இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு இருக்கா? பெருஞ்சீரக விதைகளைத் தொட்டுக் கூட பாத்துராதீங்க

Who should avoid eating fennel seeds and why: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலின் இயல்புக்கு ஏற்ற உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். அதன் படி, சில உணவுகளைத் தவிர்ப்பது கட்டாயமாகிறது. அவ்வாறு, பெருஞ்சீரகம் பல வகையான நன்மைகளைத் தந்தாலும், இதை சிலர் தவிர்க்க வேண்டும். இதில் யார் பெருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கு இருக்கா? பெருஞ்சீரக விதைகளைத் தொட்டுக் கூட பாத்துராதீங்க


Is fennel seed safe for everyone: பொதுவாக, உடல் அமைப்பு மட்டுமல்லாமல், உடல் ஏற்றுக்கொள்ளும் சில உணவுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, உடல் வகைக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் அதன் நன்மைகளைக் கேட்ட பிறகு ஏதாவது ஒன்றை உட்கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால், அது அவர்களின் உடலுக்கு சரியானதாக இருக்குமா, இல்லையா என்பது பெரும்பாலும் யோசிப்பதில்லை.

அவ்வாறே, பெருஞ்சீரக விதைகள் ஆனது பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மேலும் இது செரிமானம், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் கண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆயுர்வேதத்தில், பெருஞ்சீரக விதைகள் ஒரு குளிர்ச்சியான, இனிமையான மற்றும் செரிமான மருந்தாகக் கருதப்படுகிறது. ஆனால், இது அனைவருக்கும் சரியானதாக இருக்குமா என்பதை யோத்திருக்கிறீர்களா?

பலருக்கும், பெருஞ்சீரகம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். குறிப்பாக, உடலில் கப தோஷம் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் நொய்டாவின் செக்டார் 12 இல் உள்ள அர்ச்சித் ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் ஆனந்த் திரிபாதி அவர்கள் பெருஞ்சீரகத்தை யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து விவரித்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: அசிடிட்டியால் அவதியா? டக்குனு சரியாக இந்த ஒரு விதையை மட்டும் எடுத்துக்கோங்க

பெருஞ்சீரகம் யார் சாப்பிடக்கூடாது?

டாக்டர் ஆனந்த் திரிபாதி அவர்களின் கூற்றுப்படி, “ஆயுர்வேதத்தில், பெருஞ்சீரக விதைகள் ஆனது இனிப்பு-குளிர்ச்சியான தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. மேலும், இதன் முக்கிய விளைவு செரிமான அமைப்பில் உள்ளது. அதாவது இது நெருப்பை மெதுவாக்காமல் குளிர்ச்சியைத் தருகிறது. பொதுவாக, பித்தம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது தவிர, வாதத்தையும் அமைதிப்படுத்துகிறது” என கூறியுள்ளார்.

மேலும் அவர் பெருஞ்சீரக விதைகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது வாதத்தை அதிகரிக்கக்கூடும். செரிமானம், சிறுநீர் கோளாறுகள், கண் எரிச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருந்துகளில் பெருஞ்சீரக விதைகள் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில், சில சூழ்நிலைகளில் இதன் நுகர்வு தீங்கு விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது.

உடலில் வாத தோஷம் இருக்கும் போது

வாத தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக வாயு, மலச்சிக்கல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தூக்க பிரச்சனைகள், பதட்டம் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன. தினமும் அதிகளவு பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வது வாத தோஷ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், இது லேசானதாகவும், வறண்டதாகவும் காணப்படுகிறது. இத்தகைய நபர்கள், பெருஞ்சீரக விதைகளை உட்கொள்ள விரும்பினால், அதை நெய்யுடன் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலில் அதிகப்படியான சளி இருக்கும்போது

உடலில் கப தோஷம் இருந்தால், தூக்கத்தில் சோம்பல், பசியின்மை, கனத்தன்மை மற்றும் தொண்டையில் சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், குறைந்த அளவில் பெருஞ்சீரகத்தை உட்கொள்ளலாம். பெருஞ்சீரகம் சளியை சமன் செய்தாலும், இதன் அதிகப்படியான உட்கொள்ளல், குறிப்பாக குளிர்ந்த நீரில் அல்லது இரவில் உட்கொள்ளும்போது, அது சளியை மேலும் அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Fennel Seeds: கோடையில் கூல்லா இருக்க பெருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்ப காலத்தில் பெருஞ்சீரகத்தை அதிகமாக உட்கொள்வது கருப்பையைத் தூண்டுகிறது. குறிப்பாக கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில், கருப்பையைத் தூண்டும் எந்தவொரு பொருளையும் தவிர்க்க ஆயுர்வேதத்தின் பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள் சிறிய அளவில் இதை உட்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

முடிவுரை

பெருஞ்சீரக விதைகள் ஒரு பயனுள்ள உணவுப்பொருளாகவும் மருந்தாகவும் கருதப்படுகிறது. ஆனால், எல்லா மருந்துகளும் அனைவருக்கும் ஏற்றதாக அமையாது. ஒருவரின் இயல்பு கப பிரதானம், வாத பிரதானம் அல்லது உங்கள் செரிமான சக்தி குறைவாக இருந்தால், பெருஞ்சீரக விதைகளை அதிகம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்டவர்களும் இதை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டால், தகுதிவாய்ந்த ஆயுர்வேத பயிற்சியாளர் அல்லது மருத்துவரை அணுக வேண்டும்,

இந்த பதிவும் உதவலாம்: ஏன் தினமும் சோம்பு டீ குடிக்கனும் தெரியுமா.? ரீசன் இங்கே..

Image Source: Freepik

Read Next

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக இருக்க இந்த இயற்கை ஆயுர்வேத வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version