
$
ஒவ்வொரு புற்றுநோய் சிகிச்சையும் பக்க விளைவுகள் அல்லது உடலில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. நீங்கள் புற்றுநோய் சிகிச்சையைத் தொடங்கத் தயாராகும்போது, சிகிச்சை தொடர்பான பக்க விளைவுகளுக்கு பயப்படுவது இயல்பானது.
பக்கவிளைவுகளைத் தடுக்கவும், நிவர்த்தி செய்யவும் மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் தயாராக இருப்பார்கள். இருப்பினும் சிகிச்சையின் போது நோயாளியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் காட்டும் கனிவும், பாசமும், அக்கறையும் அவர்களை நோயை எதிர்த்து போராடத் தேவையான உத்வேகத்தை அளிக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மன உறுதியுடன் எப்படி அதனை எதிர்கொள்ள வேண்டும் என இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சைக்கான பக்கவிளைவுகள்:
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான ஒவ்வொரு சிகிச்சையின் போதும், பொதுவான உடல் பக்க விளைவுகள் உள்ளன. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் புற்றுநோயின் நிலை, சிகிச்சையின் கால அளவு மற்றும் உங்கள் பொது ஆரோக்கியம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி மருத்துவரிடம் அவ்வப்போது தெரியப்படுத்துங்கள். உடலில் பக்கவிளைவுகளால் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக தெரிவித்தால் மட்டுமே அதனை நிவர்த்தி செய்யவோ அல்லது நிர்வகிக்கவோ முடியும்.
ஏதேனும் புதிய பக்க விளைவுகள் அல்லது ஏற்கனவே உள்ள பக்க விளைவுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். உங்கள் பக்கவிளைவுகளைக் கண்காணிப்பது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும், அதனால் மருத்துவர்களுடன் சிகிச்சை பிறகும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவசியமாகும்.
உணர்ச்சி, சமூக விளைவுகளை சமாளித்தல்:
தற்போது மருத்துவ உலகம் அடைந்துள்ள உச்சகட்ட வளர்ச்சியில், புற்றுநோய்க்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் வந்துவிட்டன. இருப்பினும் இன்றளவும் மக்களிடையே புற்றுநோய் என்பது உயிரைக் குடிக்ககூடியதாகவே கருதப்படுகிறது. இதனால் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த கணம் அவர்களது வாழ்க்கையே நரகமாக மாறிவிட்டது போல் உணர்வார்கள்.
சோகம், பதற்றம், கோபம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். இந்த மாதிரியான தருணத்தில் மன அழுத்தத்தை நிர்வாகிக்க வெறும் மன நல ஆலோசனைகள் மட்டும் போதாது.
மருத்துவர்கள், ஆலோசகர்கள், சமூக சேவர்கள், மத குருக்கள் ஆகியோரையும் கடந்து பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, சகோதர, சகோதரிகள், நண்பர்கள் என தன்னை நேசிப்பவர்கள் காட்டும் அன்பும், அக்கறையும் மிக, மிக முக்கியமானது.
எனவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட அன்புக்குரியவர்களுடன் நேரம்,செலவிடுங்கள்,மனம் விட்டு பேசுவது, பிடித்தமான பொழுது போக்கு அல்லது விளையாட்டுகளில் நேரத்தை செலவிடலாம்.

மனம் விட்டு பேச உதவுங்கள்:
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மனித பாப்பிலோமா வைரஸுடன் (HPV) தொடர்புடையது என்பதால், நோயாளிகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து அதிக ஆதரவையும் உதவியையும் பெற மாட்டார்கள் என்று நினைக்கலாம், ஏனென்றால் மற்றவர்கள் தங்கள் நடத்தை நோயை ஏற்படுத்தியதாக நினைக்கலாம்.
ஏறக்குறைய அனைத்து கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களும் HPV ஆல் ஏற்படுகின்றன என்றாலும், பெரும்பாலான பிறப்புறுப்பு HPV நோய்த்தொற்றுகள் புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் யாரையும் தாக்கலாம்.
இந்தக் களங்கத்துடன் வாழ்வது நோயாளிகளை குற்ற உணர்வு, நம்பிக்கையற்ற, அவமானம், வெட்கம், தனிமைப்படுத்துதல் போன்ற உணர்வை ஏற்படுத்தும். நோயாளிகள் இந்த உணர்ச்சிகளால் பாதிக்கப்படும் போது, குடும்பத்தினர் தங்களது ஆதரவை அளிக்க வேண்டும்.
தங்களுக்கு நோய் எவ்வாறு ஏற்பட்டது, அதன் அனுபவங்கள் என்ன என மருத்துவர், செவிலியர், நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வது நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அன்பானவர்களின் அரவணைப்பு:
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனிப்பதில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நோயாளி தொலைதூரத்தில் வாழ்ந்தாலும், பராமரிப்பாளர்கள் உடல், நடைமுறை மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்க முடியும். உடனிருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் கீழே குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை செய்வதன் மூலமாக கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேம்பூட்டலாம்.
- ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குதல்
- மருந்துகள் கொடுப்பது
- அறிகுறிகள் மற்றும் பக்க விளைவுகளை நிர்வகிக்க உதவுவது
- மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மற்றும் சிகிச்சையின் போது உடனிருப்பது
- உணவு ஊட்டிவிடுதல்
- வீட்டு வேலைகளில் உதவுதல்
- காப்பீடு மற்றும் பில்லிங் சிக்கல்களைக் கையாளுதல்

புற்றுநோய் சிகிச்சைக்கான செலவுகளை சமாளித்தல்:
புற்றுநோய் சிகிச்சை மிகப்பெரிய செலவுகளை உள்ளடக்கியது. இது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன அழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்தும். சிலருக்கு, மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதால், அவர்களின் புற்றுநோய் சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றுவதிலிருந்தோ அல்லது முடிப்பதையோ தடுக்கிறது.
இது அவர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் மற்றும் எதிர்காலத்தில் அதிக செலவுகளுக்கு வழிவகுக்கும். நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிகிச்சைக்கான நிதியை முறையாக திட்டமிடலாம். சிகிச்சை செலவுகளை சமாளிக்க நோயாளிகளின் நண்பர்கள் அறக்கட்டளைகள், ஆன்லைன் இணையதளங்கள் மூலமாக நிதி திரட்டி தருவதில் உதவி செய்யலாம்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version