உப்பு உட்கொள்வது நீரிழிவு நோயை அதிகரிக்கும் என்று சமீபத்திய அமெரிக்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உப்பு நுகர்வு அதிகரித்தால், வகை 2 நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது.
தவறான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் சமீபத்திய அமெரிக்க ஆய்வில் உப்பு அதன் ஆபத்தை அதிகரிக்கும் என்று கண்டறிந்துள்ளது.
முக்கிய கட்டுரைகள்
உப்பு நுகர்வு சர்க்கரையை அதிகரிக்குமா?
உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக்கொள்வது டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை மேயோ கிளினிக் வெளியிட்டுள்ளது.
ஆய்வு ஆராய்ச்சியாளர்கள் UK Biobank இன் தரவைப் பயன்படுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள 4,02,982 நீரிழிவு நோயாளிகள் அல்லாத பெரியவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுகாதாரத் தகவல்களின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களை சராசரியாக 11.9 ஆண்டுகள் பின்தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: தேன் அல்லது வெல்லம்: சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானது எது?
இந்த நேரத்தில், அவர்களில் 13,006 பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட்டது. சமையலில் சேர்க்கப்படும் உப்பைத் தவிர்த்து, எத்தனை முறை உணவில் உப்பைச் சேர்க்கிறார்கள் என்று பங்கேற்பாளர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுள்ளனர். சிறுநீரில் உள்ள சோடியம் (உப்பின் ஒரு கூறு) அளவும் அளவிடப்படுகிறது, இது உப்பு உட்கொள்ளலை மதிப்பிடுவதற்கான மிகவும் துல்லியமான வழியாகும்.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
உணவில் உப்பைக் குறைவாகச் சேர்ப்பவர்களைக் காட்டிலும், உப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிறுநீரில் சோடியம் அதிகம் உள்ளவர்களுக்கு, குறைந்த சோடியம் உள்ளவர்களைக் காட்டிலும் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆய்வு உப்பால் டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கவில்லை, அவற்றுக்கிடையேயான தொடர்பை மட்டுமே கண்டறிந்துள்ளது.
உணவு, வாழ்க்கை முறை, மரபியல் அல்லது பிற சுகாதார நிலைமைகள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை பாதிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் ஆய்வில் பங்கேற்றவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொதுவாக உணவில் உப்பு அதிகம் சேர்க்கப்படுவதால், இரத்த குளுக்கோஸ் அளவு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மட்டுமே கணக்கெடுத்துள்ளனர்.
கார்டிசோல்:
கார்டிசோல் ஹார்மோனை பாதிப்பதன் மூலம் உப்பு டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதேபோல் கார்டிசோல் இன்சுலின் ஹார்மோனிலும் தலையிடுவதால், இது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
வடைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க இன்சுலின் தேவைப்படுகிறது. டைனிங் டேபிளில் இருந்து சால்ட் ஷேக்கரை அகற்றுவது டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் என்று ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
டைப் 2 நீரழிவு நோய்க்கு உப்பு முக்கிய காரணம் என்பதை குறித்தாலும், உப்பை குறைத்துக்கொள்வதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும் என்பதை ஆதாரப்பூர்வ சான்றுகள் அல்லது ஆய்வு முடிவுகளின் படி உறுதிப்படுத்த முடியவில்லை.
ஒரு தேக்கரண்டிக்கு மேல் வேண்டாம்:
தேசிய சுகாதார சேவை (NHS) மக்கள் தினசரி உப்பை 6 கிராமுக்கு மேல் எடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறது, அதாவது ஒரு தேக்கரண்டி.
ரொட்டி, பாலாடைக்கட்டி, ஹாம், சாஸ்கள் மற்றும் சிற்றுண்டிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து பெரும்பாலான மக்கள் அதிக அளவிலான உப்பை உட்கொள்கின்றனர். எனவே, உணவில் குறிப்பாகச் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் குறைப்பது மொத்த உப்பு உட்கொள்ளல் அல்லது டைப் 2 நீரிழிவு அபாயத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்க, சீரான உணவை உண்ணுங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும், புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
Image Source: Freepik