World Sight Day 2024: இந்த 7 பழக்கவழக்கம் உங்கள் கண்களை பாதுகாக்கும்!

  • SHARE
  • FOLLOW
World Sight Day 2024: இந்த 7 பழக்கவழக்கம் உங்கள் கண்களை பாதுகாக்கும்!


ஒரு மனிதனுக்கு கண்பார்வை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். ஆனால், டிஜிட்டல் தலைமுறையில் பார்வைக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. சிறு வயதில் இருந்தே நாம் வளர வளர, நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நூறு குழந்தைகளில் இரண்டு முதல் ஐந்து குழந்தைகள் கண் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது.

கண் ஆரோக்கியம் மற்றும் பார்வை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று உலக பார்வை தினம் கொண்டாடப்படுகிறது. கண்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் கண்களைப் பாதுகாக்கும் பழக்கவழக்கங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்…

ஆரோக்கியமான உணவு:

கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். இவை வயது தொடர்பான மாகுலர் சிதைவு (AMD), கண்புரை போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

உறக்கம்:

கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நிம்மதியான தூக்கம் அவசியம். தூக்கத்தை அலட்சியப்படுத்தினால், கண் வறட்சி, கண் பிரச்சனை, பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

கண் பரிசோதனை:

உங்கள் கண்களை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு வருடத்திற்கும் ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். இதன் மூலம், கண் பிரச்சினைகள் மற்றும் பார்வைக் கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்.

தண்ணீர்:

கண்கள் ஆரோக்கியமாக இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். தண்ணீர் குடிப்பது கண்கள் வறண்டு போகாமல் லூப்ரிகேஷனுடன் பராமரிக்க உதவுகிறது. உங்கள் கண்களைப் பாதுகாக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

சன்கிளாஸ்:

வெளியே செல்லும் போது புற ஊதா கதிர்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சன்கிளாஸ்களை அணியுங்கள். இதனால், சூரிய ஒளியால் ஏற்படும் கண்புரை மற்றும் கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

டிஜிட்டல் தவறு:

நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பது கண் சோர்வு, கண் வறட்சி மற்றும் பார்வைக் கோளாறுகளை ஏற்படுத்தும். உங்கள் கண்களுக்கு ஓய்வு அளிக்க டிஜிட்டல் திரைகளுக்கு ஓய்வு கொடுங்கள்.

இதை செய்யக்கூடாது:

அழுக்கு கைகளால் கண்களைத் தொடக்கூடாது. அசுத்தமான கைகளுடன் கண் தொடர்பு கொள்வது கண் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது.

ஸ்மோக்கிங்:

புகைபிடித்தல் கண்புரை, மாகுலர் சிதைவு மற்றும் கண் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைபிடிப்பதால் கண்கள் வறண்டு போகும். கண் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Image Source: Freepik

Read Next

Fruits in Monsoon: மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி டபுளாக… இந்த பழங்கள சாப்பிடுங்க!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்