அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்.. காரணமும்.. தீர்வும்..

இன்றைய தம்பதிகள் மத்தியில் விவாகரத்து அதிகரித்து வருவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும், ஆரோக்கியமான உறவை உருவாக்கவும், நீடிக்கவும் உதவும் பயனுள்ள வழிகளை பற்றியும் இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்.. காரணமும்.. தீர்வும்..


ஒருகாலத்தில், திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் தாங்கும் பந்தமாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று விவாகரத்து ஒரு சாதாரண வார்த்தையாகி விட்டது. சமீபத்தில், பிரபல நடிகை ஹன்சிகா மோட்வானியின் திருமணமும் குறுகிய காலத்திலேயே முறிவடைந்தது என்பது இதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

விவாகரத்து அதிகரிக்கும் முக்கிய காரணங்கள்

தொடர்பின் குறைபாடு

இன்று ஜோடிகளிடையே நேருக்கு நேர் பேசும் பழக்கம் குறைந்து, மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்கள் அதிக நேரத்தைப் பிடித்துக்கொள்கின்றன. மனதிலிருக்கும் பிரச்சனைகள் பகிரப்படாததால், மனஅகலம் உருவாகிறது.

எதிர்பார்ப்புகளின் அதிகரிப்பு

காதல் காலத்தில் உருவான கனவுகள் திருமண வாழ்க்கையில் நிறைவேறாத போது, விரக்தி உருவாகிறது. சிறிய விஷயங்களிலும் பெரிய வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.

பொருளாதார அழுத்தம்

வேலை, செலவு, கடன் போன்ற காரணங்களால் மன அழுத்தம் அதிகரித்து, அது உறவுகளிலும் பிளவை ஏற்படுத்துகிறது.

main

தனிப்பட்ட சுதந்திரத்தின் விருப்பம்

சிலர் திருமணத்திற்குப் பிறகும், முழுமையான சுயாதீனத்தை விரும்புகிறார்கள். இதனால் ஒருவருக்கொருவர் இடைவெளி அதிகரிக்கிறது.

நம்பிக்கை குறைவு

திருமண வாழ்க்கையில் நம்பிக்கையின் குறைவு, சந்தேகங்கள், பொறாமை ஆகியவை உறவை விரைவாக முறிக்கும் முக்கிய காரணங்கள்.

ஹன்சிகா விவாகரத்து

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஹன்சிகா மோட்வானி, மிகுந்த வைபவத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போது விவாகரத்து செய்துள்ளதாக செய்திகள் பரவுகின்றனர். இது உணையா என்பது அவர்கள் கூறினால் மட்டுமே தெரியும்.

விவாகரத்து, “நட்சத்திரங்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களும் சந்திக்கும் சவால்கள்” என்பதை நிரூபிக்கிறது. புகழ், பணம், சுகவாழ்வு இருந்தாலும், ஆரோக்கியமான உறவை பராமரிக்க தேவையான நம்பிக்கை, புரிதல், தொடர்பு இல்லையெனில், அது நீடிக்காது.

மேலும் படிக்க: கணவன் மனைவி சண்டை, குடும்ப சண்டைக்கு பெரும்பாலும் இந்த 5 விஷயம்தான் காரணம்!

ஆரோக்கியமான உறவை பராமரிக்கும் குறிப்புகள்

தொடர்பில் இருங்கள்

தினசரி குறைந்தது சில நிமிடங்களாவது ஒருவருக்கொருவர் உண்மையான உரையாடலைப் பகிருங்கள்.

சிறிய விஷயங்களை பெரிதாக்காதீர்கள்

தவறுகள் யாரிடமும் நிகழலாம். அவற்றை மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பகிரப்பட்ட பொறுப்புகள்

வீட்டுப்பணி, செலவுகள், குழந்தை பராமரிப்பு – இவற்றை இருவரும் சமமாக மேற்கொள்ளுங்கள்.

marrieafdmsdk

மதிப்பும் மரியாதையும்

துணையைப் பற்றிய கேலி, அவமதிப்பு – இவை உறவை உடைக்கும். பரஸ்பர மரியாதை உறவை காப்பாற்றும்.

தரமான நேரம்

வேலை, பிஸியான வாழ்க்கை இடையே கூட, வார இறுதிகளில் அல்லது மாதத்திற்கு ஒருமுறை சேர்ந்து சுற்றுலா அல்லது உணவு அனுபவங்களை பகிருங்கள்.

நம்பிக்கை மற்றும் திறந்த மனம்

சந்தேகங்களை விட, திறந்த மனதுடன் உரையாடுங்கள்.

மனநல ஆலோசனையின் அவசியம்

உறவில் பிரச்சனைகள் ஆரம்பிக்கும்போதே, குடும்ப நண்பர்கள் அல்லது மனநல ஆலோசகர் உதவியை நாடுவது நல்லது. சமுதாயத்தில் இதை ‘சராசரி’ விஷயமாக ஏற்றுக்கொள்வது, திருமண முறிவுகளை குறைக்கும்.

இறுதியாக..

திருமணம் என்பது இரண்டு உயிர்கள் மட்டுமல்ல, இரண்டு மனங்களின் இணைப்பு. ஹன்சிகா விவாகரத்து போன்ற சம்பவங்கள், பிரபலங்களாக இருந்தாலும் உறவுகளை பாதுகாக்கும் அடிப்படை விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை என்பதை நினைவூட்டுகிறது. ஆரோக்கியமான தொடர்பு, பரஸ்பர மரியாதை, நம்பிக்கை – இவை மூன்றும் இருந்தால், எந்த உறவும் நிலைத்து நிற்கும்.

Read Next

மனைவியின் வெற்றியை பொறுக்க முடியாத கணவர்கள்.. ஈகோவை தாண்டி உள்ள காரணங்கள்..

Disclaimer

குறிச்சொற்கள்