ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் வரும்!

  • SHARE
  • FOLLOW
ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் வரும்!

பக்கவாதத்தால் இறப்பவர்களில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களே 50 சதவீதமாக இருக்கிறது. இதற்கான காரணங்களை என்ன என்பது குறித்து இந்த பதிவை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்வோம்.

இதையும் படிங்க: உணர்திறன் வாய்ந்த பற்களை பராமரிப்பதற்கான 5 வழிகள் இங்கே…

பக்கவாதம் குறித்த ஆய்வு முடிவுகள்

பக்கவாதம் பிரச்சனை என்பது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. இது 2050 ஆம் ஆண்டில் 9.7 மில்லியனை எட்டும் என கூறப்படுகிறது. இந்த நோயின் ஆபத்து 2050 ஆம் ஆண்டளவில் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், புகைபிடித்தல் மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 795,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிக்கின்றன.

பக்கவாதம் எப்படி ஏற்படும்?

மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியாக வழங்கப்படாதபோது பக்கவாதம் பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரத்த நாளங்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது மற்றும் அவை பலவீனமாகின்றன.

இதன் காரணமாக பக்கவாதம் பிரச்சனை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையை புறக்கணிப்பதன் மூலம், பல நேரங்களில் நரம்புகள் முற்றிலும் சேதமடைகின்றன. இறப்பு விகதமும் ஏற்படுகின்றன.

பக்கவாதத்தை தவிர்க்கும் வழிகள்

  1. பக்கவாதத்தை தவிர்க்க வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டியது முக்கியம்.
  2. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதோடு உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவையை செய்யுங்கள்.
  3. சிகரெட் மற்றும் மதுவை முற்றிலும் கைவிட வேண்டும்.
  4. உடல் செயல்பாடுகள் ஈடுபடுவதன் மூலமும் பக்கவாதத்தை தவிர்க்கலாம்.
  5. எண்ணெய், நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவர்க்கவும்.

Image Source: FreePik

Read Next

PCOS பிரச்சினை உள்ளவர்கள் இந்த கசாயத்தை குடியுங்க; வெறும் 30 நாளில் நல்ல மாற்றம் தெரியும்!

Disclaimer

குறிச்சொற்கள்