History and significance of internationl women's day: சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு 1909 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி பிப்ரவரி 28 அன்று நியூயார்க்கில் தேசிய மகளிர் தினத்தை நிறுவியது. டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற உழைக்கும் பெண்களுக்கான இரண்டாவது சர்வதேச மாநாட்டில், வழக்கறிஞர் கிளாரா ஜெட்கின், பெண்களின் சம உரிமைகளுக்கான கோரிக்கைகளைப் பெருக்க ஒரு சர்வதேச மகளிர் தினத்தை முன்மொழிந்தார்.

சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு
சர்வதேச மகளிர் தினத்தின் முதல் கொண்டாட்டம் மார்ச் 1911 இல் நடைபெற்றது. பின்னர் தேதி அதிகாரப்பூர்வமாக 1913 இல் மார்ச் 8 என நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை 1975 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினத்தை அறிவித்தது.
பின்னர் 1977 ஆம் ஆண்டில் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. இது பெண்களின் உரிமைகள் மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தைக் கொண்டாடும் நாளாக அங்கீகரிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மார்க் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளின் முக்கியத்துவம்..
சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்குமான நோக்கில் அமைந்துள்ளது. சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளில் சம பங்களிப்பை வாதிடுவதன் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக இது செயல்படுகிறது. மேலும் இது அனைவரும் சமம் என்பதை நிலை நிறுத்துகிறது.