் உள்ளன. காபியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை கண்களின் வீக்கத்தை குறைக்கும். அரைத்த காபித் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் ஒரு பருத்தி உருண்டையை நனைத்து, வீங்கிய கண் பகுதியில் தடவலாம்.
கருவளையம் நீங்க இதை செய்யலாம்
1 டேபிள் ஸ்பூன் காபி பவுடரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக, இருண்ட வட்டங்கள் காணாமல் போகும்.
முகப்பரு நீங்கும்
காபி தூள் முகப்பரு மற்றும் அதை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. இதை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்தால் முகப்பருக்கள் குறைந்தவுடன் சருமமும் இருக்கமாக காணப்படும்.
ஃபேஸ் பேக் செய்யலாம்
1 டேபிள் ஸ்பூன் உளுந்தில் 3 டீஸ்பூன் காபி கலந்து கொள்ளவும். 3 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 2 துளி லாவெண்டர் சேர்த்து நன்கு கலக்கவும். இதை முகத்தில் 15 நிமிடங்கள் தடவி காய்ந்த தண்ணீரில் கழுவலாம்.
காபி மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து, மிருதுவான, பளபளப்பான, தழும்புகள் இல்லாத சருமம் கிடைக்கும். உதடுகளின் கருமையையும் காபி நீக்குகிறது.
அடிக்கடி குடிப்பது நல்லதல்ல
காபி அடிக்கடி குடிப்பது நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பிரபல சுகாதார பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் அடிக்கடி காபி குடிப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!!
எந்தவொரு விஷயமும் ஆசைக்கு எடுத்துக் கொள்வது தவறல்ல அடிமையாகுவது என்பது அதீத விளைவை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் கூடுதல் நிலைகளை சந்திக்கும் போது மருத்துவரை அணுகுவதே சிறந்த முடிவாகும்.
image source: freepik