
இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த வரிசையில் இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஆனது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க அன்றாட வாழ்வில் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர்.
முக்கியமான குறிப்புகள்:-
அதில் ஒன்றாக உணவுமுறையைக் கையாள்வது அடங்குகிறது. இரத்த சர்க்கரையைக் கையாள்வதற்கு ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றுவது அவசியமாகும். இந்நிலையில், இரத்த சர்க்கரையை சீராக வைக்க மற்றொரு வழியாக இன்சுலின் ஊசியை பயன்படுத்துகின்றனர். ஆனால் இன்சுலின் ஊசி பயன்படுத்திய பிறகும் பலருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை நாம் பார்த்திருப்போம். மீண்டும் மீண்டும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது வகை 2 நீரிழிவு, இருதய நோய் மற்றும் நரம்பு பாதிப்பு போன்ற கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
எனினும், அதிர்ஷ்டவசமாக, இன்சுலின் செயல்படுத்திய பிறகும், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கு மூலிகை உட்செலுத்துதல் உதவுகிறது. இந்த மூலிகை பானம் தயாரிப்பு குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இன்சுலின் செயல்படுத்திய பிறகு உயர் இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மூலிகை பானம்
இன்சுலின் செயல்படுத்திய பிறகும், அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்கு சிறந்த மூலிகை பானம் தயார் செய்யும் முறை குறித்து பகிர்ந்துள்ளார்.
நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, இன்சுலினுக்குப் பிறகும் அதிக சர்க்கரையுடன் போராடுகிறீர்களா? இந்த எளிய மூலிகை உட்செலுத்துதல் இயற்கையாகவே சிறந்த கட்டுப்பாட்டை ஆதரிக்கும். இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ரோஸ்மேரி... இவை அனைத்தும் உங்கள் உடலை சமநிலைப்படுத்த அமைதியாக வேலை செய்கின்றன.
நாள் முழுவதும் அருந்துவது மற்றும் மருந்துகளைத் தொடர்பு கொள்வது போன்றவை நிலையான சர்க்கரை & நிலையான ஆற்றலுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன? அதை எவ்வாறு சோதிப்பது?
மூலிகை பானம் தயார் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
- 1 லிட்டர் தண்ணீர்
- 2-3 நட்சத்திர சோம்பு
- 1 தண்டு ரோஸ்மேரி
- 1 தேக்கரண்டி கிராம்பு
- 2 அங்குல இலவங்கப்பட்டை குச்சி
தயாரிக்கும் முறை
- இதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் தண்ணீரில் சேர்க்க வேண்டும்.
- இதை 5-6 மணி நேரம் ஊற வைக்கலாம்.
- பின்னர் இதை வடிகட்ட வேண்டும்.
குடிக்கும் முறை
- இந்த மூலிகை பானத்தை நாள் முழுவதும் கப் கப் ஆக குடிக்கலாம்
உயர் இரத்த சர்க்கரையைக் குறைக்க இது எவ்வாறு உதவுகிறது
- இலவங்கப்பட்டை சேர்ப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது
- கிராம்பு சேர்ப்பதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம்
- நட்சத்திர சோம்பு ஆனது உணவுக்குப் பிறகு ஏற்படும் சர்க்கரை அதிகரிப்பைக் குறைக்க உதவுகிறது
- ரோஸ்மேரியைச் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கிறது
யார் இதைப் பயன்படுத்தலாம்?
இந்த பானத்தை கீழே கொடுக்கப்பட்ட நபர்கள் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
- அதிக சர்க்கரை உள்ளவர்கள்
- இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள்
- PCOS, எடை அதிகரிப்பு, பசி உள்ளவர்கள்
- சிறந்த வளர்சிதை மாற்றத்தை விரும்பும் நபர்கள் எடுத்துக் கொள்ளலாம்
நினைவூட்டல்
மேலும் மருத்துவர் சிறந்த நினைவூட்டலைப் பகிர்ந்துள்ளார்.
- அவர் மருந்துகளைத் தொடர வேண்டும்.
- இது ஒரு இயற்கையான ஆதரவு, மாற்றீடு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 05, 2025 15:46 IST
Published By : கௌதமி சுப்ரமணி