Fri Sep 11, 2026 | 11:12 PM IST

Doctor Verified

இந்த வயது வரை உள்ள பெண்களுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசிகள்.. இது ஏன் முக்கியம் தெரியுமா?

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசமாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதில் அது குறித்த விவரங்களையும், இந்த தடுப்பூசி ஏன் முக்கியம் என்பது குறித்தும் காணலாம்

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் தீவிரமான நோயாக புற்றுநோய் போன்றவையும் இன்று நாள்பட்ட நோய்களாக மாறிவிட்டன. புற்றுநோயைப் பொறுத்த வரை ஏராளமான புற்றுநோய் வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, பெண்களைப் பாதிப்புள்ளாக்கும் புற்றுநோய் வகைகள் பல உள்ளது.

அவ்வாறு, இன்று பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்படும் ஒரு பொதுவான புற்றுநோயாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அமைகிறது. மகிழ்ச்சி தரும் விஷயமாக, இந்த புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் தடுப்பூசியை 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து ஈரோடு, குழந்தை நல ஆலோசகர் மற்றும் உணவுமுறை ஆலோசகர் டாக்டர் அருண்குமார், எம்.டி. (குழந்தை மருத்துவம்), பிஜிபிஎன் (Boston) அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

தமிழ்நாட்டில் இலவச தடுப்பூசி

மருத்துவர் அருண்குமார் கூறியதாவது, தமிழக அரசு பட்ஜெட் தாக்கலில் ஒரு முக்கிய அறிவிப்பாக, 14 வயதுக்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவசமாக கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியை செலுத்த அறிவிப்பு வெளியானது. இந்த தடுப்பூசியானது HPV தடுப்பூசி ஆகும். இந்தியாவில், பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய புற்றுநோய்களில் முதலாவதாக, மார்பக புற்றுநோய் அமைகிறது. இரண்டாவது இருப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: புற்றுநோயைத் தடுக்கும் 8 அற்புத பானங்கள்.! ஹார்வர்ட் நிபுணர் பகிர்ந்த தகவல்..

இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு Human Papilloma Virus காரணமாக அமைகிறது. இதில் முக்கியமாக, HPV 16 மற்றும் 18 வகைகள் என இரு வகைகள் உள்ளன. இவையே இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. இதைத் தடுக்க தடுப்பூசிகள் கிடைக்கிறது. எல்லா கேன்சருக்கும் தடுப்பூசி இல்லை என்றாலும், இந்த வகை புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உள்ளன. இந்த தடுப்பூசியானது நீண்ட நாள் பாதுகாப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர் கூறுகிறார்.

ஆனால், இதுவரை இந்த தடுப்பூசிகள் தனியார் வாயிலாகக் கிடைத்ததால், சாதாரண மக்களுக்கு இது எளிதில் கிடைக்கவில்லை என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். தற்போது அரசின் வழிகாட்டுதலால் இப்போது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி, 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும்.

இது குறித்து மேலும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது,"HPV தடுப்பூசி என்பது மனித பாப்பிலோமா வைரஸின் சில வகைகளால் ஏற்படும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு தடுப்பு தடுப்பூசி ஆகும், முதன்மையாக HPV வகைகள் 16 மற்றும் 18, இவை உலகளவில் 95 சதவீதத்திற்கும் அதிகமான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன. இந்த தடுப்பூசி HPV-யுடன் தொடர்புடைய பிற புற்றுநோய்களான யோனி, வல்வார், ஆசனவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகளில், ஒவ்வொரு HPV டோஸுக்கும் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை செலவாகும், இது மாநிலத்தின் இலவச தடுப்பூசி இயக்கத்தை சமமான சுகாதாரப் பராமரிப்பை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படியாக ஆக்குகிறது. WHO வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நமது எதிர்கால சந்ததியினரை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க இந்த முயற்சியை நாங்கள் செயல்படுத்துகிறோம்," என்று சுப்பிரமணியன் கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: இதய நோயிலிருந்து புற்றுநோய் வரை.. சப்பாத்திக்கள்ளி பழம் தரும் நன்மைகள் – மருத்துவர் மைதிலி விளக்கம்.!

₹38 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அறிவியல் ஆதரவுடன் தடுப்பூசிகள் மூலம் புற்றுநோய் தடுப்பை அதிகரிக்க மாநிலம் இலக்கு வைத்துள்ளது. ஆரம்பகால தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நீண்டகால நல்வாழ்வு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் மூலம் சமூகங்களை மேம்படுத்துகிறது.

View this post on Instagram

A post shared by The Logical Indian (@thelogicalindian)

இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒரு மாதிரி

தொலைநோக்குடைய தலைமை மற்றும் சமூக ஈடுபாட்டால் வழிநடத்தப்படும் இந்தத் திட்டம், மற்ற மாநிலங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த முன்மாதிரியாக அமைகிறது. வாழ்க்கை முறை கல்வியுடன் காசநோயை இணைப்பது நாடு தழுவிய அளவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை மேம்படுத்துகிறது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

  • இந்தியப் பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது, இது ஆண்டுதோறும் 77,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்துகிறது, இதில் பெரும்பாலானவற்றை சரியான நேரத்தில் தடுப்பூசி மற்றும் பரிசோதனை மூலம் தடுக்க முடியும்.
  • தமிழ்நாட்டின் திட்டம் சிகிச்சையை விட புற்றுநோய் தடுப்பு நோக்கி ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, பொது சுகாதார முயற்சிகளில் ஒரு தேசிய மாதிரியாக செயல்படுகிறது.
  • இந்த முயற்சி 2030 ஆம் ஆண்டுக்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்கும் உலக சுகாதார அமைப்பின் இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிமொழியை வலுப்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 4 தொற்றுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.!  தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்..

Image Source: Freepik

Read Next

இந்த 4 தொற்றுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும்.! தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 28, 2025 12:28 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content