Expert

சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்கும் டாப் 5 மூலிகைகள்.. எப்படி பயன்படுத்துவது? நிபுணர் தரும் விளக்கம்

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு அன்றாட உணவில் சில மூலிகைகளைச் சேர்க்கலாம். இதில் இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மூலிகைகளையும், அது எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்கும் டாப் 5 மூலிகைகள்.. எப்படி பயன்படுத்துவது? நிபுணர் தரும் விளக்கம்


இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் சில உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இன்று பலரும் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உடலில் இரத்த சர்க்கரை அதிகரிப்பு அடங்குகிறது. இர்த்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க அன்றாட உணவில் சில மூலிகைகளைச் சேர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

இதில் எந்தெந்த மூலிகைகள் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது மற்றும் அது எவ்வாறு உதவுகிறது மற்றும் அதன் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் மூலிகைகள்

உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ள மூலிகைகள் சிலவற்றைக் காணலாம். அது குறித்து அவர் கூறியதாவது,”இந்த பண்டிகை காலத்தில் கொஞ்சம் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டீர்களா?. கவலைப்பட வேண்டாம் - சில சக்திவாய்ந்த இந்திய மூலிகைகள் மூலம் உங்கள் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்தி, இயற்கையாகவே பசியைக் குறைக்கலாம்” என குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், சர்க்கரை உட்கொள்ளல் அதிகரிக்கும் போது, உடல் குளுக்கோஸ் அதிகரிப்பு, இன்சுலின் குறைவு மற்றும் சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் பசியை அனுபவிக்கிறது. இந்த 5 மூலிகைகள் இயற்கையாகவே சமநிலையை மீட்டெடுக்க உதவுகின்றன” என்றும் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் எடை குறைக்கும் போது செய்யக்கூடாத  பெரிய தவறுகள்.. நிபுணர் எச்சரிக்கை.!

இலவங்கப்பட்டை (டால்சினி)

இலவங்கப்பட்டையில் இன்சுலின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இவை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகின்றன. எனவே இவற்றை எடுத்துக் கொள்வது, உணவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய குளுக்கோஸ் அதிகரிப்பைக் குறைக்கிறது. இந்நிலையில், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இலவங்கப்பட்டையைச் சேர்க்கலாம்.

எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் நேரம்

தினமும் ½ முதல் 1 டீஸ்பூன் வரையிலான இலவங்கப்பட்டையை, காலை உணவில், ஒரு ஸ்மூத்தியில் அல்லது வெதுவெதுப்பான நீர்/தேநீரில் கலக்க வேண்டும்.

வெந்தய விதைகள் (மேத்தி)

வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் 4-ஹைட்ராக்ஸிஐசோலூசின் போன்றவை நிறைந்துள்ளன. இவை கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. மேலும் இது இன்சுலின் வெளியீட்டைத் தூண்டுகிறது மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் நேரம்

1 டீஸ்பூன் அளவிலான வெந்தய விதைகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின், இதை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை (மற்றும் விதைகளை) உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள் (ஹால்டி)

மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரல் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும், குளுக்கோஸ் உறிஞ்சுதலை அதிகரிக்கவும், வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடலில் இரத்த குளுக்கோஸைக் குறைக்கலாம். மேலும், ப்பு மிளகு மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் இதை இணைப்பது அதன் செயல்திறனை அதிகரிக்கிறது.

எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் நேரம்

படுக்கை நேரத்தில் சூடான பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் + ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து குடிப்பது நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Herbal Foods For Diabetes: இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இவற்றை சாப்பிடுங்க!

துளசி (புனித துளசி)

துளசி ஒரு அடாப்டோஜெனாகக் கருதப்படுகிறது. மேலும் இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆக்ஸிஜனேற்ற பாதைகள் வழியாக குளுக்கோஸ் ஒழுங்குமுறையை ஆதரிப்பதிலும் அதன் பங்கிற்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது மன அழுத்தத்தால் ஏற்படும் சர்க்கரை பசியைக் குறைக்கிறது.

எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் நேரம்

5-6 புதிய துளசி இலைகளுடன் தேநீர் காய்ச்ச வேண்டும். இதை உணவுக்கு இடையில் குடிக்கலாம். குறிப்பாக, சர்க்கரை பசி ஏற்படும் போது மதியம் நடுப்பகுதியில் குடிப்பது நன்மை பயக்கும்.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

குர்மர் (ஜிம்னிமா சில்வெஸ்ட்ரே)

"சர்க்கரை அழிப்பான்" என்றழைக்கப்படும் குர்மர் இனிப்பு பசியைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை உறிஞ்சுதலைக் குறைக்கிறது. ஏனெனில், ஜிம்னீமாவில் ஜிம்னீமிக் அமிலங்கள் உள்ளன. இவை இனிப்பு சுவை ஏற்பி சமிக்ஞையை தற்காலிகமாக அடக்கி, குடல் குளுக்கோஸ் உறிஞ்சுதலைக் குறைக்கிறது. மேலும் இது கணைய இன்சுலின் செயல்பாட்டிற்கும் உதவக்கூடும்.

எடுத்துக் கொள்ளும் அளவு மற்றும் நேரம்

1 டீஸ்பூன் குர்மர் பொடியை 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து, சர்க்கரை உறிஞ்சுதலைக் குறைக்க உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த மூலிகைகள் பசியை மட்டும் கட்டுப்படுத்தாது. இவை உங்கள் வளர்சிதை மாற்றத்தை மீட்டெடுக்கவும், ஆற்றல் நாள் முழுவதும் சீராக இருக்கவும் உதவுகின்றன.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: அதிகரிக்கும் சர்க்கரையை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும் சூப்பர் மூலிகைகள் இதோ

Image Source: Freepik

Read Next

நீரிழிவு நோயாளிகள் எடை குறைக்கும் போது செய்யக்கூடாத பெரிய தவறுகள்.. நிபுணர் எச்சரிக்கை.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 14, 2025 16:49 IST

    Published By : கௌதமி சுப்ரமணி