
$
Milk FacePack: சுட்டெரிக்கும் வெயில், திடீர் மழை காரணமாக சருமம் பல்வேறு நிலைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டியது மிக முக்கியம். சருமம் பதனிடுதல், சிவத்தல் போன்ற பிரச்சனை கோடையில் ஏற்படும். சரும வறட்சி போன்ற பிரச்சனை மழை காலத்தில் ஏற்படும்.
சருமத்திற்கு முறையாக கவனிப்பு தேவை. இல்லையென்றால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் பெரிதாக இருக்கும். குறிப்பாக பருக்கள், முகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் பெரிதளவு தோன்றும். முகப்பரு கரும்புள்ளியாக மாறி நீண்ட நாட்களுக்கு உங்கள் அழகை கெடுக்கும்.
சரும பாதிப்பை குறைக்க வழிகள்
சருமத்தை பராமரிக்க சந்தையில் கிடைக்கும் பல விலையுயர்ந்த பொருட்களை பலர் வாங்கி பயன்படுத்துவது உண்டு. ஆனால் இதனால் பலருக்கும் பலன்கள் கிடைப்பதில்லை.
சிலருக்கு பக்கவிளைவுகளும் ஏற்படும். சருமத்தை பராமரிக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களே சிறந்தவையாக இருக்கும். முகத்திற்கு பாலில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் மிக உகந்ததாக இருக்கும்.
பால் ஃபேஸ் பேக்குகளை செய்வது எப்படி?

பால் மற்றும் மஞ்சள்
மஞ்சள் தூளை பாலில் கலந்து முக்ததில் தடவலாம். இதற்கு 1-2 ஸ்பூன் பாலை எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து உங்கள் முகத்தில் தடவலாம். 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும். இது உங்கள் முகத்தில் கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவும்.
பால் மற்றும் தேன்
பாலில் தேன் கலந்து முகத்தில் தடவலாம். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து உங்கள் முகத்தை நன்கு கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தடவலாம். தேன் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும், இது வறண்ட மற்றும் உயிரற்ற சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது.
பால் மற்றும் வெள்ளரி சாறு
வெள்ளரிச் சாற்றை பாலுடன் கலந்து முகத்தில் தடவலாம். இதற்கு நீங்கள் 2 ஸ்பூன் பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறு சேர்க்கவும். இப்போது அதை உங்கள் முகத்தில் தெளிக்கவும் அல்லது ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தவும். இந்த ஃபேஸ் பேக்கை ஒரு நாளைக்கு 1-2 முறை தடவலாம்.
வெள்ளரி சாறு சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. பால் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சருமத்தில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது.
பால் மற்றும் அலோ வேரா ஜெல்
பால் மற்றும் கற்றாழை ஜெல் இரண்டும் தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த ஃபேஸ் பேக் முகத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இது தோல் கறைகள், முகப்பரு, சிவத்தல் மற்றும் எரிச்சல் ஆகியவற்றை தணிக்க உதவும்.
தோல் பதனிடுவதை நீக்க இந்த ஃபேஸ் பேக்கையும் பயன்படுத்தலாம். இதற்கு கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் பாலில் கலக்கவும். இதை உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.
Image Source: FreePik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version