Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Diabetes Ayurvedic Treatment: சர்க்கரை நோயை குறைக்க மருந்து தேவையில்லை - இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்!

சர்க்கரை நோய் என்பது பழங்காலத்திலிருந்தே மனிதர்களிடையே காணப்படுகிறது. ஆயுர்வேதத்தில் மதுமேஹம் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயின் முதல் மற்றும் மிக முக்கியமான அறிகுறி இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட 77 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் இது அதிகரிக்கிறது.

நம் உடலில் ஏற்படும் சிறு காயங்கள் கூட ஆற நீண்ட நேரம் எடுப்பது, திடீரென பார்வை இழப்பு, உடலில் அரிப்பு, காரணமே இல்லாமல் சோர்வாக இருப்பது ஆகியவை சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் இரத்த பரிசோதனை செய்வதோடு, மருத்துவரின் ஆலோசனையையும் பெற வேண்டும்.

ஒருவேளை பரிசோதனையில் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில ஆயுர்வேத மருந்துகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயம்:

ஒரு ஸ்பூன் வெந்தயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பகால நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் பரிந்துரைக்கப்படுகிறது.

வெந்தயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கணையத்தின் செயல்பாட்டிற்கு உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

படிப்படியாக நீரிழிவு மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். உண்மையில், வெந்தயத்தில் 0% சர்க்கரை உள்ளது. வெந்தயத்தில் உள்ள கசப்பு சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

பாகற்காய்:

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு. இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.

நாவல் பழ இலை:

நாவல் பழ இலைகள் மற்றும் விதைகள் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள ஜம்போலன் என்ற தனிமம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

வேப்ப இலை:

வேப்ப இலைகள் மற்றும் விதைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நிம்பின் என்ற தனிமம் சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது.

இலவங்கப்பட்டை:

சர்க்கரை நோயை போக்க சிறந்த வழிகளில் ஒன்று இலவங்கப்பட்டை. அதாவது, இலவங்கப்பட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

இலவங்கப்பட்டை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Image source: Freepik

Read Next

Wrong Food Combinations: மறந்தும் இந்த 9 பொருட்களை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீங்க!!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content