$
தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day) நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் நடத்தப்படுகிறது. மேலும், தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அவற்றை எடுக்காததால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
என்ன தடுப்பூசிகள் எடுக்க வேண்டும்? எந்த வயதில் தடுப்பூசி போட வேண்டும் என்பது குறித்தும் நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர். இந்த நாளை கொண்டாடுவதற்கான காரணங்கள் என்ன? இந்த ஆண்டு தீம் என்ன? தடுப்பூசியின் முக்கியத்துவம் போன்ற விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

தேசிய தடுப்பூசி தினத்தின் வரலாறு (National Vaccination Day History)
மார்ச் 16, 1995 அன்று, ஜோனாஸ் சால்க் போலியோவுக்கு முதல் தடுப்பூசியை உருவாக்கினார். வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் டோஸ் இந்தியாவில் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வாய்வழி போலியோ சொட்டு மருந்து, நாட்டிலிருந்து போலியோவை ஒழிப்பதற்கான அரசின் பல்ஸ் போலியோ திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மார்ச் 27, 2014 அன்று அறிவித்தது. விரும்பிய முடிவுகளை அடைந்த போதிலும், இந்தியா, வேறு சில நாடுகளுடன் சேர்ந்து, முழுமையான போலியோ ஒழிப்பை அடைய தடுப்பூசி பிரச்சாரங்களைத் தொடர முடிவு செய்தது. இதன் அடிப்படையில் மார்ச் 16 தேதி தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day) உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க: National Vaccination Day: பெரியவர்கள் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள் இவை தான்…
இந்த வருடத்தின் கருப்பொருள் இதுதான் (National Vaccination Day 2024 Theme)
தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளைக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தேசிய தடுப்பூசி தினம் 2024 இன் கருப்பொருள் "பாலினம், சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் தடுப்பூசிகள் அனைவருக்கும் வேலை செய்யும்" என்பதாகும். இந்திய குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளின் அவசியத்தை இந்த தீம் எடுத்துக்காட்டுகிறது.
தடுப்பூசிகள் ஏன் அவசியம் (National Vaccination Day Significance)
பல வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் உதவுகின்றன. இது தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தடுப்பூசிகள் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. மேலும், தடுப்பூசி என்பது பொது சுகாதார நடவடிக்கையாகும். இது உயிர்களைக் காப்பாற்றுகிறது. தொற்றுநோய்களின் நீண்டகால ஆரோக்கிய விளைவுகளைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தடுப்பூசிகள் ஆன்டிஜென்களை எதிர்த்துப் போராடவும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றன.

அன்று முதல் இன்று வரை..
பல உயிர்களை பலிவாங்கிய பெரியம்மை நோயை நிறுத்துவதில் தொடங்கி, சமீபகாலமாக உயிர்களை பலிவாங்கிய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியால் மட்டுமே முடிந்தது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொடிய நோய்களில் இருந்து மக்களை காக்கும். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் சில தடுப்பூசிகளைப் போட வேண்டும். சில கொடிய நோய்களைத் தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version