
சரும பராமரிப்பைப் பொறுத்தவரை, பல்வேறு சரும பராமரிப்பு முறைகள் கையாளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, சரும பராமரிப்புக்கு அதாவது இறந்த சரும செல்களை அகற்றுவது மிகவும் முக்கியமானது. பொதுவாக, சரும பராமரிப்பு முறைகளைப் பொறுத்த வரை, ஸ்க்ரப்கள், கெமிக்கல் பீல் அல்லது ஃபேஸ் மாஸ்க்குகள் போன்றவை அடங்குகின்றன. இவை சருமத்தை சுத்தமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. சரும ஈரப்பதத்தை பராமரிக்கவும், சருமத்தின் துளைகளை அழிக்கவும், புதிய செல்கள் உருவாவதை ஊக்குவிக்கவும் எக்ஸ்ஃபோலியேஷன் என்ற முறை உதவுகிறது.
இந்த எக்ஸ்ஃபோலியேஷன் முறையை பலர் வாரத்திற்கு 1-2 முறை பயிற்சி செய்கின்றனர். எனினும், பெரும்பாலும், எக்ஸ்ஃபோலியேஷன் முறைக்குப் பிறகு, அதாவது சருமம் உரிந்த உடனேயே சிவந்து, எரிச்சலடைந்து, உணர்திறன் மிக்கதாக மாறுகிறது. இந்நிலையில், பொதுவாக அதிகப்படியான எக்ஸ்ஃபோலியேஷன் ஆனது தவறான தயாரிப்பைப் பயன்படுத்துதல் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் இருப்பதால் ஏற்படுகிறது. எக்ஸ்ஃபோலியேஷன் ஆனது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு அடுக்கை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக அது வறண்டு, அரிப்பு அல்லது இறுக்கமாக உணர்கிறது.
இதில் புகழ்பெற்ற KARA டெர்மட்டாலஜி சொல்யூஷன்ஸ் & அழகியல் மையத்தின் நிறுவனர் மற்றும் தோல் மருத்துவர் டாக்டர் ரஷ்மி சர்மா அவர்கள் தோல் உரித்தலுக்குப் பிறகு ஏற்படும் எரிச்சலை எவ்வாறு தணிப்பது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த நச்சுப் பொருட்களை உங்கள் சருமப் பராமரிப்பில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்..
எக்ஸ்ஃபோலியேட் செய்த பிறகு எரிச்சலூட்டும் சருமத்தை எப்படி ஆற்றுவது
மருத்துவர் ரஷ்மி சர்மா அவர்களின் கூற்றுப்படி, உரித்தல் செய்த பிறகு, பலருக்கு அதாவது ஃபேஷியல் செய்த சருமத்தில் எரிச்சல் ஏற்படுகிறது. இது ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இவை அதிகப்படியான உரிதல், தவறான தயாரிப்பைப் பயன்படுத்துதல் அல்லது உணர்திறன் வாய்ந்த சருமம் போன்றவற்றால் ஏற்படலாம்.
செய்ய வேண்டியவை
- சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் அல்லது கூலிங் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். இவை எரிச்சலைக் குறைக்கவும் மற்றும் சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது.
- மேலும், உரிந்த சருமத்தை உடனடியாக ஈரப்பதமாக்குவது அவசியமாகும். அதன் படி லேசான, மணம் இல்லாத மாய்ஸ்சரைசரின் உதவியுடன் வறட்சியைத் தடுக்கலாம்.
- இந்த சமயத்தில் சருமத்திற்கு அதிக பொருட்கள் தேவையில்லை. அதே சமயம், ரெட்டினோல் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது எரிச்சலை அதிகரிக்கக்கூடும்.
- உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு, லேசான சமநிலை எண்ணெய் அல்லது ஈரப்பதமூட்டும் சீரம் பயன்படுத்துவத உதவியாக இருக்கும்.
- மேலும், தோல் உரித்தல் பிறகு சருமம் உணர்திறன் மிக்கதாக மாறலாம். எனவே சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் எரிச்சல் மற்றும் நிறமிகளைத் தடுக்க வெளியே செல்லும் போது பரந்த-ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
சருமத்தில் கடுமையான எரிதல் அல்லது வலி, கொப்புளங்கள், ஒவ்வாமை எதிர்வினைகள் அல்லது கடுமையான சிவத்தல், அரிப்பு அல்லது வீக்கம் அதிகரித்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் சருமத்தின் நிலையைப் பொறுத்து கூலிங் க்ரீம் அல்லது ஒவ்வாமை மருந்தை பரிந்துரைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தில் நேரடியாக வாசனைத் திரவியத்தை பயன்படுத்துவதால் என்னாகும் தெரியுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்
தற்காப்பு நடவடிக்கைகள்
- சரும வகைக்கு ஏற்ப சருமத்தில் எப்போதும் ஸ்க்ரப் அல்லது கெமிக்கல் பீல் தேர்வு செய்யலாம்.
- வாரத்திற்கு 1-2 முறை எக்ஸ்ஃபோலியேஷன் போதுமானதாகக் கருதப்படுகிறது.
- மிகவும் கடினமாக தேய்ப்பது அல்லது தயாரிப்பை அதிக நேரம் அப்படியே வைத்திருப்பது சருமத்தை சேதப்படுத்தலாம்.
- நீரேற்றம் மற்றும் சூரிய பாதுகாப்பை கவனித்துக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
எக்ஸ்ஃபோலியேட்டைச் சரி செய்வதன் மூலம், சருமம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். ஆனால், சருமத்தில் எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்றவை அதன் பிறகு பொதுவானதாகக் கருதப்படுகிறது. எனவே, சரியான ஈரப்பதமூட்டும் பொருட்கள், சன்ஸ்கிரீன் மற்றும் நிபுணரின் ஆலோசனையுடன், சருமம் விரைவாக அமைதியடைகிறது. எனவே, தோல் மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் மற்றும் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான பாதுகாப்பான வழி உரித்தல் ஆகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சோப்பு பயன்படுத்துவதால் சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 10, 2025 08:25 IST
Published By : கௌதமி சுப்ரமணி