Doctor Verified

குழந்தைகளிலிருந்து பெரியோர் வரை.. ‘ஓம திரவம்’ தரும் 10 அதிசய நன்மைகள்.! மருத்துவர் விளக்கம்..

ஓம திரவம் தினமும் குடிப்பதால் செரிமானம், சளி, இருமல், வயிற்றுப்புண், ஆஸ்துமா உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எப்படி நன்மை கிடைக்கிறது? குழந்தைகளுக்கு எவ்வளவு அளவு கொடுக்கலாம்? மருத்துவர் விளக்கிய முழு தகவல் இங்கே.
  • SHARE
  • FOLLOW
குழந்தைகளிலிருந்து பெரியோர் வரை.. ‘ஓம திரவம்’ தரும் 10 அதிசய நன்மைகள்.! மருத்துவர் விளக்கம்..

வயிற்று கோளாறுகளுக்கு உடனடி தீர்வாக பயன்படுத்தப்படும் ஓம விதைகள் (Ajwain) நமது பாரம்பரிய மருத்துவத்தில் முக்கியமான இடம் பெற்றவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் ஓமத் திரவம் கை கண்ட வைத்தியமாக தலைமுறைகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆராய்ச்சிகளும் மருத்துவர் ஆலோசனைகளும், ஓமத் திரவம் பல்வேறு உடல் நல நன்மைகளை தருவதாக உறுதி செய்கின்றன.


முக்கியமான குறிப்புகள்:-


ஓமத் திரவம் எப்படி தயாரிப்பது?

ஒரு டம்ளர் நீரில், 1 டீஸ்பூன் ஓமம் சேர்த்து, நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். இது காலை நேரத்தில் குடித்தால் மிக அதிக நன்மை கிடைக்கும்.

ஓமத் திரவத்தின் முக்கிய நன்மைகள் – மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி விளக்கம்

1. செரிமானத்தை வேகமாக்கும்

அதிகமாக சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு வரும். இதை இயற்கையாக சரிசெய்ய ஓமத் திரவம் சிறந்த மருந்து என மருத்துவர் கூறுகிறார்.

2. அஜீரணக் கோளாறு தீரும்

வயிறு எரிச்சல், உப்புசம், வாயுத்தொல்லை போன்றவை விரைவில் குறையும்.

3. குழந்தைகளின் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு

பசி தூண்டி, உணவு உள்வாங்கலை அதிகரிக்கும்.

4. வயிற்றுப்புண், வயிற்று வலி குறையும்

ஓமம் கொண்டுள்ள தைம் (Thymol) கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

இந்த பதிவும் உதவலாம்: ஓமம் தண்ணீரை யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா? அதை குடிப்பதற்கான சரியான நேரம் இது தான்..

5. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்

நாள்பட்ட உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது உடல் சமநிலையை பாதுகாக்க உதவும் என மருத்துவர் கூறுகிறார்.

6. மோசமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்தி உடலில் உள்ள தீய கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது.

7. குழந்தைகளின் மூச்சுக்குழாய் அழற்சி குறையும்

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருக்கும் போது, ஓமத்தை கொதிக்க வைக்கும் போது கற்பூரவல்லி இலையின் மருத்துவ பண்புகள் கிடைக்கும் என்பதை அறிவியல் நிச்சயப்படுத்தியுள்ளது.

8. வறட்டு இருமலுக்கு உடனடி நிவாரணம்

இரவு நேரங்களில் தூக்கம் கெடுக்கும் வறட்டு இருமலுக்கு ஓமத் திரவம் மிகச் சிறந்த நிவாரணி. Bronchoconstriction-னால் உருவாகும் இருமலை குறைக்க உதவும்.

9. ஆஸ்துமா அறிகுறிகளை கட்டுப்படுத்தும்

ஓமம், ஆஸ்துமா மருந்து போன்ற செயல்பாடு கொண்டுள்ளது. மூச்சுக்குழாய் குறுகலை குறைத்து சுவாசத்தை இலகுவாக்குகிறது.

10. குழந்தைகளுக்கு இயற்கை ‘தடுப்பு மருந்து’

சளி–இருமல் அடிக்கடி வராதபடி, குழந்தைகளுக்கு 2 வயதிற்கு மேல் 5 ml அளவில், நாளுக்கு 2 முறை கொடுக்கலாம்.

View this post on Instagram

A post shared by Dr Prakash Murthy MBBS MD (@drprakashmurthymbbs_md)

மருத்துவர் பரிந்துரை

  • பெரியவர்கள்: அஜீரணக் கோளாறுகள், வயிறு பிரச்சனைகளில் தினசரி குடிக்கலாம்
  • குழந்தைகள்: சளி–இருமல், மூச்சு தொற்று உள்ளபோது மிகவும் பயனளிக்கும்

இறுதியாக..

ஓமத் திரவம் ஒரு பாரம்பரியமான, அறிவியல் ஆதாரமுள்ள இயற்கை வைத்தியம். செரிமானத்தில் இருந்து ஆஸ்துமா வரை பல்வேறு பிரச்சனைகளில் இது உடன் நிவாரணம் வழங்குகிறது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சமமாக பயன்படும் இந்த ஓமத் திரவத்தை தினசரி பழக்கமாக்கினால் பல நன்மைகள் கிடைக்கும்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டும். இது எந்தவொரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாகாது. உடல் நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வீடியோ தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டதால் துல்லியத்துக்கு எழுத்தாளர் பொறுப்பேற்கவில்லை.

Read Next

சொரியாசிஸ் முதல் தீராத பொடுகு வரை.. சித்த மருத்துவம் கூறும் நீண்டகால சரும நோய்களுக்கு இயற்கை தீர்வுகள்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 11, 2025 00:08 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்