
முருங்கை மரம் என்றாலே பாரம்பரிய மருத்துவத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இம்மரத்தின் இலை, வேர், பூ, காய், பட்டை என ஒவ்வொரு பகுதியும் தனித்தனி மருத்துவ குணங்களை கொண்டவை. பழங்காலம் முதல் உணவாகவும் மருந்தாகவும் முருங்கையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில், முருங்கைப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் பொடி, சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
முக்கியமான குறிப்புகள்:-
முருங்கைப்பூ பொடி – ஆண்களுக்கு சிறப்பு மருந்து
சித்த மருத்துவர் காமராஜ் கூறுகையில், முருங்கைப்பூ பொடி ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதன் வீரியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆண்மை குறைவு, விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், தங்களது உணவு முறையில் முருங்கைப்பூவை தொடர்ந்து சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என தெரிவிக்கிறார்.
முருங்கைப்பூ பொடி தயாரிக்கும் முறை
முருங்கை இலை பொடி செய்வதைப் போலவே, முருங்கைப்பூவையும் சேகரித்து நிழலில் நன்கு உலர்த்த வேண்டும். பூக்களில் புழுக்கள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், சுத்தமாக அலசி கவனமாக உலர்த்த வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைத்தால் நறுமணமுள்ள பொடி தயாராகும். சரியான முறையில் பதப்படுத்தி வைத்தால், இந்த பொடியை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.
உணவுகளில் எப்படி சேர்க்கலாம்?
முருங்கைப்பூ பொடியை, ரசப்பொடி, கூட்டு வகைகள், வறுவல் அல்லாத பொரியல்கள் போன்றவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் உணவின் சுவையும் சத்தும் அதிகரிக்கும். விந்தணுக்கள் அதிகரிக்க எடுத்துக்கொள்ளும் முறை. விந்தணுக்கள் குறைபாடு உள்ள ஆண்கள், முருங்கைப்பூ பொடியை காலை மற்றும் இரவு நேரங்களில் பசுநெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால், விந்தணுக்கள் எண்ணிக்கையும் வீரியமும் மேம்படும் என சித்த மருத்துவர் தெரிவிக்கிறார். பொடியாக்காமல் சாப்பிடும் வழி - முருங்கைப்பூவை கூட்டு வைத்து சாப்பிடுவதும் மிகச்சிறந்த முறையாகும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
முருங்கைப்பூ கூட்டு செய்வது எப்படி?
கைப்பிடியளவு முருங்கைப்பூவை சுத்தம் செய்து, நெய்யில் வறுக்கவும், சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்க்கவும், வேக வைத்த துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும். பிறகு தாளிப்பு செய்து தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான கூட்டு தயார். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல் பலன். முருங்கைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி, வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆண்களுக்கு பலன் அதிகமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
குல்கந்து & பிற பயன்பாடுகள்
முருங்கைப்பூ குல்கந்து செய்து காலை வேளையில் எடுத்துக்கொள்ளலாம். மேலும், பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் பாலியல் நாட்டம் அதிகரிக்கும், கஷாயமாக குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு நன்மை தரும்.
இரத்த சோகைக்கு முருங்கைப்பூ
இரத்த சிவப்பு அணுக்கள் குறைவதால் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையுள்ளவர்கள், முருங்கைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல மாற்றம் காணலாம். கூட்டு, பொரியல், ரசம், சூப் என பல்வேறு வகைகளில் இதனை பயன்படுத்தலாம்.
இறுதியாக..
முருங்கைப்பூ என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை உணவாகும். சரியான முறையில் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுத் தகவல்களுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. இக்குறிப்புகளை பின்பற்றும் முன், மருத்துவர் அல்லது சித்த மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம். இங்கு வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 19, 2025 20:23 IST
Published By : Ishvarya Gurumurthy