கேரளாவில் H1N1 பறவை காய்ச்சல்.. கோழி, வாத்து இறைச்சி விற்பனைக்கு தடை

கேரளாவின் ஆலப்புழை மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் H1N1 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழி, வாத்து, காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • SHARE
  • FOLLOW
கேரளாவில் H1N1 பறவை காய்ச்சல்.. கோழி, வாத்து இறைச்சி விற்பனைக்கு தடை

கேரள மாநிலத்தின் ஆலப்புழை மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் (H1N1 Avian Influenza) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கோழி, வாத்து மற்றும் காடை பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் தொடர்ந்து செத்து மடிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


முக்கியமான குறிப்புகள்:-


ஆய்வில் உறுதி செய்யப்பட்ட பறவை காய்ச்சல்

செத்து மடிந்த கோழி மற்றும் வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், H1N1 வகை பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆலப்புழை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள்

ஆலப்புழை மாவட்டத்தில்

  • நெடுமுடி
  • செருத்தானா
  • கருவட்டா
  • கார்த்திகப்பள்ளி
  • அம்பலப்புழா தெற்கு
  • புன்னப்ரா தெற்கு
  • தகழி
  • புறக்காடு

ஆகிய பஞ்சாயத்துகளில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது. இதில், நெடுமுடியில் கோழிகளுக்கும், மற்ற பகுதிகளில் வாத்துகளுக்கும் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Bird Flu: பரவி வரும் பறவைக் காய்ச்சலுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

கோட்டயம் மாவட்டத்திலும் நோய் உறுதி

இதுபோல், கோட்டயம் மாவட்டத்தின்

  • குருபந்தரா
  • மஞ்சூர்
  • கல்லுபுரக்கல்
  • வேலூர் வார்டு

பகுதிகளில் கோழிகள் மற்றும் காடைகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை

நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, வாத்து, காடை இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பண்ணைகளில் வளர்க்கப்பட்டுள்ள பறவைகளை மொத்தமாக அழிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் எச்சரிக்கை

கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக..

கேரளாவின் முக்கிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு இடமளிக்காமல், அரசு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். நோய் பரவலை கட்டுப்படுத்த, இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி அரசு மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அரசு அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read Next

குடல் சம்பந்தமான இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே சரி செய்ய உதவும் சிம்பிள் டிப்ஸ்.. நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 24, 2025 10:44 IST

    Published By : Ishvarya Gurumurthy