இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த வரிசையில், நீரிழிவு நோயானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. நீரிழிவு நோயைப் பொறுத்தவரை இரத்த சர்க்கரை அதிகரிப்பு, இரத்த சர்க்கரை குறைவு என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இரத்த சர்க்கரை அதிகரிப்பு மற்றும் குறைவு என இரண்டுமே உடலில் பல்வேறு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக மூளை மூடுபனி பிரச்சனை ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், உடலில் இரத்த சர்க்கரை குறைவதால் மூளை மூடுபனி தோன்றக்கூடும். இதில் குறைந்த இரத்த சர்க்கரை மூளை மூடுபனியை எவ்வாறு உருவாக்குகிறது மற்றும் அதைத் தடுக்க உதவும் குறிப்புகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்னென்ன தெரியுமா?
மூளை மூடுபனி
மூளை மூடுபனி என்பது ஒரு நோய் கிடையாது. மாறாக, இது குழப்பம், நினைவாற்றல் குறைபாடு, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் மனத் தெளிவின்மை போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒரு நிலையைக் குறிப்பதாகும். இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், சில மருத்துவ நிலைகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடியதாகும். இதை தெளிவான சிந்தனையைத் தடுக்கக்கூடிய ஒரு தற்காலிக குறைபாடு என்றும் கூறலாம்.
குறைந்த இரத்த சர்க்கரை மூளை மூடுபனியை உருவாக்குமா?
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, மூளை மூடுபனி இருப்பது போன்று, மன ரீதியாக சோம்பலாக, குழப்பமாக, அல்லது கவனம் செலுத்த முடியாமல் அல்லது நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள், என்ன முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது போன்றவற்றை நினைவில் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களா? இது மூளை மூடுபனியாக இருக்கலாம் என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
நிபுணர் மூளை மூடுபனி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இரத்த சர்க்கரை குறைவைக் குறிப்பிடுகிறார். அதனைத் தொடர்ந்து, மூளை மூடுபனி ஏற்படுவதற்கான காரணங்களைக் குறித்தும், அதைத் தடுக்க உதவும் குறிப்புகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகளை டெய்லி சாப்பிட்டால் உங்க மூளை மந்தமாகிடும்! அதன் தீமைகள் இங்கே!
மூளைக்கு முதன்மை எரிபொருளாக குளுக்கோஸ் அமைகிறது. இந்நிலையில், குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக, மூளைக்கு குளுக்கோஸ் சீராக கிடைக்காதபோது, கீழ்க்காணும் அறிகுறிகள் தோன்றலாம்.
- கவனம் செலுத்துவதில் சிரமம்
- திடீர் சோர்வு
- எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள்
- தலைவலி அல்லது தலைச்சுற்றல்
இவை அனைத்தும் குறைந்த இரத்த சர்க்கரை அளவின் காரணமாக ஏற்படக்கூடிய மூளை மூடுபனி பிரச்சனைக்கான அறிகுறிகள் ஆகும்.
View this post on Instagram
மூளை மூடுபனியைத் தடுப்பதற்கான குறிப்புகள்
நிபுணர் பகிர்ந்துரைத்த மூளை மூடுபனியைத் தடுக்க பகிர்ந்துள்ள குறிப்புகள் சிலவற்றைக் காணலாம்.
- சீரான இடைவெளியில் சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.
- அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கூர்முனை மற்றும் செயலிழப்புகளை ஏற்படுத்துகிறது.
- இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்த அன்றாட உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கலாம்.
- உடலை நீரேற்றமாக வைப்பது அவசியமாகும்.
சமச்சீரான இரத்த சர்க்கரையின் மூலம் மனம் தெளிவாகும். மூளையை காலியாக இயங்க விடாதீர்கள் என்று நிபுணர் குறிப்பிடுகிறார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: ப்ரெய்ன் ஃபாக் பற்றி தெரியுமா? உஷார்.. இந்த அறிகுறிகள் இருந்தா உங்களுக்கு மூளை மூடுபனி இருக்குனு அர்த்தம்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 23, 2025 22:21 IST
Published By : கௌதமி சுப்ரமணி