Ice Water Facial: ஐஸ் வாட்டர் ஃபேஷியலில் இத்தனை நன்மைகளா?

  • SHARE
  • FOLLOW
Ice Water Facial: ஐஸ் வாட்டர் ஃபேஷியலில் இத்தனை நன்மைகளா?


Benefits Of Dipping Your Face In Ice Water: சமீபகாலமாக பல பெண்கள் அழகுக்காக ஐஸ் வாட்டர் ஃபேஷியல் முறையை பின்பற்றுகின்றனர். சில பாலிவுட் நடிகைகள் கூட மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் வாட்டர் ஃபேஷியலைப் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் என்ன ஆகும் என்பதை இங்கே காண்போம்.

ஐஸ் வாட்டர் ஃபேஷியல் என்றால் என்ன?

ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் துண்டுகளை போட்டு, அதில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்றவும். ஐஸ் சிறிது உருகிய பின் அதில் முகத்தை வைத்து, சில நொடிகள் கழித்து வெளியே எடுக்கவும். இது பல முறை மீண்டும் செய்யப்பட வேண்டும். இப்படி செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

மேக்-அப் நீண்ட காலம் நீடிக்கும்

ஐஸ் வாட்டரை ஃபேஷியலுக்கு பயன்படுத்தினால், உங்கள் மேக்கப் நீண்ட நேரம் நீடிக்கும். கொரிய அழகு குறிப்புகளில் பெரும்பாலும் ஐஸ் வாட்டர் ஃபேஷியல் அடங்கும். உங்கள் முகத்தை 3 முதல் 4 நிமிடங்கள் ஐஸ் தண்ணீரில் நனைத்து, மென்மையான துண்டுடன் மென்மையாக துடைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிவப்பு புள்ளிகளை குறைக்கும்

குளிர்ந்த நீரில் முகத்தை வைப்பதன் மூலம், தோலில் உள்ள சிவப்பு புள்ளி பிரச்னை குறைகிறது. மேலும் இந்த செயல்முறை இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக தடுப்பதன் மூலம் கண்களுக்கு கீழ் வீக்கத்தை குறைக்கிறது.

இதையும் படிங்க: சருமப் பொலிவு அதிகரிக்க வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்வது எப்படி?

வீக்கத்தைக் குறைக்கிறது

சூரிய ஒளியின் காரணமாக தோல் அடிக்கடி சிவத்தல், அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த ஐஸ் வாட்டர் செயல்முறை இரத்த நாளங்களை சுருக்கி, அதன் மூலம் தோல் பிரச்னைகளை குறைக்கிறது. ஐஸ் வாட்டர் ஃபேஷியல் தோல் சிவத்தல், முக வீக்கம் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்னைகளை குறைக்கிறது என்று கூறப்படுகிறது.

துளைகளை இறுக்கமாக்குகிறது

ஐஸ் வாட்டர் ஃபேஷியலைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பெறும் மற்றொரு முக்கிய நன்மை என்னவென்றால், இது துளைகளை இறுக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், சருமம் மிருதுவாகி, அழுக்கு மற்றும் எண்ணெய் தேங்குவது குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், ஓபன் ஃபோர்ஸ் பிரச்சனை படிப்படியாக குறையும்.

அழகு சாதனப் பொருட்களின் உறிஞ்சுதலை அதிகரிக்கிறது

ஐஸ் வாட்டர் சருமத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. சீரம், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் முகமூடிகள் போன்ற தோல் பராமரிப்பு பொருட்கள் திறம்பட செயல்பட மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், சருமத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து, அதன் விளைவாக சருமம் பொலிவடையும்.

Read Next

Pimple Treatment: பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபட உதவும் ஆயுர்வேத வைத்தியம்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்