$
கோடையில் முகப்பரு அல்லது உஷ்ண சொறி போன்ற சரும பிரச்னைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். வெயில், ஈரப்பதம் மற்றும் மாசுபாட்டின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக கோடைக்காலம் நம் சருமத்தில் கடுமையன தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் சருமத்தை காக்க இயற்கை மற்றும் ஆயுர்வேத வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்தக் கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும். ஏனெனில், ஆயுர்வேத நிபுணர் டாக்டர் நிதி தாகர், சருமத்தை காக்க உதவும் ஆறு ஆயுர்வேத உணவுகளை எங்களிடம் பட்டியலிட்டுள்ளார்.
சருமத்தை காக்கும் ஆயுர்வேத உணவுகள்:
1. மஞ்சள்:

மஞ்சள் ஒரு அற்புதமான ஆயுர்வேத உணவாகும். இது உங்கள் சருமத்தை நச்சியில் இருந்து காக்கும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் குர்குமின் உள்ளது. இது உங்கள் கல்லீரலை நச்சியில் இருந்து காக்க உதவுகிறது. மேலும் உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார். இது முகப்பரு மற்றும் கருவளையங்களைக் குறைக்கவும் உதவும். உங்கள் உணவில் மஞ்சள் சேர்பதை உறுதி படுத்திக்கொள்ளவும்.
2. கற்றாழை:
கோடையில் அதிகமாக இருக்கும் தோல் அழற்சி மற்றும் சிவப்பை குறைக்க கற்றாழை உதவும். இது உங்கள் சருமத்தை வெளியேற்றக்கூடிய என்சைம்களையும் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்குவதன் மூலமும், செல் மீளுருவாக்கம் செய்வதன் மூலமும் சூரிய ஒளியில் இருந்து உங்களை காக்க உதவுகிறது. அதைப் பயன்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. கற்றாழை சாற்றை அருந்தலாம். மேலும் அதன் ஜெல்லை சருமத்தில் தடவலாம்.
3. நெல்லிக்காய்:
நெல்லிக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சக்திவாய்ந்த மூலமாகும். இது உங்கள் சருமத்தை நச்சியில் இருந்து நீக்கி வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் சாறு குடிப்பது அல்லது பழமாக சாப்பிடுவது போன்ற பல்வேறு வழிகளில் இதை உட்கொள்ளலாம். அதிகபட்ச பலன்களைப் பெற வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்ளுங்கள்.
4. திரிபலா:
நெல்லிக்காய், ஹரிடகி மற்றும் பிபிதாகி ஆகிய மூன்று பழங்களின் கலவையான திரிபலா அதன் சுத்திகரிப்பு விளைவுகளுக்கு பெயர் பெற்றது. நச்சுகளை அகற்றி, நல்ல செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம், திரிபலா சருமத்தை நச்சிடம் இருந்து காக்கிறது. திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து அல்லது வாழைப்பழம், மாம்பழம் போன்ற ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம்.
5. தேங்காய் தண்ணீர்:
தேங்காய் நீர் ஒரு ஆரோக்கியமான பானமாகும். இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்து அதிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனை தொடர்ந்து குடிப்பதன் மூலம் உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தலாம். இது அலெற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் முகப்பருவைக் குறைக்கவும் உதவுகிறது.
6. கொத்தமல்லி:

கொத்தமல்லி இந்திய வீடுகளில் பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு மூலிகை. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை நச்சு அண்டாமல் பாதுகாக்கிறது. மேலும் உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும் என்று டாக்டர் டாகர் கூறினார். கொத்தமல்லி முகப்பரு மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். உங்கள் உணவுகள், சூப்கள் மற்றும் சாலட்களில் கொத்தமல்லி சேர்க்கலாம்.
இந்த ஆயுர்வேத உணவுகள் உண்பது பாதுகாப்பானது என்றாலும், அவற்றை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன் ஆயுர்வேத பயிற்சியாளரிடம் விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும், ஒவ்வாமை அல்லது தொற்றுநோய்களைத் தவிர்க்க உங்கள் தோலில் ஏதேனும் ஆயுர்வேத மூலப்பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version