
இன்றைய காலத்தில் நரம்பு சுருட்டு (Varicose Vein) என்பது பொதுவாகக் காணப்படும் பிரச்சனையாக மாறி வருகிறது. நீண்ட நேரம் நின்றும், அதேபோல் நீண்ட நேரம் அமர்ந்தும் வேலை செய்பவர்கள் அதிகமாக இந்த பிரச்சனையைச் சந்திக்கின்றனர் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
முக்கியமான குறிப்புகள்:-
நரம்பு சுருட்டை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், அது அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயமும் உள்ளது. ஆனால், சில எளிய வீட்டுவைத்திய முறைகள் இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர் தீபா கூறுகிறார்.
Video Link: https://youtu.be/fNjzfhT_PFs
துணி கட்டு சிகிச்சை – எளிமையான & பயனுள்ள முறை
மருத்துவர் தீபா கூறுகையில், “காட்டன் துணியைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஒரு சிறந்த சிகிச்சை செய்யலாம்” என்றார்.
எப்படி செய்வது?
வீட்டில் இருக்கும் காட்டன் வேஷ்டி அல்லது புடவையை 3 முதல் 3.5 மீட்டர் வரை வெட்டி எடுத்துக் கொள்ளவும். பேண்டேஜ் மாதிரி நன்றாக சுருட்டிப் பார்ப்பதற்கு மாற்றிக் கொள்ளவும். அந்த துணியை குளிர்ந்த நீரில் நனைத்து, நரம்பு சுருட்டு இருந்தும் காலில் சுற்றி கட்டவும். அதன் மேல் ஒரு டவலை போட்டு மூடவும்.
இதனை 45 நிமிடங்கள் அமைதியாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், நரம்பு சுருட்டு குறையத் தொடங்கும் என்று மருத்துவர் தீபா கூறுகிறார். இதனை உணவு முடிந்து 2.5 மணிநேரம் கழித்து செய்யலாம்.
மண் சிகிச்சை – பழமையான பாட்டி வைத்தியம்
மண் சிகிச்சை (Mud Therapy) நரம்பு பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எப்படி செய்வது?
ஈரப்பதம் நிறைந்த மண்ணை எடுத்து, காலின் கீழ்ப்புறத்திலிருந்து மேல் நோக்கி பூச வேண்டும். பின்னர் இரு கால்களையும் நீட்டி வெயில் படும் வகையில் உட்கார வேண்டும். இதனை 20–30 நிமிடங்கள் தினசரி செய்யலாம். மண் சிகிச்சை இரத்த ஓட்டத்தை சீராக்குவதால், வலி, வீக்கம் மற்றும் நரம்பு சுருட்டு குறையும் என்று மருத்துவர் தீபா கூறுகிறார்.
இந்த முறைகள் யாருக்கு பயன் தரும்?
நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஆரம்ப நிலையிலுள்ள நரம்பு சுருட்டு, காலில் கனத்துவேதனை, வீக்கம் உள்ளவர்கள் - இதனை பழக்கமாக பின்பற்றினால், அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் அளவுக்கு நிவாரணம் கிடைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குறட்டை பிரச்னை நீங்க பாட்டி வைத்தியம்.!
எந்த நிலையில் மருத்துவரை அணுக வேண்டும்?
* கடுமையான வலி
* தொடர்ந்து நிற்க முடியாத நிலை
* நாள்கள் கணக்கில் வீக்கம் குறையாதது
* திடீர் காயம், சிவப்பு அல்லது வெப்பம்
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இறுதியாக..
நரம்பு சுருட்டு பிரச்சனை ஆரம்பத்திலேயே கவனித்தால், வீட்டு வைத்திய முறைகளால் அதை கட்டுப்படுத்த முடியும். துணி கட்டு முறை மற்றும் மண் சிகிச்சை இரத்த ஓட்டத்தை சீராக்கி, வீக்கத்தையும் வலியையும் குறைக்க உதவும். ஆனால், பிரச்சனை அதிகரித்தால் மருத்துவ பராமரிப்பு அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளங்களில் மற்றும் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன், உங்கள் தனிப்பட்ட உடல்நிலைமைக்கேற்றவாறு மருத்துவரின் ஆலோசனை பெறவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 21, 2025 17:30 IST
Published By : Ishvarya Gurumurthy