Doctor Verified

Bowel Cancer: சைலண்ட் கில்லரான குடல் புற்றுநோயை தடுப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Bowel Cancer: சைலண்ட் கில்லரான குடல் புற்றுநோயை தடுப்பது எப்படி?


2023ம் ஆண்டு நிலவரப்படி, குடல் புற்றுநோய் ஒரு சைலண்ட் கில்லராக பரவி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 100,000 பெண்களில் 5.1 சதவீத பேரையும், 100,000 ஆண்களில் 7.2 சதவீத பேரையும் பாதித்துள்ளது. குடல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை புற்றுநோயாகும், பெருங்குடல், மலக்குடல் இவை இரண்டும் பெரிய குடலின் பகுதியாகும். இந்த பிரச்சனை உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 9,16,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…

குடல் புற்றுநோய் என்றால் என்ன?

பெருங்குடல் அல்லது மலக்குடலின் உட்புறத்தில் புற்றுநோய் அல்லாத பிரச்சனையாக (பாலிப்) தொடங்கி, காலப்போக்கில் குடல் புற்றுநோய் ஏற்படுகிறது. பாலிப் புற்றுநோயாக மாறி, உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவக்கூடிய வீரியம் மிக்க கட்டிகளாக வளரும். சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், குடல் புற்றுநோயை ரோபோடிக்-உதவி அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போன்ற முறைகள்மூலம் எளிதாகக் குணப்படுத்த முடியும், இது புற்றுநோயின் நிலையைப் பொறுத்தது.

குடல் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணங்கள்

குடல் புற்றுநோயின் ஒரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், புற்றுநோய் ஏற்கனவே உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவியிருக்கும் நிலைவரை அதன் அறிகுறிகள் மிகவும் புலப்படுவதில்லை. இருப்பினும், ஒருசில அறிகுறிகள்மூலம் இதனைக் கண்டறியலாம். அதாவது, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலத்தில் இரத்தம், வயிற்று வலி அல்லது தசைப்பிடிப்பு, விவரிக்க முடியாத எடை இழப்பு மற்றும் சோர்வு போன்றவைகள் இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

குடல் புற்றுநோய் (பாலிப்) என்பது அழற்சி குடல் நோய் (அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி அல்லது கிரோன்ஸ் நோய் போன்றவை) ஆகும். சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் குடல் புற்றுநோயை உருவாக்கும்.

இருப்பினும், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலர் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்காமல் இருக்கலாம், வழக்கமான ஸ்கிரீனிங் முறை முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்க்ரீனிங் முறை அவசியம்

குடல் புற்றுநோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று வழக்கமான ஸ்கிரீனிங் முறை ஆகும். ஸ்கிரீனிங் சோதனைகள் முன்கூட்டிய பாலிப்கள் அல்லது ஆரம்ப நிலை குடல் புற்றுநோயைக் கண்டறிய உதவும். குடல் புற்றுநோய்க்கான மிகவும் பொதுவான ஸ்கிரீனிங் முறையானது ஒரு கொலோனோஸ்கோபி ஆகும், இது ஒரு டியூப் உள்ளடக்கியமுறையாகும். இது மலக்குடலில் ஒரு கேமரா செருகப்பட்டு, பெருங்குடல் மற்றும் மலக்குடலின் அசாதாரணங்களை ஆய்வு செய்கிறது.

ஸ்க்ரீனிங் விருப்பங்களில் மலத்தில் உள்ள மறைந்த இரத்த பரிசோதனைகள் மற்றும் மல டிஎன்ஏ சோதனைகள் ஆகியவை அடங்கும். 45 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகள் குடல் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் முறைக்கு உட்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

இருப்பினும், அதிக ஆபத்து உள்ளவர்கள் (குடும்ப புற்றுநோயின் குடும்ப வரலாறு போன்றவை) முந்தைய வயதிலேயே ஸ்கிரீனிங்கைத் தொடங்க வேண்டும் அல்லது அடிக்கடி ஸ்கிரீனிங் செய்ய வேண்டும்.

குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை விருப்பங்கள் என்பது நோயறிதலின் போதான புற்றுநோயின் நிலையைப் பொறுத்து மாறுபடும், இது ஸ்கிரீனிங்கின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

குடல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்:

ரோபோடிக் உதவி அறுவை சிகிச்சை

ஆரம்ப நிலை குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைமூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படலாம், மேம்பட்ட நிலைகளில் கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போன்ற கூடுதல் சிகிச்சைகள் தேவைப்படலாம். பல்வேறு நன்மைகள் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில், குடல் புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான ஒரு புதுமையான விருப்பமாக ரோபோடிக் உதவி அறுவை சிகிச்சை வெளிப்பட்டுள்ளது.

டா வின்சி போன்ற மேம்பட்ட அறுவை சிகிச்சை அமைப்புகளுடன் கூடிய ரோபோடிக்-உதவி அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஒரு பகுதியில் மட்டுமே இருக்கும்போது, அதாவது ஆரம்ப நிலை புற்றுநோய்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ரோபோ-உதவி அறுவை சிகிச்சை இலக்கைத் துல்லியமாக அடைய பெருமளவு உதவுகிறது, இந்த அறுவைசிகிச்சை சிறிய கீறல்கள் உடன் துல்லியமான வைத்திய முறைகளைக் கையாள உதவுகிறது, இது சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்குச் சேதம் விளைவிக்கும் அபாயத்தையும் குறைக்கும்.

புற்றுநோய் நிணநீர் முனைகளில் பரவினால், ரோபோ-உதவி அறுவை சிகிச்சை கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போன்ற கூடுதல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சையானது கட்டியைக் குறைக்க உதவுகிறது, அதோடு அறுவை சிகிச்சையானது கட்டியின் அருகில் இருக்கும் திசுக்களையும் அகற்ற உதவுகிறது. அறுவைசிகிச்சை தளத்தின் பெரிதாக்கப்பட்ட ஸ்க்ரீனிங், டா வின்சி அமைப்புடனான 3D பார்வை, ரோபோ அமைப்புச் சிகிச்சை முறையை மிகவும் எளிதாக்குகிறது.

இந்த அறுவைசிகிச்சை முறையானது அணுகல் மற்றும் துல்லியம் பற்றிய சிக்கலைத் தீர்க்க உதவுகிறது. குடல் புற்றுநோய் உலகளவில் மூன்றாவது பொதுவான புற்றுநோயாக இருந்தாலும், இது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். இருப்பினும், குடல் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான இன்றியமையாத வழி, பிரச்சனைபற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் வழக்கமான ஸ்கிரீனிங்கின் அவசியத்தை அதிகரிப்பதாகும்.

இதையும் படிங்க: Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

ஸ்கிரீனிங் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும். இதன்மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். அதேபோல் நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று சாதாரண வாழ்க்கை வாழ முடியும்.

Image source: Freepik

Read Next

Esophageal Cancer Treatment: உணவுக்குழாய் புற்றுநோய் வர அடிப்படைக் காரணங்கள் என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்