Doctor Verified

பெற்றோர்களே! உங்க குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தா எலும்பு புற்றுநோய் இருக்குனு அர்த்தம்

Early signs of bone cancer in children parents should know: குழந்தைப் பருவத்தில், எலும்பு வலி, வீக்கம், நடப்பதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவை எலும்புப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே சரியான நேரத்தில் அடையாளம் காண்பது மிகவும் முக்கியமாகும்.
  • SHARE
  • FOLLOW
பெற்றோர்களே! உங்க குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தா எலும்பு புற்றுநோய் இருக்குனு அர்த்தம்


Common symptoms of bone cancer in kids: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக கேன்சர் மாறிவிட்டது. ஆம். குழந்தைப் பருவம் மிகவும் சிறப்பு வாய்ந்த காலமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலத்தில், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. எனவே, எனவே பெற்றோர்கள் குழந்தையில் காணப்படும் ஏதேனும் அசாதாரண அறிகுறிகளையும் கவனத்தில் செலுத்துவது அவசியமாகும். குறிப்பாக, குழந்தைகள் மீண்டும் மீண்டும் எலும்பு வலியைப் பற்றி புகார் செய்தால், நடக்க சிரமப்பட்டால் அல்லது இரவில் வலியால் அழுது கொண்டிருந்தால், இது ஒரு எளிய வளர்ச்சி வலி மட்டுமல்ல. இது ஒரு கடுமையான பிரச்சனையின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

இது குறித்து, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனை மேலாண்மைத் தலைவர் டாக்டர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் அவர்கள் கூறுகையில், “எலும்பு புற்றுநோய் குழந்தைகளில் அரிதானது. ஆனால் இது ஏற்படும் போது, அது மிக வேகமாக வளர்ந்து உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடம் ஆஸ்டியோசர்கோமா மற்றும் எவிங் சர்கோமா போன்ற எலும்பு புற்றுநோய்கள் காணப்படுகிறது. எனவே, எலும்பு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவது முக்கியமாகும்.” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்நிலை புறக்கணிக்கப்பட்டால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான 7 அறிகுறிகள் என்ன என்பது குறித்து இதில் அறிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் வயதுக்கு ஏற்ப தினமும் உடலுக்கு எவ்வளவு கால்சியம் தேவைப்படும்? - முழு விவரம் இங்கே!

குழந்தை பருவத்தில் எலும்பு புற்றுநோய் அறிகுறிகள்

எலும்பில் வீக்கம் அல்லது கட்டி

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக வீக்கம், கடினமான கட்டிகள் அல்லது எலும்பு அல்லது மூட்டைச் சுற்றி காயம் இல்லாமல் வீக்கம் போன்றவை ஏற்படக்கூடும். இந்த வீக்கம் மெதுவாக வளரக்கூடியது மற்றும் தொடும்போது வலியையும் ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியான எலும்பு வலி

குறிப்பாக எந்த காயமும் இல்லாமல் இருக்கும் போது, குழந்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து வலி இருப்பதாக கூறி வந்தால் அது சாதாரணமானது அல்ல. இந்த வலி குறிப்பாக இரவில் அதிகரித்து தூக்கத்தைத் தொந்தரவு செய்யக்கூடும். எலும்பு வலியானது வலி வலி நிவாரணிகளால் கூட குணமாகவில்லை எனில், மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

காயம் இல்லாமல் திடீர் எலும்பு முறிவு

குழந்தையின் எலும்புகள் நேரடியாக காயமடையாமலோ அல்லது விழுவதாலோ உடையும் சூழ்நிலை ஏற்பட்டால், இந்நிலையில், எலும்பு வலிமை குறைந்து, உள்ளே புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியைக் காட்டலாம். எலும்பு புற்றுநோய் ஏற்படுவதன் காரணமாக எலும்புகள் பலவீனமடையக்கூடும்.

குழந்தைகளில் சோர்வு மற்றும் பலவீனம்

குழந்தை எப்போதும் சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர்ந்தால், குறிப்பாக, விளையாடிய பிறகு அல்லது லேசான உடல் செயல்பாடுகளுக்குப் பிறகு சோர்வு அல்லது பலவீனம் இருப்பின், அது உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதற்கான அறிகுறியைக் குறிக்கிறது. இது தவிர, நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் தாக்கமாகவும் இருக்கலாம்.

இரவில் எலும்பு வலி

குழந்தை அடிக்கடி இரவில் எழுந்தால், குறிப்பாக, எலும்பு வலியின் காரணமாக அவர்கள் விழித்தெழுந்தால் வலி காரணமாக அழ ஆரம்பிப்பார்கள். எனவே இதை சாதாரண வலியாகப் புறக்கணிக்கக்கூடாது. இது ஆஸ்டியோசர்கோமா போன்ற ஒரு நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களில் எலும்பு இரும்பு போல் ஸ்ட்ராங்க் ஆகனுமா? - இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க...!

நடப்பதில் அல்லது இயக்கத்தில் சிரமம்

குழந்தை நடக்கும்போது நொண்டி நடந்தால், அல்லது ஓடுவதிலோ அல்லது ஏறுவதிலோ சிரமம் ஏற்பட்டால், இது தசை பலவீனமாக இருக்காது. ஆனால் உட்புற எலும்பு பிரச்சனையாக இருக்கலாம். எனவே இத்தகைய அறிகுறிகளை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

விவரிக்கப்படாத காய்ச்சல் மற்றும் எடை இழப்பு

எலும்புப் புற்றுநோயின் அறிகுறிகளில், அடிக்கடி லேசான காய்ச்சல், விவரிக்க முடியாத எடை இழப்பு அல்லது பசியின்மை போன்றவை அடங்கும். வலி அல்லது வீக்கம் சேர்ந்து வரும்போது இந்த அறிகுறிகள் மிகவும் தீவிரமாகக்கூடும்.

பெற்றோர்கள் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

பெற்றோர்கள் இந்த குறிப்பிட்ட நேரங்களில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • குழந்தை ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் வலி இருப்பதாக புகார் கூறும்போது.
  • வலி வாரக்கணக்கில் நீடித்து, வீட்டு வைத்தியத்தால் குணமாகவில்லை எனும் போது
  • ஒரு எக்ஸ்ரே எலும்பில் ஏதாவது அசாதாரணத்தைக் காட்டும்போது.
  • வலி வீக்கம், நொண்டி அல்லது கட்டியுடன் இருக்கும்போது.
  • குழந்தை திடீரென சோர்வாக உணர ஆரம்பித்தால் அல்லது காய்ச்சலால் அவதிப்பட்டால்.

பெற்றோர்கள், இதுபோன்ற அறிகுறிகளை கவனித்தால், உடனடியாக ஒரு குழந்தை மருத்துவர் அல்லது எலும்பியல் மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால், மருத்துவர் MRI, CT ஸ்கேன் அல்லது பயாப்ஸி போன்ற சோதனைகளை பரிந்துரைக்கலாம்.

இந்த சோதனைகளின் மூலம் குழந்தை பருவ எலும்புப் புற்றுநோய் விரைவில் கண்டறியப்பட்டால், குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் அறிகுறிகள் சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அவை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரை அணுகுவதை தள்ளி வைக்கக்கூடாது.

இந்த பதிவும் உதவலாம்: 60 வயதிலும் ஃபிட்டா மாஸ் காட்டனுமா? உங்க உணவு தேர்வு இப்படி இருக்கணும்.!

Image Source: Freepik

Read Next

புறக்கணிக்கக் கூடாத 8 கொடிய பெருங்குடல் புற்றுநோய் அறிகுறிகள்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version