Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Importance Of Breastfeeding: தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், பிள்ளைக்கும் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய் தனது குழந்தைக்கு பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தவே இந்த வார விழா கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பது என்பது பெண்மை இனத்துக்கே கிடைத்த வரம். தாய் பால் (பாலூட்டுதல்) என்பது தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். பிறந்ததிலிருந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் என பெரும்பாலான மருத்து வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு வருடத்திற்கு இதை தொடர்வது நல்லது என அமெரிக்க மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பால் சுரப்பதை அதிகரிப்பது எப்படி?

தாய் பால் உற்பத்தி செய்யாத போது மருத்துவர்கள் ஃபார்முலா மில்க்கை பரிந்துரைக்கிறார்கள், ஆனால் தாய்மார்கள் சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவது அவசியம். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மேலும்… தாயின் பால் அவர்களுக்கு சமச்சீரான ஊட்டச்சத்தை அளிக்கிறது. தாய்ப்பாலில் இருந்து குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பல நோய்கள் வராமல் தடுக்கிறது. நச்சுக் கழிவுகள், கிருமிகள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை விரட்டும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உண்டு.

இதையும் படிங்க: பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்..

குழந்தைகளுக்கு ஒன்றரை ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தால் அந்தக் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்துமா, அலர்ஜி வராது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு நோய், வயிற்றுப்போக்கு, தொற்று நோய்கள் வராது. அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைகளின் மூளை சிறப்பாக செயல்படும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அவர்களே அதிக IQ உடையவராக விளங்குகிறார்கள்.

தாயிடம் கொண்டிருக்கும் அதிக பாசம்

ஒரு குழந்தை தந்தையைவிட தாயிடம் தான் குழந்தைப்பருவத்தில் வலுவான பாசத்தைக் கொண்டிருக்கும். தனது வலியை தாயை பார்த்து வெளிப்படுத்தும். இந்த பிணைப்புக்கான திறவுகோலாக தாய்ப்பால் அமைகிறது. ஒரு தாயின் ஸ்பரிசம் ஒரு குழந்தைக்கு மிகுந்த ஆறுதலைத் தருகிறது. ஒரு தாயின் கண்கள் குழந்தைக்கு மிகவும் இனிமையானவை. குழந்தைகள் தங்கள் தாயுடன் இருக்கும்போது மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணருவார்கள்.

பல பிரச்சனைகளுக்கும் தீர்வு

தாய்ப்பால் குடித்தால், குழந்தை எவ்வளவு கனமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு எடையுடன் இருக்கும். அதிக எடை, போதிய எடை இல்லாமை போன்ற பிரச்சனைகள் அதிகம் வராது. தாய்ப்பாலை அருந்தி வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் சர்க்கரை நோய், உடல் பருமன் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். சிலர் தங்கள் குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுப்பது என்பதும் நல்ல முடிவுதான்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்..

குழந்தைக்கு பால் கொடுப்பது தாய்க்கும் நல்லது. முக்கியமாக இது உங்கள் உடலில் உள்ள அதிக கலோரிகளை குறைக்கலாம். பாலூட்டும் தாயும் வலுவான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அவள் மகிழ்ச்சியாக இருக்கும்போது குழந்தைக்கு சரியான பால் கொடுக்கலாம். எனவே தாய் சத்தான உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருக்கும் தாய், குழந்தைக்கு பால் ஊட்டுவதால் பிற்காலத்தில் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தாய் குழந்தைக்கு பால் கொடுப்பதால். ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இது கருப்பை அதன் முன் அளவில் திரும்ப அனுமதிக்கிறது. கர்ப்பப்பையில் இருந்து ரத்தம் வெளியேறுவதை நிறுத்தவும் தாய்ப்பால் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் கருப்பையின் அளவு அதிகரிக்கும். இது அடிவயிற்றில் உள்ள அனைத்து இடத்தையும் ஆக்கிரமிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு, கருப்பை ஊடுருவல் எனப்படும் செயல்முறைக்கு உட்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இது இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

தாய்மார்களுக்கு பிரசவத்திற்குப் பின் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் உள்ளது. சுமார் 15 சதவீத தாய்மார்கள் இந்த ஆபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்ப்பால் கொடுக்காதவர்களுடன் ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு இந்த ஆபத்து குறைவு.

பாலூட்டும் தாய்மார்கள் புற்றுநோய் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை குறைக்கிறார்கள். குறிப்பாக மார்பக புற்றுநோயின் ஆபத்து குறைகிறது. அதேபோல் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் ஆபத்து குறைகிறது. உயர் இரத்த அழுத்தம், மூட்டுவலி, வகை 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் அபாயம் 10 முதல் 50 சதவீதம் வரை குறைகிறது.

இதையும் படிங்க: உங்கள் பிள்ளையின் உயரத்தை அதிகரிக்க இந்த 5 காய்கறிகளைக் கொடுங்களேன்!!!

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் எதிர்கால இந்திய தலைமுறைகள். அவர்களை நல்ல ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமானவர்களாக மாற்றும் கடமை உங்களுக்கு உண்டு. தாய்ப்பால், குழந்தை தொடர்பான ஏதேனும் தீவிரத்தை சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

வயதான காலத்தில் உங்கள் தந்தையை எப்படி பார்த்து கொள்வது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content