Doctor Verified

அரிசி மாவை முகத்தில் தினமும் தடவினால் என்ன ஆகும்.? மருத்துவர் கூறும் பக்க விளைவுகள் இங்கே.!

அரிசி மாவு சருமத்தை பிரகாசமாக்கும் என்ற நம்பிக்கையில் பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அது தவறான முறையில் பயன்படுத்தினால் ஏற்படும் வறட்சி, ஒவ்வாமை, தோல் சேதம், முகப்பரு போன்ற பக்க விளைவுகளை நிபுணர் டாக்டர் கிரண் குப்தா எச்சரிக்கிறார்.
  • SHARE
  • FOLLOW
அரிசி மாவை முகத்தில் தினமும் தடவினால் என்ன ஆகும்.? மருத்துவர் கூறும் பக்க விளைவுகள் இங்கே.!

சருமத்தை பிரகாசமாக்கவும், கரும்புள்ளிகளை குறைக்கவும், விலையுயர்ந்த க்ரீம்கள், சருமப் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை பலர் நம்புகிறார். ஆனால் இன்னும் பலர் வீட்டிலேயே செய்யும் பழமையான நாட்டு வைத்தியங்களையே பயன்படுத்தி வருகிறார்கள். இதில் மிகப் பொதுவாக பயன்படுத்தப்படுவது அரிசி மாவு.


முக்கியமான குறிப்புகள்:-


ஃபேஸ் பேக், ஸ்க்ரப், கிளென்சராக பயன்படுத்தப்படும் அரிசி மாவு சருமத்திற்கு பல நன்மைகள் வழங்கும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக உள்ளது. ஆனால், அரிசி மாவு உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்பும் இருப்பதாக யோகா, இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் கிரண் குப்தா எச்சரிக்கிறார்.

அரிசி மாவு முகத்தில் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

சரும வறட்சி அதிகரிப்பு

அரிசி மாவு ஒரு நல்ல எக்ஸ்ஃபோலியேட்டர் என்றாலும், அதை அடிக்கடி அதிக அளவில் மிக வலுவாக தேய்த்து பயன்படுத்தினால், சருமத்தின் இயற்கை எண்ணெய்கள் நீங்கி, முகத்தில் கடுமையான வறட்சி உருவாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதனால் மிகுந்த பாதிப்பு அடையலாம். தீங்கு குறைக்க என்ன செய்யலாம்? அரிசி மாவுடன் — பால், தேன், கற்றாழை ஜெல் போன்ற ஈரப்பதத்தை தரும் பொருட்கள் சேர்க்கலாம்.

ஒவ்வாமை மற்றும் சொறி ஏற்படும் அபாயம்

சிலருக்கு அரிசி மாவில் உள்ள புரதத்தால் ஒவ்வாமை உருவாகலாம். இது - சிவத்தல், அரிப்பு, சொறி, படலங்கள் உருவாகுதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உணர்திறன் கூடிய (Sensitive) skin உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தோல் நிறம் மங்குதல் மற்றும் மேல் அடுக்கு சேதம்

அரிசி மாவு சருமத்தை உரிக்க உதவினாலும், அதை மிக அதிகமாக பயன்படுத்துவது சருமத்தின் மேல் அடுக்கை சேதப்படுத்தும். இதனால் - தோல் நிறம் மங்கிவிடுதல், Uneven skin tone போன்ற பிரச்சனைகள் தோன்றும்.

இந்த பதிவும் உதவலாம்: சருமம் தகதகனு தங்கம் போல மின்ன மஞ்சளுடன் இந்த ஒரு எண்ணெயைச் சேர்த்து தடவுங்க.. மருத்துவர் சொன்னது

முகப்பரு மற்றும் துளை அடைப்பு

அரிசி மாவு முகத்தில் ஒட்டியபின் சரியாக கழுவாமல் விட்டால், அது சருமத் துளைகளை அடைத்து - முகப்பரு, கரும்புள்ளி, வெள்ளைப் புள்ளி உருவாகும் அபாயம் அதிகமாகும்.

வயதான தோற்றம் (Premature Ageing)

அரிசி மாவை மிகவும் அடிக்கடி ஸ்க்ரப் செய்வது, சரும ஈரப்பதத்தை குறைத்து - சுருக்கங்கள், நரை கோடுகள், ஆழமான கோடுகள் போன்ற முன்கூட்டியே வயதான தோற்றத்திற்கன அறிகுறிகளை உருவாக்கும்.

இறுதியாக..

அரிசி மாவு சருமத்திற்கு பல நன்மைகள் கொண்டது என்றாலும், அதிகப்படியான பயன்படுத்தலும் தவறான முறையிலும் பயன்படுத்துவது சருமத்தை சேதப்படுத்தும் அபாயம் அதிகம்.

* வாரத்திற்கு 1–2 முறை மட்டுமே பயன்படுத்தவும்

* உணர்திறன் கூடிய சருமம் இருந்தால் கவனமாக இருக்கவும்

* பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக நிறுத்தவும்

* சந்தேகம் இருந்தால் நிபுணர் மருத்துவரை அணுகவும்

Disclaimer: இந்தக் கட்டுரை கல்வி நோக்கத்திற்கானது. சருமத்தில் எவ்வித பிரச்சனை தோன்றினாலும், வீட்டில் செய்யும் வைத்தியங்களைத் தொடருவதற்கு முன் அல்லது பின்பு, உங்கள் தோல் நிபுணர் அல்லது மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

சருமம் எந்த பிரச்சனையும் இல்லாம பளபளப்பா இருக்க இந்த 5 உணவுகள் சாப்பிடுங்க

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 23, 2025 16:05 IST

    Published By : Ishvarya Gurumurthy