இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லும் போது பிளாஸ்டிக் பாட்டிலில் கிடைக்கும் தண்ணீரையே வாங்கி பயன்படுத்துகின்றனர். அதன் பின்னர், அந்த பாட்டில்களை வீட்டில் இருக்கும் போதும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வாறே, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்.
இதில் புது தில்லியில் உள்ள PSRI மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் ஹீமாட்டாலஜிஸ்ட் மற்றும் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அமித் உபாத்யாய் அவர்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது உண்மையில் புற்றுநோயை ஏற்படுத்துமா, அதன் தீமைகள் என்ன என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது?
உண்மையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களை தயாரிப்பதற்கு பிஸ்பெனால் ஏ ('பிபிஏ') எனப்படும் ஒரு ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பான கேன்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களில் பிபிஏ ஒரு பூச்சாகக் காணப்படுகிறது. தண்ணீர் பாட்டிலை வெயிலிலோ அல்லது வெப்பத்திலோ வைக்கும்போது, இந்த இரசாயனம் தண்ணீரில் கரையக்கூடும். இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Plastic Water Bottle: மக்களே உஷார்… பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த நோய் எல்லாம் வருமாம்!
ஏனெனில் இந்த ரசாயனம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தராது. எனவே தான் பிளாஸ்டிக்கை அதிகமாகப் பயன்படுத்தும்போது, அது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறே, இந்த இரசாயனங்கள் நமது உடலில் புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்று பலர் நம்புகின்றனர். இப்போது இது குறித்து மருத்துவர் என்ன குறிப்பிட்டுள்ளார் என்பதைக் காணலாம்.
பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் புற்றுநோய் வருமா?
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் நாம் தண்ணீர் குடிக்கும் போது, அதில் காணப்படக்கூடிய மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களான மைக்ரோ பிளாஸ்டிக் அல்லது நானோ பிளாஸ்டிக்கை நம்மையே அறியாமல் எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு இவற்றைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது, அவை சுவாசக் குழாய் வழியாகவோ அல்லது உணவு வழியாகவோ உள்ளே சென்றாலும், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர் அமித் உபாத்யாய் கூறுகிறார்.
மேலும் அவர், “நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி பேசினால், என்னபிளாஸ்டிக் பாட்டில்பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் புற்றுநோய் வருமா என்று கேட்டால், பதில் இல்லை. பிளாஸ்டிக் பாட்டில்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் மட்டும் புற்றுநோய் வரும் என்பது உண்மையல்ல” என்று கூறுகிறார்.
பிளாஸ்டிக் பாட்டில்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள்
பிளாஸ்டிக்கில் காணப்படும் இரசாயனங்களின் காரணமாக, நம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்னும் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும். அவை,
- நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல்
- நீரிழிவு நோய் ஆபத்து
- இதய நோய்களின் ஆபத்து
- கல்லீரல் பாதிப்பு
- பிளாஸ்டிக் மாற்றுகள்
இந்த பதிவும் உதவலாம்: தினமும் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!
இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க பிளாஸ்டிக்கிற்கு பதிலாக, சில பாதுகாப்பான பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- செம்பு பாட்டில்
- கண்ணாடி பாட்டில்
- எஃகு பாட்டில்
முடிவு
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று பலரும் நம்புகின்றனர். எனினும், பிளாஸ்டிக் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது, ஆனால் புற்றுநோய் மட்டுமல்ல. எனினும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும்போது, அந்த ரசாயனம் மெதுவாக நம் உடலை அடைந்து நோய்களை ஏற்படுத்தக்கூடும்.
நீரிழிவு, இதய பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, பிளாஸ்டிக்கிற்கு பதிலாக செம்பு பாட்டில், கண்ணாடி பாட்டில் அல்லது எஃகு பாட்டில் போன்ற பல பாதுகாப்பான பொருட்களைப் பயன்படுத்தலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது. நீண்ட நேரம் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்திய பிறகு, ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Plastic Water Bottle: வெயில் நேரத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வாங்கி குடிப்போர் கவனத்திற்கு!
Image Source: Freepik