Tips To Protect Hair In Summer: கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக தலைமுடி பிரச்சனை உள்ளது. ஏனெனில், இந்த காலகட்டத்தில் அதிகளவு முடி உதிர்தல், முடி வளர்ச்சியின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு மற்ற சில காரணங்களாக மோசமான உணவுமுறையும் அடங்கும். எனவே இந்த சமயத்தில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதுடன், சில முடி பராமரிப்பு முறைகளையும் கையாள வேண்டும்.
கோடைக்காலத்தில் முடியைப் பாதுகாக்க உதவும் மூலிகைகள்
வேப்பிலை
வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. மேலும் பொடுகுக்கு சிறந்த சிகிச்சையாக அமைகிறது. மேலும் இது உச்சந்தலையில் எரிச்சலை தணித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
வேப்ப இலைகளை நீரில் கொதிக்க வைத்து, பின் இந்த கரைசலை ஆற விட வேண்டும். அதன் பிறகு இதை உச்சந்தலை மற்றும் முடியில் தேய்த்து நன்கு ஊற விடலாம். இதில் வேப்ப இலைகளை தண்ணீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Spinach For Hair Growth: போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? கீரையை இப்படி எடுத்துக்கோங்க
நெல்லிக்காய்
இது வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பழமாகும். இது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன், முன்கூட்டிய நரைமுடியைத் தடுக்கும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். இது முடியின் உரோமக்கால்களை பலப்படுத்துவதுடன், முடி உதிர்வைக் குறைக்கிறது. மேலும் முடிக்கு பொலிவைச் சேர்க்கிறது.
உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் நன்கு நிறம் மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் இதில் எண்ணெயை வடிகட்டி, உச்சந்தலை மற்றும் முடியில் தடவலாம். இதை சில மணி நேரம் ஊறவைத்து கழுவி விடலாம். மேலும் முடியின் வேர்ப்பகுதியிலிருந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க நெல்லிக்காயை சாறாக எடுத்துக் கொள்ளலாம்.
செம்பருத்தி
இதில் ஆக்ஸிஜனேற்றங்கள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடி உதிர்வைத் தடுக்கும் மூலிகையாகும். இது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, மயிர்க்கால்களைத் தூண்டி, கூந்தலுக்குப் பொலிவைத் தருகிறது.
இதில் செம்பருத்திப் பூக்கள் மற்றும் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் இதில் தயிர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அதன் பிறகு இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மேலும், செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை தண்ணீரில் வேகவைத்து, கரைசலை வடிகட்டி பின் முடியை ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mehndi On Hair: முடிக்கு மெஹந்தி யூஸ் பண்ணா இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்
கற்றாழை
கற்றாழை இனிமையான, ஈரப்பதமிக்க பண்புகளைக் கொண்டதாகும். இது உச்சந்தலையின் ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும் சிறந்த மூலிகையாகும். இது உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதுடன், பொடுகைக் குறைக்க உதவுகிறது. மேலும் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது.
இதற்கு செடியிலிருந்து புதிய கற்றாழை ஜெல்லைப் பிரித்தெடுத்து, அதை நேரடியாக உச்சந்தலை மற்றும் முடியில் தடவலாம். பின் இதை 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் தேங்காய்ப்பால் மற்றும் சில துளி அத்தியாவசிய எண்ணெயைக் கலந்து பேஸ்ட் தயார் செய்யலாம். பின் இதை உச்சந்தலை மற்றும் முடிக்கு தடவி 30 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
வெந்தயம்
வெந்தயத்தில் புரோட்டின்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது, இது முடியின் உரோமக்கால்களை வலுப்படுத்துவதுடன் முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இது உச்சந்தலையை ஈரப்பதமாக வைப்பதுடன் பொடுகை குறைக்கிறது.
இதற்கு வெந்தயத்தை முந்தைய நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பேஸ்டாக அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் தயிர் சேர்த்துஉச்சந்தலை மற்றும் முடியில் தடவ வேண்டும். இதை நன்கு ஊறவைத்து 30 நிமிடம் கழித்து கழுவலாம். தேங்காய் எண்ணெயில் வெந்தய விதைகளை கலந்து, கலவையை பழுப்பு நிறமாக மாறும் வரை சூடாக்கலாம். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க எண்ணெயை வடிகட்டி, இந்த கலவையை உச்சந்தலையில் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவை அனைத்தும் கோடைக்காலத்தில் முடி பராமரிப்புக்கு உதவும் சிறந்த மூலிகைகளாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Mustard Oil For Grey Hair: நரை முடியை கருமையாக மாற்றும் கடுகு எண்ணெய். இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik