பிறந்த குழந்தைகளுக்கு ஒரு உன்னதமான சத்தான ஆதாரம் தாய்மார்கள் அளிக்கும் தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, குழந்தைகளின் ஆரோக்கியத்திகும் உதவகிறது. பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி, ஊட்டச்சத்து போன்றவற்றை தாய்ப்பால் மூலம் மட்டுமே கிடைக்கிறது. குழந்தை பிறந்தது முதல் குறைந்தது ஆறு மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய் சேய் உறவில் இணக்கத்தை ஏற்படுத்துவதாக தாய்ப்பால் அமைகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்
தாயான பிறகு தாய்ப்பால் கொடுப்பதில் முதல் அனுபவத்தைப் பெறும் பெண்கள் சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இதில், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் என இருவரும் பாதிக்கப்படும் சூழல் உண்டாகும். இந்த சூழ்நிலையில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
முக்கிய கட்டுரைகள்

இந்த பதிவும் உண்டாகலாம்: சிறு பிள்ளைகளுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்னையைப் புறக்கணிக்க வேண்டாம்
முலைக்காம்புகளில் விரிசல் ஏற்படுதல்
பெண்களின் மார்பகங்களின் முலைக்காம்புகளில் விரிசல் ஏற்படுவது பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பிரச்சனை பெண் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே தொடங்குகிறது. இது குழந்தைக்குத் தவறான வழியில் அல்லது தவறான நிலையில் பால் கொடுக்கும் போது முலைக்காம்புகளில் விரிசல் உண்டாகலாம். இந்த நிலையைத் தவிர்க்க முலைக்காம்புகளில் வெடிப்பு இருப்பினும், தாய்ப்பால் கொடுப்பதை நிறித்தக்கூடாது. இந்த செயல்முறையைத் தொடர்ந்து செய்யவும். மார்பகங்களில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் சில துளிகள் பால் தடவுவதன் மூலம் இதை சரி செய்யலாம்.
பால் உற்பத்தி குழாயில் அடைப்பு
மார்பகத்திலிருந்து பால் வெளியேறும் செயல்முறை, அதனை உற்பத்தி செய்யக்கூடிய சுரப்பிகளால் ஆகும். அதாவது பால் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் அல்லது திசுக்கள் அல்வியோலி என அழைக்கப்படுகிறது. இவ்வாறே அரோலாவில் பால் சேகரிக்கப்படுகிறது. பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது அரோலாவை உறிஞ்சி மார்பகத்தில் இருந்து பால் வெளியேற்றப்படுகிறது. இந்த செயல்முறையின் போதே பால் உற்பத்தி குழாயின் அடைப்பு பிரச்சனை ஏற்படலாம். இதற்கு முக்கிய காரணம் தாய்ப்பால் உறிஞ்சும் செயல்முறையும், குழந்தையும் ஒன்றுக்கொன்று பொருந்தாததாகும். இந்த பிரச்சனை ஏற்படும் போது மார்பகத்தில் வீக்கம், கட்டி போன்றவை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை சரியான நேரத்தில் கவனித்துக் கொள்வது நல்லது.
இந்த பிரச்சனையைத் தீர்க்க, மார்பில் வீக்கம் உணரும் பகுதியிலேயே குழந்தைக்கு அதிகமாக உணவளிக்க வேண்டும். மேலும், வீக்கம் உள்ள இடத்தில் எண்ணெயின் உதவியுடன் விரல்களால் மசாஜ் செய்யலாம்.
இந்த பதிவும் உண்டாகலாம்: பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?
மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவது
குழந்தை பிறந்த பிறகு மார்பகங்கள் அதிகபட்சமாக பால் நிரப்பத் தொடங்குகிறது. இதனால் தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின் 2-5 நாள்களில் மார்பகங்கள் கனமாகவும், நிறைவாகவும் இருப்பதை உணர்கின்றனர். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை மார்பகங்கள் உற்பத்தி செய்கிறது. இருப்பினும், ஒரு சில சமயங்களில் மார்பகத்திலிருந்து பால் முழுவதுமாக வெளியேற முடிவதில்லை. இவ்வாறு அதிக எடை கொண்டிருக்கும் போது மார்பகத்தில் வீக்கம் ஏற்படுவதுடன் வலி உணர்வு ஏற்படும். இந்தப் பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
தட்டையான முலைக்காம்புகள்
குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதென்பது முலைக்காம்புகள் வீங்கியிருப்பது அவசியம். இவ்வாறு இருக்கும் போது, குழந்தையால் நன்கு பால் கொடுக்க முடியும். ஆனால், முலைக்காம்புகள் தட்டையாகவோ, தலைகீழாகவோ இருந்தால், குழந்ததைக்குத் தாய்ப்பால் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். இதன் காரணமாக தாய்மார்கள் பல தொற்று நோய்களை சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். முலைக்காம்பு பிரச்சனைக்கு கர்ப்ப காலாத்தில் மசாஜ் செய்வதன் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இருப்பினும், இந்த பிரச்சனைக்கு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும்.
இந்த பதிவும் உண்டாகலாம்: பிள்ளைகளின் வறட்டு இருமலை போக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்!!!
Image Source: Freepik