
குளிர்காலம் அனைவருக்கும் நிம்மதியான, மகிழ்ச்சியான காலநிலையாக இருப்பினும், பல்வேறு உடல் அபாயங்களைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நம் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். நாம் பலரும் குளிர்ந்த காலநிலையில் இருக்கும் போது உடலில் குறைந்த அளவிலான இரத்த ஓட்டம் மற்றும் குளிர்ச்சி நிலைமையை உணர்கிறோம். இது பலருக்கும் சவாலான காலமாக அமைகிறது.
முக்கியமான குறிப்புகள்:-
அதிலும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கும், சளி பிடிக்க வாய்ப்புள்ளவர்களுக்கும், அல்லது அடிக்கடி கால்களில் மரத்துப் போதல் மற்றும் வீக்கம் ஏற்படுபவர்களுக்கும், குளிர்காலத்தில் இரத்த ஓட்டம் மெதுவாக இருப்பது பொதுவானதாகும். இதுபோன்ற சூழ்நிலைகளில், இயற்கை எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் பாதங்களை மசாஜ் செய்யும் போது நமது இரத்த ஓட்டம் மேம்படுவதை உணரலாம். மேலும் இது நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
இதில் குளிர்காலத்தில் பாதங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் மூன்று இயற்கை எண்ணெய்கள் குறித்து ஹரியானா, ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத நிபுணர் டாக்டர். ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
கடுகு எண்ணெய்
குளிர்காலத்தில் உடலை மசாஜ் செய்வதற்கு கடுகு எண்ணெய் பாரம்பரியமாக மிகவும் பயனுள்ள எண்ணெயாகக் கருதப்படுகிறது. இது குறித்து, ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் கூறியதாவது, கடுகு எண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை பாதங்களின் வெப்பத்தை அதிகரிக்க உதவுகின்றன என்று விளக்குகிறார். எனவே, கடுகு எண்ணெயை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
கடுகு எண்ணெயின் வெப்ப விளைவு நரம்புகளை விரிவுபடுத்துகிறது. மேலும், இது கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
கடுகு எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம், வலி மற்றும் கால்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால், நரம்புகள் நிம்மதி பெறவும் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைக்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தூங்குவதற்கு முன் காலில் எண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!
கற்பூர எண்ணெய்
பாதங்களில் கற்பூர எண்ணெயைப் பயன்படுத்தில் மசாஜ் செய்வது, சோர்வைப் போக்கி, பாதங்களை லேசாக உணர வைக்கிறது.
கற்பூர எண்ணெய் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகளைக் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதும் பாதங்களை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
கற்பூர எண்ணெயால் மசாஜ் செய்தால்,தசை விறைப்பிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
எள் எண்ணெய்
ஆயுர்வேதத்தில், எள் எண்ணெய் வாயுவைத் தடுக்கும் மருந்தாகக் கருதப்படுகிறது. அதாவது இது உடலில் குளிர், வலி மற்றும் வறட்சியைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
எள் எண்ணெயைக் கொண்டு கால் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் மேம்படுவதையும் மற்றும் தசைகள் ஆழமான ஊட்டச்சத்தைப் பெறுவதையும் உறுதி செய்யலாம்.
குதிகால் வெடிப்பு பிரச்சனையை நீக்குவதில் எள் எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்.
நன்மைகள்
- குளிர்காலத்தில் படுக்கைக்கு முன்பாக உங்கள் கால்களை இந்த எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
- இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசைகளைத் தளர்த்தவும் மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- இது வலி மற்றும் வீக்கத்தை நீக்கவும் மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
- ஒவ்வொரு இரவும் படுக்கைக்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் உங்கள் பாதங்களை மசாஜ் செய்வது குளிர், உணர்வின்மை, வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.
எனவே, கால் மசாஜ் செய்ய நீங்கள் எள் எண்ணெய், கற்பூர எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உறங்கும் முன் உள்ளங்கால்களில் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 30, 2025 19:55 IST
Published By : கௌதமி சுப்ரமணி