
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி காலை நடைபயிற்சியின் போது தலைச்சுற்றல் ஏற்பட்டதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தேவையான நோயறிதல் சோதனைகள் எடுக்கப்பட்டன. மேலும் அவரை மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால், மருத்துவமையின் இருந்து கொண்டே அலுவலக பணிகளை செய்து வந்தார். நோயறிதல் சோதனைகள் எடுக்கப்பட்டதில் ஆஞ்சியோகிராபி பரிசோதனையுன் செய்யப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று ஆஞ்சியோகிராபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு அடைப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் முதலமைச்சர் எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
பொதுவாக ஆஞ்சியோகிராபி பரிசோதனை என்றால் என்ன? இந்த சோதனை எதற்காக எடுக்கப்படுகிறது? என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. மேலும் சிலர் ஆஞ்சியோ என்று கூறினாலே, பயம் கொள்கிறார்கள். இந்நிலையில் ஆஞ்சியோகிராபி பரிசோதனை என்றால் என்ன? எதற்காக இது எடுக்கப்படுகிறது? இதை செய்வதால் என்ன பயன்? இதை எப்படி எடுப்பார்கள்? போன்ற கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆஞ்சியோகிராபி என்றால் என்ன?
ஆஞ்சியோகிராபி என்பது இரத்த நாளங்களில், குறிப்பாக தமனிகளில், அடைப்புகள் அல்லது பிற பிரச்னைகள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும், காட்சிப்படுத்தவும் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ இமேஜிங் சோதனையாகும். இது இதயம், மூளை, சிறுநீரகங்கள் மற்றும் உடலின் பிற பாகங்கள் வழியாக இரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதைப் பார்க்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.
மேலும் படிக்க: Angioplasty Definition: இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி எப்போ தேவைபடுகிறது?
ஆஞ்சியோகிராபி ஏன் செய்யப்படுகிறது?
இதயம் அல்லது வாஸ்குலர் நோய்க்கான அறிகுறிகள் அல்லது ஆபத்து காரணிகள் இருந்தால் மருத்துவர்கள் ஆஞ்சியோகிராபியை பரிந்துரைக்கின்றனர். பொதுவான காரணங்கள் பின்வருமாறு..
* மார்பு வலி அல்லது அசௌகரியம் (ஆஞ்சினா)
* மூச்சுத் திணறல்
* ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள்
* சந்தேகிக்கப்படும் மாரடைப்பு.
* அடைபட்ட தமனிகள் அல்லது மோசமான இரத்த ஓட்டம்
* ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சையைத் திட்டமிட.

ஆஞ்சியோகிராபி எவ்வாறு செய்யப்படுகிறது?
* வடிகுழாய் எனப்படும் மெல்லிய, நெகிழ்வான குழாய் இரத்த நாளத்தில் செருகப்படுகிறது.
* குழாய் வழியாக ஒரு மாறுபட்ட திரவம் செலுத்தப்படுகிறது.
* இரத்த நாளங்கள் வழியாக திரவம் பாயும் போது X-Ray அல்லது சிடி ஸ்கேன்கள் எடுக்கப்படுகின்றன.
* இது இரத்த ஓட்டம் மற்றும் அடைப்புகள் பற்றிய விரிவான படங்களை உருவாக்குகிறது.
ஆஞ்சியோகிராபி செய்வதால் என்ன பயன்?
* குறுகிய அல்லது அடைபட்ட தமனிகளை முன்கூட்டியே கண்டறியலாம்.
* மாரடைப்பு அல்லது பக்கவாதத்தைத் தடுக்கலாம்.
* துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழிநடத்தலாம்.
* பெரும்பாலும் ஸ்டென்ட் வைப்பது போன்ற சரியான நேரத்தில் தலையீட்டிற்கு வழிவகுக்கலாம்.
Read Next
இந்த அறிகுறிகள் இதய செயலிழப்புக்கு முன்பே உடலில் தோன்றும்.. பார்த்தவுடன் மருத்துவரை அணுகவும்..
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version