
பெண்கள் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ஒரு சிறந்த காலமாக கர்ப்ப காலம் அமைகிறது. பொதுவாக, கர்ப்ப காலத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. ஏனெனில், இந்த நேரத்தில் பெண்களின் உடலில் ஏராளமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் நிலை உண்டாகிறது. எனவே தான், இந்த காலகட்டத்தில் பெண்கள் மிகக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது அவர்களை மட்டுமல்லாமல், குழந்தையையும் பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
எனவே, பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை சரியாகக் கவனித்துக் கொள்ளாவிட்டால் மற்றும் சரியான உணவை உண்ணாவிட்டால், அது அவர்களின் பிறக்காத குழந்தையின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும், பெண்கள் பொதுவாக கர்ப்ப காலத்தில் தங்கள் ஊட்டச்சத்தை முழுமையாக கவனித்துக்கொள்கின்றனர். இருப்பினும், பல பெண்கள் கர்ப்ப காலத்தில் தொடர்ந்து பலவீனம் மற்றும் சோர்வை அனுபவிப்பதுடன், அடிக்கடி தாகம் எடுப்பதையும் அனுபவிக்கின்றனர்.
இதில் கேள்வி என்னவெனில், இவ்வாறு அதிக தாகம் எடுப்பது இயல்பானதா? அல்லது இது ஏதேனும் நோயின் அறிகுறியா? இது குறித்து, நொய்டாவின் செக்டார் 71 இல் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் மூத்த ஆலோசகர் டாக்டர் நீலம் பெனாரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Excessive thirst: தண்ணீர் குடித்த பிறகும் தாகம் அடங்கவில்லையா? அப்போ இதுதான் காரணம்!
கர்ப்ப காலத்தில் அடிக்கடி தாகமாக இருப்பது சரியா?
கர்ப்ப காலத்தில் எப்போதும் தாகம் எடுப்பது முற்றிலும் இயல்பானதாகக் கருதப்படுகிறது. தேசிய சுகாதார சேவைநேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கட்டுரையில் கூறப்பட்டதாவது,"கர்ப்ப காலத்தில் பெண்களுக்குத் தாகம் எடுப்பது அசாதாரணமானது அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், நிலையான மற்றும் அதிகப்படியான தாகம் குறிப்பாக, தண்ணீர் குடித்த பிறகும் தாகம் நீடிப்பது நல்லதாகக் கருதப்படவில்லை. ஒரு பெண் பகல் அல்லது இரவு முழுவதும் தாகமாக உணர்ந்தால், அது கர்ப்பகால நீரிழிவு மற்றும் நீரிழப்பு நோய்க்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது" என்று கூறப்படுகிறது. மேலும், பெண்கள் தாகத்துடன் மற்ற அறிகுறிகளையும் அனுபவித்தால், அது கருப்பையில் வளரக்கூடிய குழந்தையின் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் மேலும் விளக்குகின்றனர்.
கர்ப்ப காலத்தில் தாகம் ஏற்படுவதற்கான காரணங்கள்
காலை நேர குமட்டல்
கர்ப்ப காலத்தில் பெண்கள் பெரும்பாலான நேரங்களில் குமட்டலை அனுபவிக்கின்றனர். குறிப்பாக, காலை நேரத்தில் ஏற்படும் குமட்டல் வாந்திக்கு வழிவகுக்கிறது. இவை குறிப்பிடத்தக்க நீரிழப்பை ஏற்படுத்துவதுடன், தாகத்தை அதிகரிக்கக் கூடும்.
அதிகரித்த இரத்த அளவு
கர்ப்ப காலத்தில் பெண்கள், தங்கள் குழந்தைக்கு போதுமான ஆதரவை வழங்க உடலின் இரத்த அளவை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் சாதாரண இரத்த ஓட்டத்தை பராமரிப்பதற்கு உடலுக்கு கூடுதல் திரவம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு தாகம் அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Extremely Thirsty: அடிக்கடி தாகம் எடுக்க காரணம் என்ன? அதீத தாகம் எடுத்தால் என்ன செய்வது?
ஹார்மோன் மாற்றங்கள்
கர்ப்ப காலத்தில் தாகம் எடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக, அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அமைகின்றன. பொதுவாக, கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் இயற்கையானதாகும். இவை தாகத்தையும் அதிகரிக்கிறது. எனவே, இது கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் இரவும் பகலும் அதிக தாகம் எடுத்தால் தவிர, அடிக்கடி தாகம் எடுப்பதை அசாதாரணமானது என்று கருதக்கூடாது. ஏனெனில், இது கர்ப்பகால நீரிழிவு நோயைக் குறிக்கலாம். கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது பிரசவத்தின் போது சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உங்களுக்கு இரவில் அடிக்கடி தண்ணீர் தவிக்குதா? லேசுல விடாதீங்க இந்த நோயின் அறிகுறியாம்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Nov 06, 2025 08:30 IST
Published By : கௌதமி சுப்ரமணி