கழுத்து பிடிப்பால் அவதியா? இந்த சிம்பிளான வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

கழுத்துப் பகுதியில் விறைப்பு அல்லது பிடிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும், இதைக் குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் நமக்கு உதவுகின்றன. இதில் கழுத்தில் விறைப்பு அல்லது பிடிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கழுத்து பிடிப்பால் அவதியா? இந்த சிம்பிளான வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க


How to relieve neck stiffness at home naturally: அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதில் ஒன்றாகவே, கழுத்துப் பிடிப்பு அல்லது விறைப்பும் அடங்குகிறது. இது நாள் முழுவதும் கணினியில் வேலை செய்வது, தூங்கும் போது பக்கவாட்டுப் பகுதியை மாற்றும்போது அல்லது திடீரென கனமான பொருட்களைத் தூக்குவது போன்ற பழக்கங்களால் ஏற்படலாம். இதில், கழுத்து சரியாகச் சுழல முடியாமல் போவதுடன், மேலும் கீழும் குனிய கடினமாகிவிடுகிறது அல்லது சிறிது குனியும்போது வலுவான இழுப்பு உணரப்படுகிறது.

கழுத்து பிடிப்பு ஆனது பல்வேறு அசௌகரியங்களுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது அல்லது மீண்டும் மீண்டும் தைலம் தடவுவது சிறிது நேரத்திற்கு மட்டுமே நிவாரணம் தரும். ஆனால் மீண்டும் வலி ஏற்படத் தொடங்கும். இந்நிலையில், தசைகளில் உள்ள வீக்கம் மற்றும் இறுக்கத்தை உள்ளிருந்து குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இதில், கழுத்து பிடிப்பு அல்லது விறைப்பிலிருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்கள் குறித்து லக்னோவின் விகாஸ் நகரில் அமைந்துள்ள பிரஞ்சல் ஆயுர்வேத மருத்துவமனையின் டாக்டர் மணீஷ் சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: உயரமான தலையணை வைத்து தூங்கினால் இந்த நோய் வருமா? எத்தனை தலையணை வைத்து தூங்கலாம்?

பூண்டு மற்றும் கிராம்பைப் பயன்படுத்துவது

பூண்டு மற்றும் கிராம்பு இரண்டுமே சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகளைக் கொண்டதாகும். இவை வீக்கத்தைக் குறைக்கவும் கழுத்து தசைகளில் உள்ள விறைப்பைத் தளர்த்தவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • கடுகு எண்ணெயில் 3-4 பூண்டு பற்கள் மற்றும் 2-3 பற்களை சூடாக்க வேண்டும்.
  • பின் இந்தக் கலவையை வடிகட்டி, அது வெதுவெதுப்பானதும், கழுத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, லேசான கைகளால் 5-7 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
  • இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கழுத்து விறைப்பு.மேலும் வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் பயன்பாடு

ஆப்பிள் சீடர் வினிகரில் பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை கழுத்து வலிமற்றும் பதற்றத்தை விரைவாக விடுவிக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • ஒரு சுத்தமான துணியை எடுத்து, அதை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து, கழுத்தில் 15-20 நிமிடங்கள் வைக்கலாம்.
  • இதை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்வது வீக்கத்தைக் குறைத்து கழுத்து பிடிப்பை எளிதாக்குகிறது.

சூடான நீர் அழுத்துதல்

கழுத்துப் பிடிப்புக்கு சூடான அமுக்கம் செய்வது தசைகளை தளர்த்தி வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

பயன்படுத்தும் முறை

  • ஒரு சூடான தண்ணீர் பை அல்லது துண்டை சூடான நீரில் நனைத்து கழுத்தில் 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • இதை இரவில் தூங்கும் முன் செய்வது கழுத்து விறைப்பைக் குறைக்கிறது.
  • வீக்கம் அதிகமாக இருப்பின், குளிர் அழுத்தியைப் பயன்படுத்தலாம்.

வெந்தய விதை பேஸ்ட்டைப் பயன்படுத்துவது

வெந்தயம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. இது கழுத்தில் வீக்கம்மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • 1-2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, வெதுவெதுப்பான பேஸ்ட் தயார் செய்ய வேண்டும்.
  • அதை கடினமான இடத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம்.
  • இவை தசைகளில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: திடீர் தலைசுற்றல், வாந்தி... இந்த ரெண்டு அறிகுறிகள எக்காரணம் கொண்டு அலட்சியப்படுத்தாதீங்க...!

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் மசாஜ்

கற்பூரம் வலி நிவாரணி மற்றும் கிருமி நாசினி பண்புகளைக் கொண்டதாகும். அதே சமயத்தில், தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஆழமாக ஊடுருவி தசைகளை தளர்த்த உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 சிட்டிகை கற்பூரத்தைச் சேர்த்து லேசாக சூடாக்க வேண்டும்.
  • கழுத்து மற்றும் தோள்களில் வெதுவெதுப்பான எண்ணெயை 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்யலாம்.
  • இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் கழுத்து வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.

கழுத்து விறைப்பு அல்லது பிடிப்பைத் தவிர்ப்பதற்கான வழிகள்

  • திடீரென்று கழுத்தை அசைப்பது அல்லது அதிக எடையைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மொபைல் மற்றும் மடிக்கணினியை கண் மட்டத்தில் வைத்திருக்கலாம். கழுத்தை வளைத்து நீண்ட நேரம் அதைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • தூங்கும் போது, மிக உயரமாகவோ அல்லது தட்டையாகவோ இல்லாத தலையணையைப் பயன்படுத்த வேண்டும்.
  • முதுகு மற்றும் கழுத்தை நேராக வைத்து உட்கார்வது அல்லது நிற்கும் பழக்கங்களைக் கையாளலாம்.
  • ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் மென்மையான கழுத்து நீட்சி அல்லது அசைவைச் செய்யலாம்.
  • வழக்கத்தில் சூடான அமுக்கங்கள் மற்றும் மென்மையான மசாஜ் போன்றவற்றைச் சேர்க்கலாம்.
  • தசைகளை நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

கழுத்தில் விறைப்பு அல்லது பிடிப்புகள் ஏற்பட்டால் இந்த வீட்டு வைத்தியங்களை எடுத்துக் கொள்ளலாம். இவை எந்த பக்க விளைவுகளையும் தராமல் விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது. எனினும், வலி 3-4 நாட்களுக்கு நீடித்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி கழுத்து வலியால் அவதியா? அப்போ இந்த விஷயங்களை செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

தொடை கருமையை நீக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் விளக்கம் இங்கே..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version