Sat Sep 12, 2026 | 02:48 AM IST

Doctor Verified

திருமணத்திற்குப் பின் இதுல தான் அதிகம் பிரச்சனை வரும். எப்படி தவிர்க்கலாம்?

Ways To Share Financial Responsibilities With Partner: திருமணத்திற்குப் பின் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்கும் உள்ளது. அந்த வகையில் நிதிப்பொறுப்பைக் கையாள்வது முக்கியமாகும். இன்றைய காலகட்டத்தில் நிதிப்பொறுப்பின் சுமை, கணவன், மனைவி இருவரும் பணிபுரியும் சூழலாக மாறிவிட்டது. இதில் எந்த பிரச்சனையும் வராமல் வீட்டுச் செலவுகளை எப்படி பிரித்துக் கொள்வது என்பது குறித்து லக்னோவின் போதித்ரி இந்தியா மையத்தில் ஆலோசனை உளவியலாளர் டாக்டர் நேஹா ஆனந்த் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

மருத்துவரின் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பின் நிதிப் பொறுப்பைக் பகிர்ந்து கொள்வது, உறவை வலுப்படுத்துவதுடன், ஒருவரையொருவர் நம்பவும் வைக்கச் செய்கிறது. நிதிப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்ட பிறகும், வருமானம் மற்றும் கணக்குகள் மீதான முழு உரிமையும் இருவரிடமும் இருக்க வேண்டும். இதில் நிதிப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Relationship Tips: ஆரோக்கியமான உறவை பராமரிப்பதற்கான சிறந்த வழிகள்

நிதிப் பொறுப்பை பகிர்ந்து கொள்வது எப்படி?

சம்பளம் மற்றும் கணக்கில் முழு உரிமை

திருமணத்திற்குப் பின் கணவன், மனைவி இருவரின் சம்பளம் மற்றும் கணக்கில் முழு உரிமையைத் துணைக்கு வழங்கக் கூடாது. இது அவர்களுக்கு இடையே பிரச்சனை வர காரணமாக அமைகிறது. உங்கள் வருமானம் மற்றும் கணக்கில் உங்களுக்கு முதல் உரிமை உள்ளது. அதன் பிறகே உங்கள் கணக்கிற்கான அணுகலை உங்கள் கூட்டாளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், பணம் அல்லது கணக்கின் விவரங்களைப் பயன்படுத்த முழு அனுமதி வழங்குவது சரியாக இருக்காது.

வருவாயின் அடிப்படையில் பகிர்வு முடிவுகள்

திருமணத்திற்குப் பிறகு நிதிப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது இருவருக்கும், செலவினங்களை சமமாகச் சுமக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. நீங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, பணத்தை அல்ல. அதாவது கூட்டாளியின் வருமானம், உங்களுடையதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். அப்படியெனில், மொத்த வருமானத்தின் சதவீதத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வருமானத்தில் 2% சேமிப்பு

செலவு செய்வதற்கு முன் சேமி என்று கூறுவர். அதன் படி, திருமணத்திற்கு பின் உங்கள் வருமானத்தில் இரண்டு சதவீதத்தை திரும்பப் பெற்று, அதை கூட்டுக் கணக்கில் வைக்க வேண்டும். கணவன், மனைவி கூட்டுக் கணக்கிலிருந்து, யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். ஆனால், செலவுகள் தவிர சேமிப்புத் திட்டத்தையும் பின்பற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Marriage Life Problems Solution: உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் பிரச்சனையா? இப்படி செய்யுங்க

தனிப்பட்ட செலவுகளுக்குத் தொந்தரவு செய்யாமல் இருப்பது

திருமணத்திற்குப் பின் நிதிப் பொறுப்பின் சுமை எந்த ஒரு துணை மீதும் அதிகம் விழக் கூடாது. எவ்வளவு வேலை செய்தாலும், பல தம்பதிகள் தங்களது தனிப்பட்ட செலவுகளுக்குத் தங்கள் துணையையே சார்ந்திருக்கின்றனர். ஆனால், இது உங்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கலாம். தனிப்பட்ட செலவுகளை நீங்களே ஏற்க வேண்டும். குறைந்த வருமானம் இருப்பின், துணையுடன் விவாதிக்கலாம்.

பில் பகிர்வு

திருமணத்திற்குப் பின் நிதிப் பொறுப்புகளைப் பிரித்துக் கொள்ள, பில்களின் கட்டணத்தையும் பிரிக்க வேண்டும். முதலில் முக்கியமான பில்களை முதலில் செலுத்தலாம். பின், சிறிய பில்களை செலுத்தலாம். வருவாயின் அடிப்படையில் பில் கொடுப்பனவுகளைப் பிரிக்கலாம் அல்லது பங்குதாரர் செலுத்தும் மாதாந்திர பில்களில் பாதியும், மற்ற பங்குதாரரின் மாதாந்திர பில்களில் பாதியும் செலுத்தலாம். இது நேரத்திற்கு ஏற்ப பிரிக்கப்படும்.

இந்த எளிய வழிமுறைகள் மூலம், திருமணத்திற்குப் பிறகு எந்தவொரு துணையும், நிதிப் பொறுப்பில் சுமையாக இருக்க மாட்டார்கள். மேலும், இதில் நீங்கள் இருவரும் சேர்ந்து எதிர்காலத்திற்காக சேமிக்கும் சூழலும் அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Smartphone Affect Relationships: உறவில் விரிசலை உண்டாக்கும் ஸ்மார்ட்போன். எப்படி பாதுகாத்துக் கொள்வது?

Image Source: Freepik

Read Next

Marriage Tips: கல்யாணம் ஆக போதா.. இத மட்டும் பண்ணுங்க.. வாழ்க்க சூப்பரா இருக்கும்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content