Doctor Verified

மஞ்சள் மற்றும் நெய் தடவுவது காயங்களை குணப்படுத்த உதவுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

மஞ்சள் மற்றும் நெய் இரண்டுமே பல பண்புகளைக் கொண்டதாகும். காயங்களில் இவற்றைப் பயன்படுத்துவது விரைவாக குணமடையவும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
மஞ்சள் மற்றும் நெய் தடவுவது காயங்களை குணப்படுத்த உதவுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்


இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப்பொருள்கள் ஏராளம் உள்ளது. இதில் நெய், மஞ்சள் இரண்டுமே அடங்குகிறது. இவை இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். இவை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. மஞ்சள், நெய் இரண்டையும் உட்கொள்வது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. ஆனால், இதை சருமத்தில் தடவுவது பல பிரச்சனைகளைப் போக்கவும், நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. பெரும்பாலான நேரங்களில், மக்கள் ஏதாவதொரு காரணத்தால் காயங்களை அனுபவிக்கிறார்கள். இது போன்ற நேரங்களில், அவர்கள் காயங்களை விரைவாகக் குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்த மக்கள் அடிக்கடி அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆனால் மஞ்சள் மற்றும் நெய் இரண்டையும் காயங்களைக் குணப்படுத்த பயன்படுத்தலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. மஞ்சளில் கிருமி நாசினி பண்புகள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் போன்றவை நிறைந்துள்ளது. இந்நிலையில், நெய்யில் நல்ல அளவிலான வைட்டமின்கள் ஏ, ஈ, டி மற்றும் கே, கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நொய்டாவின் செக்டர் 12 இல் உள்ள அர்ச்சிட் ஆயுர்வேத கிளினிக்கின் டாக்டர் ஆனந்த் திரிபாதி அவர்கள், காயத்தின் மீது நெய் மற்றும் மஞ்சளைப் பூசலாமா என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Ghee For Healing Wound: உடல் மற்றும் மன காயங்களுக்கு சிறந்த தீர்வு தரும் நெய்! எப்படி தெரியுமா?

காயத்தின் மீது நெய் மற்றும் மஞ்சளைப் பூசலாமா?

மருத்துவர் ஆனந்த் திரிபாதி அவர்களின் கூற்றுப்படி, மஞ்சள் மற்றும் நெய் இரண்டுமே அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இவை காயத்தை விரைவாகக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது பாக்டீரியா தொற்றுக்களைத் தடுப்பதன் மூலம், முகப்பருவைத் தடுக்கவும், சரும செல்களை சரிசெய்யவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

வீக்கத்தைக் குறைப்பதற்கு

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், காயத்தில் மஞ்சள் மற்றும் நெய்யைப் பூசுவது காய்த்தைச் சுற்றி காணப்படும் வீக்கத்தைத் தணிக்க உதவுகிறது. இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இவற்றைப் பயன்படுத்துவது காயத்தை குணப்படுத்தவும், குணப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தவும் உதவுகிறது.

சருமத்தை சரிசெய்வதற்கு

மஞ்சள் மற்றும் நெய்யில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதை மேற்பூச்சாகவோ அல்லது காயங்களைச் சுற்றி தடவுவதன் மூலமாகவோ சரும செல்களை சரிசெய்யவும், சருமப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் முடியும்.

தொற்றுநோயைத் தடுப்பதற்கு

மஞ்சள், நெய் இரண்டிலுமே அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காயம் தொற்றுகளைத் தடுக்கவும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கவும் முடியும். மேலும், இது தோல் ஒவ்வாமை மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: காயங்களை விரைவில் குணப்படுத்த நிபுணர் சொன்ன இந்த 7 உணவுகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

காயங்களைக் குணப்படுத்த

மஞ்சள் மற்றும் நெய்யில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காயங்களை விரைவாக குணமடைவதை ஊக்குவிக்கின்றன. இவை தொற்றுநோயைத் தடுக்கவும், காயம் பரவுவதை மெதுவாக்கவும் உதவுகிறது.

நெய் மற்றும் மஞ்சளை பயன்படுத்துவது எப்படி?

காயங்கள் ஏற்பட்ட பகுதியில், மஞ்சளை நெய்யுடன் நன்கு கலந்து தடவ வேண்டும். இது வடுக்கள் குறைவதற்கும், தொற்றுநோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

தற்காப்பு நடவடிக்கைகள்

மஞ்சள் மற்றும் நெய்யைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, காயத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். மேலும், இதற்கு சுத்தமான துணியைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, காயம் தொற்று, சிவத்தல், வீக்கம், வலி அல்லது சீழ் இருந்தால் இதைப் பயன்படுத்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

முடிவுரை

மஞ்சள் மற்றும் நெய்யைப் பயன்படுத்துவது சருமத்தை சரிசெய்யவும், காயம் குணமடைவதை விரைவுபடுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், தொற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. எனினும், இவற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். மேலும், ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் கலந்த நீரில் நீராவி எடுப்பதால் உங்க உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

கருப்பு ஏலக்காய் தண்ணீர் ஒன்று போதும்.. பல தொண்டை பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு கிடைக்கும்

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Oct 19, 2025 14:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி