Doctor Verified

கீல்வாத வலிக்கு மஞ்சள் பால் மருந்து!

கீல்வாதம், மூட்டு வீக்கம், விறைப்பு மற்றும் வலி குறைய மஞ்சள் பால் எவ்வாறு உதவுகிறது? எப்போது, எப்படி குடிக்க வேண்டும், என்ன முன்னெச்சரிக்கை அவசியம்? நிபுணர் விளக்கம்.
  • SHARE
  • FOLLOW
கீல்வாத வலிக்கு மஞ்சள் பால் மருந்து!

மழைக்காலம் அல்லது குளிர்காலம் வந்தாலே, கீல்வாதம் மற்றும் மூட்டுவலி உள்ளவர்களுக்கு வலி, வீக்கம், விறைப்புத் தன்மை போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். மருந்துகளுடன் சேர்த்து பாதுகாப்பான வீட்டு வைத்தியம் தேடுபவர்களுக்கு, ஆயுர்வேதத்தில் “தங்க பால்” என அழைக்கப்படும் மஞ்சள் பால் சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


லக்னோவின் விகாஸ் நகரில் உள்ள நியூட்ரிவைஸ் கிளினிக் ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சின்ஹா, “மஞ்சளில் உள்ள குர்குமின் மூட்டு வீக்கத்தைக் குறைக்கும் சக்திவாய்ந்த இயற்கை மருந்து” என விளக்குகிறார்.

மஞ்சள் பால் நன்மைகள்

1. மூட்டு வீக்கம் மற்றும் வலி குறையும்

மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான Anti-inflammatory தன்மையைக் கொண்டது. இது மூட்டு வீக்கம், வலி, விறைப்புத் தன்மை ஆகியவற்றைக் குறைத்து, நீண்டகால நிவாரணம் அளிக்க உதவுகிறது.

2. மூட்டு இயக்கமும் நெகிழ்வுத்தன்மையும் மேம்படும்

தொடர்ந்து மஞ்சள் பால் குடிப்பதால், மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்கள் ஊட்டம் பெறும், நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், நடப்பதும் அமர்வதும் எளிதாகும்.

3. எலும்புகள் பலப்படும்

பாலில் உள்ள கால்சியம், புரதம், வைட்டமின் D; மஞ்சளுடன் இணைந்து எலும்புகளை வலுப்படுத்துகின்றன. இதனால் கீல்வாதத்தால் ஏற்படும் எலும்பு பலவீனம் மெதுவாகக் குறைகிறது.

4. தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு

மஞ்சளில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலை நச்சு நீக்கம் செய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும். கீல்வாதம் போன்ற தன்னுடல் தாக்க நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியம்.

5. நல்ல தூக்கத்திற்கு உதவும்

மூட்டு வலி காரணமாக இரவில் தூக்கம் பாதிக்கப்படுவது பொதுவானது. படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடிப்பது, உடலை ரிலாக்ஸ் செய்கிறது, மன அழுத்தத்தை குறைக்கிறது, ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் படுக்கைக்கு முன் மஞ்சள் பால் குடியுங்கள்.! உடனே கிடைக்கும் 5 அதிசய நன்மைகள் இங்கே..

6. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

மஞ்சள் பால் உட்கொள்வதால் உடலின் பாதுகாப்புத் திறன் மேம்படும். இதனால் கீல்வாத அறிகுறிகள் தீவிரமடைவதைத் தடுக்க, உடல் சக்தி நிலைத்திருக்க உதவுகிறது.

7. உட்புற வீக்கங்கள் குறையும்

மஞ்சள் பால் மூட்டுகளுக்கு மட்டுமல்லாமல் - குடல், கல்லீரல், தோல் - போன்ற உறுப்புகளில் ஏற்படும் உட்புற வீக்கங்களையும் குறைத்து, முழு உடலுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

கீல்வாதத்திற்கு மஞ்சள் பாலை எப்போது, எப்படி குடிக்க வேண்டும்?

  • தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்
  • வெதுவெதுப்பான பால் (மிகவும் சூடாக இல்லை)
  • 1 கப் பாலில் ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ஒரு சிட்டிகை கருப்பு மிளகு (உடல் உறிஞ்சுதலை அதிகரிக்கும்)
  • சர்க்கரை / தேன் / வெல்லம் சேர்க்க வேண்டாம்
  • இரவு உணவுக்கு 1 மணி நேரத்திற்குப் பிறகு குடிக்கவும்
  • விருப்பப்பட்டால் கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்க்கலாம்.

இறுதியாக..

கீல்வாதம் போன்ற நாள்பட்ட மூட்டு பிரச்சினைகளுக்கு மஞ்சள் பால் ஒரு பாதுகாப்பான, இயற்கையான துணை வைத்தியமாக செயல்படுகிறது. இது வலி, வீக்கம், விறைப்பை குறைத்து, உடல் முழுவதும் நலத்தை மேம்படுத்துகிறது. தொடர்ந்து, சரியான முறையில் உட்கொண்டால் அதன் பயன் அதிகமாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களையும் நிபுணர் கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டது. கடுமையான கீல்வாதம், மருந்து சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள், மஞ்சள் பாலை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

பிரியாணி இலை கஷாயம்.. உடனடி நிவாரணம் தரும் இயற்கை வைத்தியம்.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 13, 2025 10:59 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்