Plastic Water Bottle: வெயில் நேரத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்போர் கவனத்திற்கு!

வெயில் காலத்தில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் வரக்கூடிய விளைவுகளை பலரும் அறிந்திருப்பதில்லை. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் வரும் விளைவுகள் என்ன, வெயில் காலத்தில் எதில் தண்ணீர் குடிப்பது நல்லது.
  • SHARE
  • FOLLOW
Plastic Water Bottle: வெயில் நேரத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்போர் கவனத்திற்கு!


Plastic Water Bottle: கோடை வெயில் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வெயில் காலத்தில் தண்ணீர் குடிப்பது என்பதை தவிர்க்கவே முடியாது. வெயில் காலத்தில் நீரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் வெப்ப சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதம் போன்ற பல்வேறு வெப்ப தொடர்பான நோய்கள் ஏற்படக் கூடும். இதையெல்லாம் தவிர்க்க நேரம் காலம் பார்க்காமல் சிறிய இடைவெளி விட்டு அவ்வப்போது தண்ணீர் குடிப்பது மட்டுமே ஆகும்.

அனைத்து இடத்திலும் தண்ணீர் கிடைக்கும் என்றாலும் அவை அனைத்தும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரா என்பதை உறுதி செய்ய முடியாது. இதற்காக பலரும் தங்களுடனே தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்கிறார்கள், சிலர் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் தண்ணீரை வாங்கிக் குடிக்கிறார்கள்.

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் குறித்து மறைக்கப்பட்ட உண்மைகள்

அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் சேகரிக்கப்பட்ட எத்தனை நாட்கள் ஆனதோ, அதேபோல் கடையில் கண்டிப்பாக வெப்பம் இருக்கும் அங்கு உள்ள அனைத்தும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுவதில்லை. அதை வெளியே சிறிது காலம் வைத்து குளிர்சாதன பெட்டியில் உள்ள குடிநீர் பாட்டில் காலியான பின்புதான் அதை வைப்பார்கள். அதுவரை பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் வெப்பத்தில் வெளியேதான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுவாகவே பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் வரும் பக்க விளைவுகளை பார்க்கலாம்.

மேலும் படிக்க: உடலில் போதுமான தண்ணீர் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கனுன்னு தெரிஞ்சிக்கோங்க!

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பாதுகாப்பானதா?

தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பாட்டில் நீரில் உள்ள சிறிய பிளாஸ்டிக் துகள்கள் அல்லது நானோபிளாஸ்டிக்களை ஒரு புதிய நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, ஆராய்ச்சியாளர்கள் முன்பு நினைத்ததை விட அதிகமான நானோபிளாஸ்டிக்கள் இருப்பதாகக் கண்டறிந்தனர், அதாவது லிட்டருக்கு 110,000 முதல் 400,000 வரை, சராசரியாக 240,000 வரை இருந்துள்ளது.

plastic-water-bottle-side-effects

  • பொதுவாகவே பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயமாகும்.
  • நானோபிளாஸ்டிக் என்பது 0.1 μm க்கும் குறைவான விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் ஆகும்.
  • மறுபுறம், மைக்ரோபிளாஸ்டிக் என்பது 0.5 மிமீ விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துண்டுகளைக் குறிக்கிறது.
  • மேலும் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் காலப்போக்கில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மைக்ரோபிளாஸ்டிக்ஸாக சிதைந்துவிடும்.
  • இது தண்ணீரை மாசுபடுத்தும் மற்றும் பிளாஸ்டிக்குகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • இந்த மைக்ரோபிளாஸ்டிக்கள் குடிநீர் மூலமாகவும் மனித உடலுக்குள் நுழையலாம், இருப்பினும் சுகாதார பாதிப்புகள் பொறுத்தவரை இதுகுறித்து எந்த தகவலும் இல்லை.

கூடுதலாக, பிளாஸ்டிக் பாட்டில்கள், குறிப்பாக குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்டவை அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிக மிக தீங்கு விளைவிப்பவை ஆகும். மேலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை தண்ணீரில் கசியவிட வாய்ப்பிருக்கிறது, குறிப்பாக வெப்பம் அல்லது சூரிய ஒளியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கும் போது.

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தீமைகள்

பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக, அதில் உள்ள ரசாயனங்களுடன் உடல் நேரடித் தொடர்பு கொள்கிறது. இதன் காரணமாக உடல் பல நோய்களால் சூழப்படுகிறது. பிளாஸ்டிக்கில் காணப்படும் ஈயம், காட்மியம் மற்றும் பாதரசம் போன்ற இரசாயனங்கள் உடலில் புற்றுநோய், இயலாமை, நோயெதிர்ப்பு மண்டலத்தில் கோளாறுகள் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றன.

plastic-water-bottle-summer

ஹைப்போ தைராய்டிசத்திற்கான காரணம்

பிபிஏ அதாவது பிஸ்பெனால் ஏ தைராய்டு ஹார்மோன் ஏற்பியின் அளவைக் குறைக்கிறது. இது ஹைப்போ தைராய்டிசம் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் நம் உடலுக்கு வேறு வழிகளிலும் தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க: இது தெரிஞ்சா இனி நீங்க கடையில மஞ்சள் தூள் வாங்க மாட்டீங்க.. ஈஸியான வழியில் வீட்டிலேயே செய்யலாம்

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு பதில் இதை பயன்படுத்துங்க

காப்பர் வாட்டர் பாட்டில்

துருப்பிடிக்காத எஃகு பாட்டில்களை பயன்படுத்துங்கள். இவை மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும், நீடித்ததாகவும் இருக்கும், மேலும் தண்ணீரில் ரசாயனங்கள் கசியாது. அவை பானங்களை நீண்ட நேரம் குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ வைத்திருக்க உதவும். அதாவது அதன் தன்மையிலேயே அப்படியே வைத்திருக்கும். அதேபோல் இதை சுத்தம் செய்வது ஒப்பீட்டளவில் எளிதானது.

கண்ணாடி பாட்டில்கள்

கண்ணாடி பாட்டில்கள் நுண்துளைகள் இல்லாதவை, சுவைகள் அல்லது நாற்றங்களைத் தக்கவைக்காது, மேலும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இல்லாதவை. இருப்பினும், அவை பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத எஃகு பாட்டில்களை விட உடையக்கூடியவை மற்றும் கனமானவை. எனவே இதை கவனமாக கையாள வேண்டும்.

பிபிஏ இல்லாத பிளாஸ்டிக் பாட்டில்கள்

நீங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்த விரும்பினால், பிபிஏ இல்லாதவை என்று பெயரிடப்பட்டவற்றைத் தேடுங்கள். அவற்றில் இன்னும் பிற இரசாயனங்கள் இருக்கலாம் என்றாலும், அவை பிபிஏ கொண்ட பாட்டில்களை விட பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன.

pic courtesy: Meta

Read Next

Summer Nosebleeds: வெயில் காலத்தில் மூக்கில் இருந்து திடீரென இரத்தம் வருவது ஏன் தெரியுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version