Homemade Baby Bath Powder: குழந்தைகளுக்குக் கெமிக்கல் சோப்புக்குப் பதில், வீட்டிலேயே தயாரித்த இந்த குளியல் பொடியைப் பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
Homemade Baby Bath Powder: குழந்தைகளுக்குக் கெமிக்கல் சோப்புக்குப் பதில், வீட்டிலேயே தயாரித்த இந்த குளியல் பொடியைப் பயன்படுத்துங்க


How To Prepare Homemade Baby Bath Powder: குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானதாக இருக்கும். எனவே சிறு கவனக் குறைவும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே தாய்மார்கள் பெரும்பாலும் குழந்தைகளைக் குறித்து சிறிய விஷயமாக இருந்தாலும் அதனை முறையாகக் கவனிப்பது நல்லது. அதன் படி, குழந்தையின் சருமத்தினை ஆரோக்கியமாக பாதுகாக்க குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் சோப்பு அல்லது பாடி வாஷ்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த பொருள்கள் விலை உயர்ந்தவையாகவும், பல முறை பல வகையான இரசாயனங்கள் அவற்றைத் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் அதைக் குழந்தையின் தோலில் தடவினால் அலர்ஜி போன்ற பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க இயற்கை முறையைக் கையாள்வது நன்மை தரும். இதற்கு வீட்டிலேயே குழந்தைகளை குளிக்க வைக்க குளியல் பவுடர் தயாரிக்கலாம். இது இயற்கையானது மற்றும் சமையலறையில் கிடைக்கும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் இதனை ஒரு முறை தயாரித்தால், பல மாதங்கள் வரை சேமித்து பயன்படுத்தலாம். இந்த பொடி குழந்தையின் சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் சில இரசாயனங்களிலிருந்தும் பாதுகாக்கும். இப்போது குழந்தையை குளிப்பாட்டுவதற்கு வீட்டிலேயே குளியல் பவுடர் செய்வது எப்படி என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Needs Attention: குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனம் தேவைப்படுவதற்கான அறிகுறிகள்

குழந்தைகளை குளிக்க வைக்க உதவும் குளியல் பொடி செய்வது எப்படி

இயற்கையான முறையைப் பயன்படுத்தி, குழந்தைகளைக் குளிக்க வைக்க உதவும் குளியல் பொடி செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்முறை குறித்துக் காணலாம்.

குளியல் பொடி செய்யத் தேவையானவை

  • அரிசி – 1 கப்
  • கொண்டைக்கடலை – 1 கப்
  • பச்சைப்பயிறு – 1 கப்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • முல்தானி மிட்டி – 2-3 ஸ்பூன்
  • வெற்றிலை - 1
  • வெந்தய இலைகள் – 4 முதல் 5
  • ரோஜா இதழ்கள் – 4 முதல் 5

குளியல் பொடி தயாரிக்கும் முறை

முதலில் வெந்தய இலைகள், ரோஜா இதழ்கள் மற்றும் வெற்றிலையை வெயிலில் உலர்த்த வேண்டும்.

இது காய்ந்ததும் பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.

பின் அரிசி, பருப்புகளை நன்றாக பொடியாகும் வரை அரைத்து, அதனுடன் மஞ்சள் தூள், முல்தானி மிட்டி, அரைத்த இலைகள் சேர்த்து நன்கு கலக்க வேுண்டும்.

இதனை காற்று புகாத டப்பா ஒன்றில் சேமித்து, குழந்தைகளைக் குளிப்பாட்டும் போது அதைத் தண்ணீர் அல்லது பாலில் கலந்து பேஸ்ட் செய்து குழந்தையின் தோலில் மெதுவாக தடவி, பின் தண்ணீரில் கழுவ வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Breastfeeding Twins: இரட்டைக் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு குளியல் பொடி பயன்படுத்துவதன் நன்மைகள்

  • குளியல் பொடி பயன்படுத்துவது குழந்தையின் சருமத்திற்கு இயற்கைப் பொலிவைத் தருகிறது.
  • உடலில் முடி வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது
  • இதில் உள்ள முல்தானி மிட்டி, குழந்தையின் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.
  • இந்த பொடியைத் தடவுவதன் மூலம் சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
  • மேலும், இது குழந்தையின் சருமத்தை மேம்படுத்துகிறது.

வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த குளியல் பொடியைக் கொண்டு குழந்தைகளைக் குளிப்பாட்டலாம். எனினும், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் முன் தோலில் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Stop Crying Baby: குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோருக்கான சில உதவிக்குறிப்புகள்

Image Source: Freepik

Read Next

இரட்டைக் குழந்தைகளை வளர்க்கும் போது இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version