Diwali Safety Tips: தீபாவளி நேரத்தில் உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இது கட்டாயம்!

தீபாவளி திருநாளின் கொண்டாட்டங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்கான வழிகளை விரிவாக பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Diwali Safety Tips: தீபாவளி நேரத்தில் உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இது கட்டாயம்!


Diwali Safety Tips: பண்டிகைகளில் முக்கிய பண்டிகையான தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி என்றால் பட்டாசுகள், இனிப்புகள், பலகாரம் என ஒரே கொண்டாட்டம்தான். தீபாவளி என்பது பெரியவர்களை விட குழந்தைகளின் பண்டிகை. தீபாவளியன்று, சிறு குழந்தைகள் புதிய ஆடைகள் அணிந்து, விதவிதமான இனிப்புகளை சாப்பிட்டு, பட்டாசுகளை வெடித்து மகிழுவார்கள்.

குழந்தைகளை பட்டாசுகள் மற்றும் எதிரொலிக்கும் ஒலிகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இந்த பண்டிகையின் போது சிறிய கவனக்குறைவு கூட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். தீபாவளி தினத்தன்று குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைப்பது, அதற்கு என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என பார்க்கலாம்.

தீபாவளியன்று குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான வழிகள்

diwali-crackers-safety

பட்டாசு வெடிக்கும் போது கவனம் தேவை

குழந்தைகளை ஆபத்தில் இருந்து பாதுகாக்க, பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். குறைந்த புகை மற்றும் குறைந்த சத்தம் கொண்ட பட்டாசுகளை மட்டுமே குழந்தைகள் வெடிக்க அனுமதியுங்கள். சத்தமில்லாத அல்லது ஆபத்தான பட்டாசுகளை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.

குழந்தைகளின் ஆடைகளை கவனிக்க வேண்டியது முக்கியம்

தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளை பருத்தி ஆடைகளை மட்டுமே அணியச் செய்யுங்கள். பருத்தி ஆடைகளை விட செயற்கை ஆடைகள் வேகமாக தீப்பிடிப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்டாசுகள் மற்றும் விளக்குகளை ஏற்றும் போது, குழந்தைகளுக்கு தளர்வான ஆடைகளை அணியச் செய்யுங்கள். இதனால் தீப்பிடிக்கும் ஆபத்து குறையும்.

மெழுகுவர்த்தி மற்றும் ஊதுபத்தி

வெடி வெடிக்கும் போது விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். ஊதுபத்தி வைத்து வெடி வெடிக்கச் செய்யும் போது அது கண்களிலோ, உடலிலோ படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே அவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

தயார் நிலையில் ஒரு வாளி தண்ணீரை வைத்திருக்கவும்

தீபாவளியின் போது பட்டாசுகள் மற்றும் விளக்குகள் வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு முன்கூட்டியே தயாராகுங்கள். இதற்கு வீட்டில் ஒரு வாளி தண்ணீர் அல்லது மணலை வைத்திருங்கள். முடிந்தால், தண்ணீரையும் மணலையும் நிரப்பிய ஒரு வாளியை வீட்டிற்கு வெளியேயும் சுற்றிலும் வைக்கவும்.

மருத்துவப் பெட்டியைத் தயாரிக்கவும்

விபத்து மற்றும் அவசரநிலையைத் தடுக்க மருத்துவப் பெட்டியை முன்கூட்டியே தயார் செய்யவும். பர்ன் ஆயின்மென்ட், பேண்டேஜ்கள், ஆண்டிசெப்டிக் க்ரீம் ஆகியவற்றை மருத்துவப் பெட்டியில் வைத்திருங்கள், தேவைப்பட்டால் உடனடியாக அதைப் பயன்படுத்தலாம்.

தீபாவளியன்று, அதிகப்படியான பட்டாசுகள் மாசுபாட்டை அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை குழந்தைகளுக்கு விளக்கவும்.

பட்டாசு வெடிக்கவே வேண்டாம் என்று கூறிவிட முடியாது, ஆனால் நமக்கான அளவோடு இருப்பது நல்லது. காரணம், பட்டாசு உற்பத்தியை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். பட்டாசு வெடிக்கும் ஏற்படும் மாசு, சத்தம், பிறருக்கு ஏற்படும் பாதிப்பு, மருத்துவமனை, நோயாளிகள் அருகில் இருக்கிறார்களா என்பதையும் அறிந்திருக்க வேண்டியது முக்கியம். அதேநேரத்தில் பட்டாசை பாதுகாப்பாக வெடித்து தீபாவளியை கொண்டாடுங்கள்.

image source: freepik

Read Next

Children Vision Problem: குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் கண்கள் பிரச்சனை! பெற்றோர்களே உஷார்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்