Expert

தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்.. சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்.. ஆபத்தில் மக்கள்.!

சென்னையில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல இடங்களில் குப்பை தேங்கியுள்ளது. இதனால் கொசு பெருக்கம், நீர் மாசுபாடு மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள குப்பைகளால் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதை இங்கே தெரிந்துகொள்வோம்.
  • SHARE
  • FOLLOW
தொடரும் தூய்மை பணியாளர்களின் போராட்டம்.. சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்.. ஆபத்தில் மக்கள்.!


மாநகராட்சியின் சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து சுகாதாரத் துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 6ஆவது நாளாக 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கழிவு அகற்றும் பணிகள் முடங்கியுள்ளது. இதன் விளைவாக நகரில் பெரும் சுகாதாரப் பிரச்சினை உருவாகியுள்ளது.

தனியார்மயமா.? தொழிலாளர்கள் வேதனை..

மாநகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றும் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், தற்போதைய சுகாதாரத் துறை தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் உள்ளனர். "நாங்கள் பல ஆண்டுகளாக இப்பணியில் உயிரை பணயம் வைத்து உழைக்கிறோம்.. இப்போது எங்களை துரத்தி, தனியாருக்கு வேலையை கொடுக்கிறார்கள்.. இது நியாயமா.?" என்றே பலர் கேட்கிறார்கள்.

artical  - 2025-08-06T133954.820

தேங்கியுள்ள குப்பைகள்.. விளைவுகள் என்ன தெரியுமா.?

தொற்று நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு

குப்பை மலை போல் குவிவது, பல தொற்று அபாயத்திற்கு வழிவகுக்கும். குவிந்துள்ள குப்பையில் இருந்து பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூச்சிகள் உருவாகும். இதனால் மக்கள் நோய்களுக்குள்ளாவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது.

 மேலும் படிக்க: கவனமாக இருங்கள்! ஆட்டத்தை தொடங்கும் டெங்கு - மலேரியா.. இந்த வழியில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்..

முக்கியமாக அதிகரிக்கக்கூடிய நோய்கள்

* டைஃபாய்டு

* காலரா

* வயிறு சார்ந்த பிரச்னைகள்

* வயிற்றுப் போக்கு

* டெங்கு

* மலேரியா

* சளி

* இருமல்

* காய்ச்சல்

fever

முக்கிய அபாயங்கள்

குடிநீர் மாசுபடும் அபாயம்

நகரின் கழிவுகள் மேலாண்மை சரியாக இல்லாதபோது, அது நிலத்தடி நீரை மாசுபடுத்தும். ஏற்கனவே சில பகுதிகளில் குடிநீர் குழாய்களில் துர்நாற்றம் வருகிறது என புகார்கள் எழுந்துள்ளன. இது குடிநீரின் தரத்தை பாதித்து, குடிநீர் மூலமாக பரவும் நோய்களின் அபாயத்தையும் உயர்த்துகிறது.

குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அதிக ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்

குப்பைகள் அதிகம் தேங்கும் பகுதியில் வாழும் மக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியினால் உடனடியாக பாதிக்கப்படுகின்றனர். காற்றில் பரவும் துகள்கள், குப்பை மீது உள்ள பூச்சிகள் போன்றவற்றால் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

what-causes-hormone-imbalance-in-female-main

பொதுமக்கள் மீதான தாக்கம்

பலர் குப்பையை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள், தினமும் சாலைகளில் நடக்க வேண்டியவர்கள் - இவர்களுக்கெல்லாம் இந்த சூழ்நிலை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கூறுகிறார்கள் – "பயங்கரமாகக் குப்பை தேங்கும் சூழ்நிலை தொடர்ந்தால், சென்னையில் ஒரு பெரிய தொற்று நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது கொரோனாவை விட வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். நகர நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."

தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

தற்காலிக திட்டம்

மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை கொண்டு குப்பையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இது முழுமையாக போதுமானதல்ல. இந்த பிரச்சினையை தீர்க்க தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக பேச்சுவார்த்தையால் தீர்க்கவேண்டும்.

பொதுமக்கள் பங்களிப்பு

  • வீட்டில் குப்பைகளை மூடிய டப்பாக்களில் சேமிக்க வேண்டும்
  • குப்பையை தெருவில் வீசக்கூடாது
  • கழிவுகளை சிந்தாமல் பார்த்துக்கொள்ளவும்
  • பசுமை கழிவுகளை உரமாக மாற்றும் முயற்சிகள் செய்யலாம்

Main

கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்தவும்

  • வீடுகளிலும் வெளியிலும் நீர் தேங்கும் இடங்களை அகற்ற வேண்டும்
  • உபயோகப்படுத்தாத கொள்கலன்களை சுத்தமாக மூடி வைக்கவும்
  • நோய் பரவுவதைத் தடுக்க ஒவ்வொரு வீட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

அரசுக்கு பரிந்துரை

  • தொழிலாளர்களின் வலியுறுத்தல்களை கவனித்து உரிய பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்
  • இத்தகைய விடயங்களை நகர நலத்துக்கு பாதிப்பளிக்காத வகையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • குடிநீர், சுகாதாரம், கழிவுகள் அகற்றல் – இவற்றில் தனியார்மயம் செய்வது ஏற்கனவே பல நகரங்களில் எதிர்வினைதான் தந்துள்ளது. இது மீண்டும் ஆய்வு செய்யப்படவேண்டும்.

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை:

  • தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும்
  • உணவுகளை மூடி வைக்கவும்
  • கையைக் கழுவும் பழக்கத்தை கடைபிடிக்கவும்
  • தொற்று நோய்கள் தொடர்பான அறிகுறிகளை கவனிக்கவும்
  • மருத்துவரை உடனடியாக அணுகவும்

குறிப்பு

தொழிலாளர்களின் போராட்டமும், மக்களின் சுகாதாரத் தேவைகளும் ஒன்று சேர்ந்துவிட்ட ஒரு சூழ்நிலையில், உடனடி தீர்வு தேவைப்படுகிறது. நிர்வாகமும் தொழிலாளர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டு, மக்கள் வாழ்வின் முக்கிய அம்சமான சுகாதாரத்தை பாதுகாப்பது அனைவரின் கடமை. நகரத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மட்டும் தான் தொற்றுநோய்களையும், பெரும் சுகாதார அச்சுறுத்தல்களையும் தடுக்கக்கூடிய வழி.


மேலும் இந்த மாதிரி தகவல்களுக்கு எங்களை பின்தொடருங்கள்:

📌 Facebook: https://www.facebook.com/share/1AzLkKmLba/

📌 Instagram: https://www.instagram.com/onlymyhealthtamil/

Read Next

Itching After Sex: கவனமா இருங்க.! உடலுறவுக்கு பிறகு பிறப்புறுப்பில் அரிப்பு.? காரணமும்.. சிகிச்சை முறையும்.. மருத்துவரிடம் அறிவோம்..

Disclaimer