Doctor Verified

மழைக்காலத்தில் பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சனை வந்தால் என்ன செய்வது? மருத்துவர் தரும் விளக்கம்

மழைக்காலங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதில், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதும் அடங்குகிறது. அதன் படி, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மழைக்காலத்தில் ஏற்படும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மழைக்காலத்தில் பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சனை வந்தால் என்ன செய்வது? மருத்துவர் தரும் விளக்கம்

மழைக்காலம் என்றாலே குளிர்ந்த காற்று மற்றும் மழையுடன் நிம்மதியைத் தரும். அதே சமயம், இது பல்வேறு நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும் காலமாகவும் அமைகிறது. ஏனெனில், மழைக்காலத்தில் உடலில் இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இளம் குழந்தைகளும், பெரியவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறே, பிறந்த குழந்தைகளும் ஏராளமான உடல்நல சவால்களைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்குப் பின்னால், பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தொடர்ந்து அதிகரிக்கும் ஈரப்பதம், திடீர் வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சி போன்றவை இந்த பருவத்தில் சுவாசப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


முக்கியமான குறிப்புகள்:-


அதிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாததால், சிறிதளவு கவனக்குறைவு கூட இருமல், சளி, மூச்சுத் திணறல், மார்பு வலி, சளி படிதல் அல்லது நிமோனியா போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, மழைக்காலத்தின் போது குழந்தை சுவாசப் பிரச்சினைகளை சந்தித்தால், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மருத்துவர்களின் கூற்றுப்படி, தூய்மை, வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் கவனிப்பு போன்றவை பெரும்பாலும் சுவாசப் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.

மழைக்காலத்தின் போது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டால் என்ன செய்வது லக்னோவின் டஃபெரின் மருத்துவமனையின் மூத்த குழந்தை மருத்துவர் டாக்டர் சல்மான் கான் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: புதிதாக பிறந்த குழந்தையின் கண்களில் நீர் வடியுதா? நீங்க செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதை எப்படி தடுப்பது?

சுத்தமான அறை & ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவது

  • மழைக்கால நாட்களில், அறையில் ஈரப்பதம் மற்றும் தூசி வேகமாக அதிகரிக்கும். இதன் காரணமாக, குழந்தையின் நுரையீரல் சளியால் அடைக்கப்படுகிறது.
  • தினமும் அறையை சுத்தம் செய்வது, ஜன்னல்களைத் திறந்து வைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.
  • ஈரப்பதம் 50-60% க்கு மேல் இருந்தால், ஈரப்பதமூட்டி அல்லது ஏர் கண்டிஷனரை இயக்கலாம். இது உங்கள் குழந்தைக்கு சுவாசிப்பதை எளிதாக்கும்.

புகை மற்றும் கடுமையான நாற்றங்களைத் தவிர்ப்பது

  • வீட்டில் ஊதுபத்திகள், தூபக் குச்சிகள், வாசனை திரவியங்கள் அல்லது சமையலறைப் புகை பரவினால், அது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
  • குழந்தையைச் சுற்றி அத்தகைய புகையையோ அல்லது கடுமையான வாசனை திரவியங்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • புகைபிடித்தல் செய்பவரை குழந்தையிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும்.

சரியான வெப்பநிலை மற்றும் ஆடைகளை பராமரிப்பது

  • மழைக்காலங்களில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு வியர்வையை உறிஞ்சக்கூடிய லேசான பருத்தி ஆடைகளை உடுத்தலாம்.
  • குழந்தைக்கு குளிர்ச்சியோ அல்லது வெப்பமோ ஏற்படாமல் இருக்கவும், அவரது சுவாசம் இயல்பாக இருக்கவும் அறை வெப்பநிலையை 24-26°C ஆக வைத்திருக்கலாம்

ஆறுதலுக்காக நீராவி உள்ளிழுப்பது

  • குழந்தை மூச்சுத்திணறல் அல்லது அது கனமான சத்தத்தை எழுப்பினால், மருத்துவரை அணுகிய பிறகு லேசான நீராவியைக் கொடுப்பது நன்மை பயக்கும்.
  • நீராவியைக் கொடுப்பது சளியை தளர்த்தி சுவாசிப்பதில் நிவாரணம் அளிக்கிறது.
  • புதிதாகப் பிறந்த குழந்தையை வெதுவெதுப்பான நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தின் அருகே பிடித்துக் கொண்டு உட்கார வைக்கலாம். எனினும், குழந்தை நேரடியாக நீராவிக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு தாய்ப்பால் கொடுப்பது

  • புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது முதல் மற்றும் மிக முக்கியமான மருந்து ஆகும்.
  • மழைக்காலங்களில் குழந்தையை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க, அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
  • தாய்ப்பாலானது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் உங்க குழந்தைக்குத் தரும் உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொடுப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவது

  • குழந்தை சுவாசம் எடுப்பது வேகமாகிவிட்டால், அவரது விலா எலும்புகள் வீங்கிவிட்டால் அல்லது அவரது உதடுகள் நீல நிறத்தில் தோன்றினால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
  • சுய மருந்து செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவரை அணுகிய பின்னரே நெபுலைசரைப் பயன்படுத்தலாம்.

தடுப்பூசி மற்றும் சுகாதாரத்தை கவனித்துக் கொள்வது

  • குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவது, அவர்களை உயிருக்கு ஆபத்தான நுரையீரல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
  • எனவே, அனைத்து தடுப்பூசிகளையும் சரியான நேரத்தில் செய்து கொள்ள வேண்டும்.
  • உங்கள் கைகளைக் கழுவுங்கள், குழந்தையைத் தொடுவதற்கு முன்பு வெளியாட்களிடம் கைகளைக் கழுவச் சொல்ல வேண்டும்.

மழைக்காலங்களில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சுவாசப் பிரச்சினைகளை குறைத்து மதிப்பிடுவது தவறு. எனவே, பெற்றோர்கள் சுகாதாரம், சரியான வெப்பநிலை, ஊட்டச்சத்து போன்றவற்றைப் பராமரிப்பதுடன், மருத்துவர் பரிந்துரைக்கும் நடைமுறைகளைப் பின்பற்றினால், பெரும்பாலான பிரச்சினைகளை எளிதில் தடுக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: தாய்மார்களே! தூங்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கணுமா? டாக்டர் தரும் டிப்ஸ் இதோ

Image Source: Freepik

Read Next

World Prematurity Day 2025: உலக குறைப்பிரசவ தினம் ஏன் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 22, 2025 21:48 IST

    Published By : கௌதமி சுப்ரமணி