Doctor Verified

Rabies-ல இருந்து உங்களை பாதுகாக்க இதை பண்ணுங்க.. மருத்துவர் பரிந்துரை..

நாய்க்கடி ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டிய மூன்று முக்கிய நடவடிக்கைகளை மருத்துவர் முபாரக் விளக்குகிறார். ரேபிஸ் நோய் தடுப்பு, தடுப்பூசி, உடனடி சிகிச்சை பற்றிய முழுமையான தகவல் இங்கே.
  • SHARE
  • FOLLOW
Rabies-ல இருந்து உங்களை பாதுகாக்க இதை பண்ணுங்க.. மருத்துவர் பரிந்துரை..


தமிழகத்தில் மட்டுமே, கடந்த ஆண்டு சுமார் 5 லட்சம் பேர் நாய்களால் கடிக்கப்பட்டுள்ளனர் என்ற ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தினசரி சராசரியாக 1,500க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு ஆளாகிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை.

நாய்களை வளர்ப்பது சரியா, தவறா என்ற விவாதத்தை விட, நாய்க்கடி ஏற்படும்போது உடனடியாக எவ்வாறு ரேபிஸ் நோயிலிருந்து நம்மை காப்பாற்றுவது என்பதே மிகவும் முக்கியமானது என்று, பிரபல மருத்துவர் முபாரக் (ரேடியாலஜிஸ்ட்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரேபிஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

ரேபிஸ் (Rabies) என்பது நாய்களாலும், சில விலங்குகளாலும் பரவும் பெரும் அபாயகரமான வைரஸ் நோய். இது ஒருமுறை தாக்கினால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியாது. எனவே, நாய்க்கடி ஏற்பட்ட உடனே நடவடிக்கை எடுப்பதே உயிரைக் காக்கும் ஒரே வழியாகும்.

நாய்க்கடி ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டிய 3 முக்கிய நடவடிக்கைகள்

கடித்த இடத்தை நன்றாக கழுவுதல்

* முதலில், கடிக்கப்பட்ட இடத்தை 15–20 நிமிடங்கள் வரை ஓடும் தண்ணீரால் கழுவ வேண்டும்.

* இருந்தால் ஆண்டிசெப்டிக் சோப்பு கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

* இது, வைரஸ் உடலுக்குள் பரவாமல் தடுக்க உதவும் முக்கியமான படியாகும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் மூளை ஆரோக்கியத்தை சிதைக்கும் 10 தினசரி பழக்கங்கள் - மருத்துவர் எச்சரிக்கை..

இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) ஊசி

* நாய்க்கடி ஆழமாக இருந்தால் அல்லது தலை, கழுத்து போன்ற சென்சிட்டிவ் பகுதிகளில் இருந்தால், Immunoglobulin எனப்படும் சிறப்பு ஊசி, கடித்த இடத்திலேயே செலுத்தப்பட வேண்டும்.

* முக்கியமாக, இந்த ஊசியை 24 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர் முபாரக் வலியுறுத்துகிறார்.

* இந்த ஊசி, ரேபிஸ் வைரஸ் உடனடியாக பரவுவதைத் தடுக்கிறது.

ரேபிஸ் தடுப்பூசி – 5 டோஸ்கள்

* நாய்க்கடி ஏற்பட்டால், Anti-Rabies Vaccine கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

* முழு 5 டோஸ்களையும் (சிகிச்சை முறைக்கேற்ப) எடுத்து முடிப்பதே உயிரைக் காப்பாற்றும் ஒரே வழி.

* பலர் இரண்டு டோஸ்கள் எடுத்துவிட்டால் போதும் என்று தவறாக எண்ணுகிறார்கள். ஆனால், முழுமையான 5 தடுப்பூசிகள் இல்லாமல் பாதுகாப்பு கிடையாது.

ஏன் இது அவசியம்?

சிலர் ரேபிஸ் தடுப்பூசி எடுத்திருந்தாலும், சிகிச்சை முறையை பூர்த்தி செய்யாததால் உயிரிழப்புகள் நடந்துள்ளன. எனவே, முழுமையான மூன்று படிகளையும் பின்பற்றுவது மட்டுமே உயிரை காப்பாற்றும் நிச்சயமான வழி என ஆய்வுகள் கூறுகின்றன.

View this post on Instagram

A post shared by Dr Mubarak (@drmubarakofficial)

இறுதியாக..

நாய்க்கடி சம்பவங்களை தவிர்க்க முடியாவிட்டாலும், அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயைத் தடுப்பது நம்மால் முடியும். உடனடி கழுவுதல், 24 மணிநேரத்திற்குள் Immunoglobulin ஊசி, முழுமையான 5 டோஸ் Anti-Rabies Vaccine ஆகியவற்றை மேற்கொண்டால், இந்த வைரஸின் அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். நம்முடைய அலட்சியம் ஒரு உயிரைக் காவுகொள்ளக் கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருங்கள் – பாதுகாப்பாக இருங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ அறிவுரைக்கான மாற்றாகாது. நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று நிபுணர் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

உங்கள் மூளை ஆரோக்கியத்தை சிதைக்கும் 10 தினசரி பழக்கங்கள் - மருத்துவர் எச்சரிக்கை..

Disclaimer

குறிச்சொற்கள்