
$
Earache:வெயில் காலத்தின் வெக்கையில் இருந்து விடுதலை தரும் விதமாக மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலும் இந்த காலக்கட்டத்தில் நாம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை சளி, இருமல், காய்ச்சல் ஆகும். சளி காரணமாக பலருக்கும் காது வலி மற்றும் காது அடைப்பு பிரச்சனை வரக்கூடும். பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனை இரவில் தூங்கும் போது காணப்படுகிறது.
சளி காரணமாக காதுகள் வலி மற்றும் அடைப்பு பிரச்சனையை சரிசெய்ய என்ன செய்வது என பலருக்கும் தெரியாது. இந்த பிரச்சனையை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரிசெய்யலாம். அது என்ன என்று பார்க்கலாம்.
மழைக்காலத்தில் வரும் காது வலியை தீர்க்க என்ன செய்வது?
சளி காரணமாக காது வலி அல்லது அடைப்பு பிரச்சனை ஏற்பட்டால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம்.
    பூண்டு எண்ணெய்
காது அடைப்பு பிரச்சனை ஏற்பட்டால் பூண்டு எண்ணெயை பயன்படுத்தலாம். இதற்கு, 2 முதல் 3 தேக்கரண்டி பூண்டு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக சூடாக்கவும். இப்போது இந்த எண்ணெயை ஆறவிடவும். எண்ணெய் சிறிது ஆறியதும் பருத்தியால் தொட்டு காதில் வைக்கவும். இதன் மூலம் காது அடைப்பு பிரச்சனையை குறைக்கலாம்.
நீராவி உபயோகிக்கிலாம்
சளி மற்றும் இருமல் மூலம் காதுகள் அடைபட்டால் நீராவி பிடிப்பது உங்களுக்கு நல்ல நிவாரணம் தரும். இதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். அதன் பிறகு நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், உங்கள் தலையில் ஒரு டவலை வைத்து நன்கு மூடி நீராவியை உள்ளிழுக்கவும். இது அடைபட்ட காதுகளை திறக்கும். அதுமட்டுமின்றி சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். நீராவி நீரில் மஞ்சள் உள்ளிட்ட ஆயுர்வேத பொருட்களை சேர்க்கலாம்.
வெதுவெதுப்பான நீர் உபயோகிக்கலாம்
காது அடைப்பு பிரச்சனை ஏற்பட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம். இதற்கு சில துளிகள் வெதுவெதுப்பான நீரை காதில் போடவும். இதற்குப் பிறகு, உங்கள் கழுத்தை சிறிது வளைத்து, காதில் இருந்து தண்ணீரை எடுக்கவும். இப்படி செய்தால் காது அடைப்பு பிரச்சனை குறையும். இது தவிர, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் உங்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.
கொட்டாவி விடுவதாலும் தீரும்
காது அடைப்பு பிரச்சனையை குறைக்க கொட்டாவி விடுங்கள். இது காதுகளில் காற்றை நிரப்புவதன் மூலம் கேட்கும் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. மேலும், கொட்டாவி விடுவதால் காதுகளில் அழுத்தம் ஏற்படும் போது, காதுகள் அடைப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
தேயிலை மர எண்ணெய்
காது அடைப்பு ஏற்பட்டால் தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீங்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். அதைப் பயன்படுத்த, தேயிலை மர எண்ணெயை சிறிது சூடாக்கவும். இப்போது அதை உங்கள் காதில் வைத்து சிறிது நேரம் விட்டு விடுங்கள். இது காது அடைப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
காதுகள் அடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபட, சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களின் உதவியை நீங்கள் நாடலாம். அதேபோல் உங்கள் காதில் வேறு ஏதேனும் தீவிர பிரச்சனை இருந்தால் இதுபோன்ற வீட்டு வைத்தியங்கள் எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவர் உதவியை நாடவும்.
Image Source: FreePik
Read Next
Vitamin D Deficiency: சூரிய ஒளியைத் தவிர வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யும் சூப்பர் வழிகள் இதோ!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version